என் மலர்
சேலம்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு நே யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
- வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு யோகா பயிற்றுனர் அருள் பயிற்சி அளித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு நே யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு யோகா பயிற்றுனர் அருள் பயிற்சி அளித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் பங்கேற்று டாக்டர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புறநோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். வாழப்பாடி அரிமா சங்கம் சார்பில், யோகா பயிற்சி கையேடுகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
- தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணா புரத்தை அடுத்த கரட்டுகாடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாரம் நடந்த ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.8,188 முதல் ரூ.8,690 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.8010 வரை விலை போனது. இரு முறை நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 80 குவிண்டால் அளவிலான தேங்காய் கொப்பரைகள் விற்பனையானது.
தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது. இதனை சுற்றுப்புற விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த நிலக்கட லையை எந்தவித கமிஷன் மற்றும் மறைமுக கட்டணம் ஏதுமின்றி விற்பனை செய்திகொள்ளுமாறு வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு கார் டிரைவர் தப்பி சென்று விட்டார்.
- சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே நங்கவள்ளியில் பட்டுச்சேலை கடை நடத்தி வருபவர் செல்வகுமார். இந்த கடைக்கு பட்டு சேலை எடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் சொகுசு காரில் வந்தனர். அவர்கள் செல்வகுமார் கடைக்குள் சென்று அங்கு பட்டு புடவைகள் ஒவ்வொன்றாக எடுத்து மாடல் பார்த்தனர்.
அவற்றின் விலையை கேட்டறிந்தபடி ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல் வசதியானவர்களாக பாசாங்கு காட்டிக் கொண்டு விலை உயர்ந்த பட்டு சேலை கொடுக்கும் படி அவர்கள் கேட்டனர். அதன்படி விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் ஒவ்வொன்றாக அவர்களிடம் காண்பிக்கப்பட்டது.
அப்போது ஒரு பெண் மட்டும் வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்ததை கண்ட கடை உரிமையாளர் சந்தேகம் அடைந்து கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது அந்த பெண் பட்டுச்சேலையை உள்ளாடையில் மறைத்து வைத்து வெளியே நிறுத்தி வைத்த சொகுசு காரில் திருடி வைப்பது தெரியவந்தது.
உடனடியாக கடை உரிமையாளர் சந்திரசேகர் அந்த 2 ஆந்திர மாநில பெண்களையும் பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போது வெளியே இருந்த சொகுசு காரில் டிரைவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பி சென்று விட்டார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் பட்டு சேலை திருடிய 2 பெண்களையும் அழைத்து வந்து ஒப்படைத்து புகார் கொடுத்தார்.
இதையடுத்து நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பெண்களிடம் விசாரித்தபோது ஆந்திரா மாநிலம் இங்கலூர் பேட்டையை சேர்ந்த ரந்தின (வயது 35), புவலட்சுமி (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. சொகுசு காரில் தப்பி சென்ற டிரைவர் குறித்தும் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட ரந்தின, புவலட்சுமி ஆகியோரை கைது செய்து இதுபோல் வேறு எங்கெல்லாம் குறி வைத்து பட்டுச் சேலைகளை திருடினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க மாநகர் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
- நேற்று இரவு மழையை பொருட்படுத்தாமலும் மக்கள் ஜவுளி எடுக்க அதிகளவில் வந்திருந்தனர்.
சேலம்:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சேலம் மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க மாநகர் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவில் பொதுமக்கள் ஜவுளி எடுக்க வந்திருந்தனர். இதனால் சேலம் முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ்நிலையம், பேர்லேண்ட்ஸ் பகுதி உள்பட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது.
நேற்று இரவு மழையை பொருட்படுத்தாமலும் மக்கள் ஜவுளி எடுக்க அதிகளவில் வந்திருந்தனர். அதே போல் இன்று காலை முதலே ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் தீவிர ஏற்பாடு செய்து இருந்தனர்.
கண்காணிப்பு
மேலும் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
நேரம் செல்ல, செல்ல இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் நகை கடைகள், இனிப்பு கடை களிலும் கூட்டம் அதி கரித்து காணப்பட்டது. ஜவுளி எடுக்க வந்தவர்களால் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளிலும் கூட்டம் அலைமோதியது.
- பருவ மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தேவூர் அருகே காவேரிபட்டி மதிக்கிழான் திட்டு, படித்துறை, அண்ணமார் கோவில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மூழ்கடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
- பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கும் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு அரக்கோணம் பகுதியில் உள்ள 12 பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பருவ மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தேவூர் அருகே காவேரிபட்டி மதிக்கிழான் திட்டு, படித்துறை, அண்ணமார் கோவில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மூழ்கடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
இதையடுத்து தேவூர் அருகே சரபங்கா நதி காவிரி ஆற்றில் கலக்கும் இடமான அண்ணமார் கோவில் பாலம் மற்றும் காவேரிபட்டி காவிரி படித்துறை, மதிக்கிழான் திட்டு கிராமம் மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கும் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு கமாண்டர் பிரதீஷ் மற்றும் அனிஸ் ஆகியோர் தலைமையில் அரக்கோணம் பகுதியில் உள்ள 12 பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது சேலம் தேசிய பேரிடர் குழு வட்டாட்சியர் வள்ள முனியப்பன், சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, தேவூர் பேரிடர் மேலாண்மை குழு லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்முருகன், கமலக்கண்ணன், கருப்பண்ணன், சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். மேற்கண்ட இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- பொதுத்தேர்வில் மனஅழுத்தத்தை போக்கி மனவலிமையுடன் தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
- வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு குழந்தை திருமணங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.
இதனை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் மற்றும் இவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு சமூக வாழ்வியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'மாண்புமிகு மாணவிகள்' திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் தொடங்கி வைத்து பேசுகையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும், எதிர்கால வாழ்க்கை முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், செல்வம், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி ஆகியோர் பேசினர். மேலும் மாணவிகளுக்கான சுய ஒழுக்கம், தற்பாதுகாப்பு, தன்நிலை உணர்தல், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர். இதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாமு, பெண் முன்னேற்றத்திற்கான பயணம் என்ற தலைப்பில் பேசும்போது, மாதா, பிதா, குரு, தெய்வம் என பெரியோர்கள் கூறியபடி தாய், தந்தையருக்கு முதலில் மரியாதை அளிக்க வேண்டும். உங்கள் மூளையில் உள்ள அசுத்த எண்ணங்களை அகற்றி நல்லறிவை வழங்கும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். தேர்வு காலம் நெருங்கி வருவதால், நவம்பர் முதல் ஏப்ரல் வரை நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றார்.
பின்னர் தனது உருக்கமான குரலால் தாமு ஒவ்வொன்றாக பெற்றோர் செய்யும் தியாகங்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாப்பது தொடர்பாகவும், மரியாதை தருவது தொடர்பாகவும் மாணவிகளிடையே தாமு உருக்கமாக பேசிய போது, அரங்கத்தில் இருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் கண் கலங்கினர்.
மேலும் அவர், பொதுத்தேர்வில் மனஅழுத்தத்தை போக்கி மனவலிமையுடன் தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திரைப்பட நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சை கேட்டு மாணவிகள் மனம் விட்டு தேம்பி, தேம்பி அழுதனர். கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்த மாணவிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மாணவிகள் தேம்பி, தேம்பி அழுத வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்கள், போலீசார் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
மாண்புமிகு மாணவி திட்டத்தில் நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதியுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரிஒழுங்காற்று குழு உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு இன்னும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
- மாநகரின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
- புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது.
சேலம் மாநகர் பகுதியில் நேற்று காலை முதலே மேகமூட்டம் நிலவியது. பின்னர் திடீரென சாரல் மழை பெய்தது. பின்னர் மதியம் 2 மணியளவில் பலத்த மழையாக கொட்டியது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
மேலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. அதோடு காய்கறி மார்க்கெட் மற்றும் பல இடங்களில் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் மாலையில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் எடப்பாடி, சங்ககிரி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், காடையாம்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக கிராம புறங்களில் உள்ள விவசாய தோட்டங்களை மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. மேலும் இரவில் கடுங்குளிரும் நிலவியது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் தம்மம்பட்டியில் 92மி.மீ. மழை கொட்டியது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
எடப்பாடி-86, சங்ககிரி-67.4, கெங்கவல்லி-50, ஆத்தூர்-45.2, ஏற்காடு-41, சேலம்-40.3, ஆணைமடுவு-36, தலைவாசல்-27, வீரகனூர்-25, கரியகோவில்-22, ஓமலூர்-18.2, காடையாம்பட்டி-15.6, மேட்டூர்-8.2, பெத்த நாயக்கன் பாளையம்-6, என மொத்தம் மாவட்டம் முழுவதும் 579.90 மி.மீ. மழை பெய்தது.
தொடர்ந்து இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேகமூட்டம் நிலவி வருகிறது. கடுங்குளிரும் நிலவி வருகிறது.
- தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
- தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
சேலம்:
தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் தான். தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
ஜவுளி கடைகளில் கூட்டம்
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
அலுவலக வேலைக்கு செல்பவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிறு, குறு நிறுவனங்களில் தொழில் செய்பவர்களுக்கு 1-ந் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 1-ந் தேதி முதல் ஜவுளி எடுக்க வருபவரின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.
விற்பனைக்கு குவிப்பு
பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை உள்ளிட்டவைகள் சூரத்தில் இருந்தும், வேஷ்டி, துண்டு, டவல், பனியன், ஜட்டி உள்ளிட்டவை திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் கொள்முதல் செய்து அதிக அளவில் விற்பனைக்கு வைத்துள்ளனர். பட்டு சேலை ரகங்கள் காஞ்சிபுரம் திருப்புவனத்தில் இருந்தும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களில் தீபாவளி விற்பனை களை கட்டுமென்பதால் அதற்கான ஏற்பாடுகளில் கடை உரிமையாளர்களும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதே போல தீபாவளி ஜவுளி விற்பனை ஒட்டி சேலத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரில் ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் 500 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
10 கோபுரங்கள்
கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீபாவளி திருடர்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை (5-ந் தேதி) முதல் தீபாவளி பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர் காவல் படையை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும் ஸ்பீக்கர் செட் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து போலீசாருக்கு ஒத்துழைத்து அளித்து அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேர்தல் ஆணைய உத்தரவு படி 2024 வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
சேலம்:
தேர்தல் ஆணைய உத்தரவு படி 2024 வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
3257 ஓட்டு சாவடிகள்
இதை தொடர்ந்து மாவட்டத்தில் 11 சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள 1249 வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட 3,257 ஓட்டுச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்பட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருகிற 2024 ஜனவரி மாதம் 1-ந் தேதி 18-ந் தேதி பூர்த்தியடைவோர் அதாவது 2005 டிசம்பர் 31-க்கு முன் பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற, மாற்று திறானாளியை குறிப்பதற்கும் படிவம் 8-ஐ பயன்படுத்தினர். நாளை( 5-ந் தேதியும்), தொடர்ந்து வருகிற 18, 19-ந் தேதி ஆகிய 2 நாட்களும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது.
ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பங்களை நிரப்பி வழங்கினர். தொடர்ந்து அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி, சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த முகாம்களை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அவருடன் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன், தாசில்தார் தாமோதரன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் நடந்த வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ேமலும் இணையதளம் மூலமும், ஓட்டர் ஹெல்ப்லைன் எனும் செல்போன் செயலி மூலமும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . வாக்காளர்கள் பதிவை உறுதிப்படுத்த 1950 என்ற கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்த விண்ணப்பங்கள் வருகிற 9-ந் தேதி வரை பெறப்பட்டு 2024 ஜனவரி 5-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிட தக்கது.
- மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணியும், மகன் விக்னேஷும் அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம்.
- மது போதையில் இருந்த விக்னேஷ் மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார்.
சேலம், நவ:
சேலம் அருகே கருப்பூர் சந்ப்பேதைட்டை 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(54). கூலி வேலை செய்து வரும் இவருக்கு செல்வி (40) என்ற மனைவியும், விக்னேஷ் (20), கோபிநாத் (18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணியும், மகன் விக்னேஷும் அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம்.
அடித்து கொலை
கடந்த 29-ந் தேதி மது போதையில் இருந்த விக்னேஷ் மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார். சுப்பிரமணி பணம் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் சுப்பிரமணியை தாக்கி கழுத்தை நெரித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நவீன் (33). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் கலெக்ஷன் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
- இந்த நிலையில் நேற்று நவீன் மோட்டார் சைக்கிளில் அங்கம்மாள் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் போட்டுள்ளார்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி அருகே அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன் (33). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் கலெக்ஷன் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று நவீன் மோட்டார் சைக்கிளில் அங்கம்மாள் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த நவீன் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி
விழுந்து தனியார் வங்கி ஊழியர் சாவு






