என் மலர்
சேலம்
- போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
நகராட்சி தொடக்கப்பள்ளி, இ-சேவை மையம், நூல் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படும் இப்பகுதியில் உள்ள எடப்பாடி போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து 2 மர்ம பொருள்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உஷாராகி அங்கு சென்று பார்த்தபோது அப்பொருள் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்த போலீசார் வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் சிலர் போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட போலீசார் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் எடப்பாடி போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் போலீஸ் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அண்மையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.
சேலம்:
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.75அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 547 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 83.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 547 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2063 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பவர் ஹவுஸ் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 4500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.
- கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி மாலை 6 மணி அளவில் 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 7-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 34 ஆயிரத்து 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 454 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 123.14 அடியாக இருந்தது. இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 542 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக இருந்தது. இந்த 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 36 ஆயிரத்து 996 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 73 ஆயிரத்து 330 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இதையடுத்து உபரிநீர் வினாடிக்கு 70 ஆயிரம் வீதம் திறக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணியளவில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.
- கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிபடியாக குறைந்தது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையும் நிரம்பியது.
கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு அணை நிரம்பியதும் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் படிபடியாக உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 1.80 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிபடியாக குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் உபரிநீர் திறப்பும் வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர்.
- காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலம்:
ஆடிப்பெருக்கு நாளில் நெல் விதைத்தால் தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் விவசாயத்திற்கு ஆதாரமான ஆறு, குளம் உள்பட நீர் நிலைகளைபோற்றும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஆடி மாதம் 18-ம் நாளான ஆடிப்பெருக்கில் காவிரி கரையோரங்களில் மக்கள் திரண்டு வழிபாடு நடத்துகிறார்கள். இதில் ஆண்களும், பெண்களும் அதிகாலையிலே பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கள பொருட்களோடு மேட்டூர் காவிரி கரையில் திரண்டனர். மேட்டூர் காவிரியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதனால் மேட்டூர் பகுதியில் கொளத்தூர் செட்டிப்பட்டி, கோடையூர், பண்ணவாடி, மூலக்காடு சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்.ஜி.ஆர்.பாலம், திப்பம்பட்டி, கீரைக்காரனூர், கூணான்டியூர் ஆகிய 9 இடங்களில் மட்டும் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பகுதிகளில் அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர். புதுமண தம்பதியினர் காவிரியில் புனித நீராடி புதிய தாலியை அணிந்து கொண்டனர். மேலும் புதுமண தம்பதிகள் அருகம்புல் வைத்து ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.
தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குடும்பத்துடன் அங்கு அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக குடும்பத்தினருடன் வந்து காவிரி ஆற்றில் சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நின்று வேடிக்கை பார்க்கவும், பிற இடங்களில் ஆற்றில் இறங்கி குளிப்பது, கரையில் நின்று புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல், ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வரை காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரி கார்டு வைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பேரிடர் மீட்புக்குழுவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
- இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
- தற்போது குறைந்த அளவு பூஜை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரில் லோகநாதன் என்பவர் ஏலியன் (வேற்றுகிரகவாசி) கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த கோவிலை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோவில் சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை எங்கும் ஏலியன் சித்தர் இல்லை என்றும் இங்கு தான் உள்ளது என லோகநாதன் தெரிவித்தார். தற்போது கோவிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் குறைந்த அளவு பூஜை நடைபெறுவதாகவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து வித பூஜைகளும் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடி தமிழகத்தை நோக்கி வருகிறது.
- வெள்ளப்பெருக்கால் பள்ளிபாளையம் ஆற்றோரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விட்டது.
சேலம்:
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 50 ஆயிரத்து 15 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 2 லட்சத்து 15 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 35 ஆயிரத்து 723 கன அடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து 49 ஆயிரத்து 206 கன அடியாகவும் உள்ளது.
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு ஓடி தமிழகத்தை நோக்கி வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் வருகிறது.
ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் காவிரியில் இரு கரைகளையும் மூழ்கடித்தபடி மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 70 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வருகிறது. அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 500 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பார்க்க சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். 16 கண் பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் கண்கொள்ளா காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அதிக அளவில் மக்கள் கூட்டம் நிலவுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் காவிரியில் 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலுர், திருச்சி, தஞ்சை, நாகை கடலூர், மயிலாடுமுறை உள்பட 12 மாவட்ட மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றோர பகுதியில் சந்தப்பேட்டை, நாட்டம்கவுண்டம்புதூர், ஜனதா நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளது.
தற்போது காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பள்ளிபாளையம் ஆற்றோரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விட்டது.
சுமார் 130-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட சதாசிவத்தை, வெப்படை தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் மீட்டனர்.
பள்ளிப்பாளையம் நாட்டம்கவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 35). இவரது வீடு ஆற்றங்கரையை ஒட்டி உள்ளது. இவர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஆர்வத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். வெள்ளம் அவரை அடித்து சென்றது. இதை பார்த்த பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் தயார் நிலையில் இருந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் பகுதி மீனவர்கள் பரிசலில் சென்று அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பாலத்தில் நின்று பொதுமக்கள் யாரும் ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும்-ஈரோடு மாவட்டம் பவானியையும் இணைக்கும் பழைய காவிரி பாலம் வலுவிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பாலத்தில் தற்போது போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
- இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக இருந்தது.
தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 124 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமானதால் அணையில் இருந்து கடந்த 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 118.41 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனிடையே நேற்று கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் ஐந்தருவிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.
இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கும் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி, 16 கண் மதகு வழியாக 1,03,500 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
- வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்துள்ளார்.
- சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சிகிச்சை முடிந்ததும் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே "என் கைதுக்கு உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின் பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்" என தெரிவித்தார்.
- யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஆத்தூர்:
பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு என்ன பாதிப்பு என்ற விவரம் தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 43-வது ஆண்டாக நீர்மட்டம் 120 அடியை எட்டி அணை நிரம்பியது.
- அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
சேலம்:
தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 124 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமானதால் அணையில் இருந்து கடந்த 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 118.41 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனிடையே நேற்று கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் ஐந்தருவிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.
இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கும் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 118.84 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 62 ஆயிரத்து 870 கனஅடியாக காணப்பட்டது. இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளுக்கு இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் நண்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 41 ஆயிரத்து 772 கனஅடியாகவும், நீர்மட்டம் 119.02 அடியாகவும் உயர்ந்தது.
மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.43 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 54 ஆயிரத்து 459 கனஅடியாகவும் இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 69 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில் 43-வது ஆண்டாக நீர்மட்டம் 120 அடியை எட்டி அணை நிரம்பியது.
இதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 46 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அணையின் கரையோர பகுதிகளில் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக உள்ள நிலையில் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி, 16 கண் மதகு வழியாக 1,03,500 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 500 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.
- கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை தனது முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்டம் கொள்ளளவு 124.80 அடி உயரம் ஆகும். தற்போது 123.35 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 38,977 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 55,659 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் உயரம் 84 அடி ஆகும். இந்த அணையில் தண்ணீர் முழுகொள்ளளவை எட்டிவிட்டது. இந்த அணைக்கு 30,805 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 24,667 கன அடி நீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை 2 அணைகளில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரத்து 326 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டபடி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை கர்நாடகம்-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 1,53,091 கன வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலையில் 1,05264 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் நீர்வரத்து 70,257 கன அடி சரிந்த நிலையில் காலை 8 மணிக்கு நீர்வரத்து 62,870 கன கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு குறைவாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 118.84 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 91.63 டி.எம்.சி. இருந்தது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 41ஆயிரத்து 722 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு நீர்வரத்து இதே நிலையில் நீடித்தால் இன்று பிற்பகலில் மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பும் பட்சத்தில் உபரிநீர் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்இருப்பை பொறுத்து முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அணையின் நீர்மட்டம் 120 அடி நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே இன்று மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு பாசனத்தின் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






