என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு"
- பருவ மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தேவூர் அருகே காவேரிபட்டி மதிக்கிழான் திட்டு, படித்துறை, அண்ணமார் கோவில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மூழ்கடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
- பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கும் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு அரக்கோணம் பகுதியில் உள்ள 12 பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பருவ மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தேவூர் அருகே காவேரிபட்டி மதிக்கிழான் திட்டு, படித்துறை, அண்ணமார் கோவில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மூழ்கடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
இதையடுத்து தேவூர் அருகே சரபங்கா நதி காவிரி ஆற்றில் கலக்கும் இடமான அண்ணமார் கோவில் பாலம் மற்றும் காவேரிபட்டி காவிரி படித்துறை, மதிக்கிழான் திட்டு கிராமம் மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கும் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு கமாண்டர் பிரதீஷ் மற்றும் அனிஸ் ஆகியோர் தலைமையில் அரக்கோணம் பகுதியில் உள்ள 12 பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது சேலம் தேசிய பேரிடர் குழு வட்டாட்சியர் வள்ள முனியப்பன், சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, தேவூர் பேரிடர் மேலாண்மை குழு லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்முருகன், கமலக்கண்ணன், கருப்பண்ணன், சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். மேற்கண்ட இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.






