search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பூர் அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
    X

    கருப்பூர் அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணியும், மகன் விக்னேஷும் அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம்.
    • மது போதையில் இருந்த விக்னேஷ் மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார்.

    சேலம், நவ:

    சேலம் அருகே கருப்பூர் சந்ப்பேதைட்டை 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(54). கூலி வேலை செய்து வரும் இவருக்கு செல்வி (40) என்ற மனைவியும், விக்னேஷ் (20), கோபிநாத் (18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணியும், மகன் விக்னேஷும் அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம்.

    அடித்து கொலை

    கடந்த 29-ந் தேதி மது போதையில் இருந்த விக்னேஷ் மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார். சுப்பிரமணி பணம் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் சுப்பிரமணியை தாக்கி கழுத்தை நெரித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×