என் மலர்tooltip icon

    சேலம்

    • மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார்.
    • சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர், கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜா (வயது 55). இவர் நேற்று முன்தினம் மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார். அந்த பணத்தை, மொபட்டில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் பின்புற சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை. இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், கொளத் தூர் போலீசார் அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.

    • விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
    • மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப் பாடி அடுத்த சிங்கிபுரம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேட்டு (எ) வெங்கடேஷ் (வயது 45). இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் விளைந்த மக்காச்சோளத்தை ஏற்றிக் கொண்டு, வாழப்பாடி மங்கம்மா சாலையிலுள்ள வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். மக்காச்சோளத்தை இறக்கு வதற்காக டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரை உயரத்திய போது, எதிர்பாராத வித மாக மேலே சென்ற மின்கம்பி மீது ட்ரெய்லர் மோதியது. இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து விவ சாயி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

    இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விளை பொருளை கொண்டு சென்ற போது மின்சாரம் பாய்ந்து பலி யான விவசாயி குடும்பத்திற்கு அரசு நிவா ரணம் வழங்க வேண்டுமென இவரது உறவினர்களி டையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகியோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகி யோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    மேலும் நேற்று கூத்தாண் டவர் சாமி படுகளம் செய் யும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்ட னர்.

    இதில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அவர்கள் தங்கள் தாலியை அறுத்து வெள்ளை புடவை அணிந்தும் தலை விரி கோலத்தில் நடனம் ஆடி னார்கள். மேலும் சாமி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு படுகளம் செய்யப்பட்டது.

    பின்னர் குழந்தை வேண்டி நூற்றுக் கணக்கான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து, ஆற்றங்க ரைக்கு வந்து அக்னி தாண்டி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வேண்டுதலை வைத்தனர். இதில் குழந்தை இல்லாத வர்களுக்கு இந்த வேண்டு தல் வைத்தால் குழந்தை பிறக்கும் என ஐதீகம், இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏற்காடு மலை கிராமங்கள் மற்றும் தனியார் காபி தோட்டங்களில் காபி செடியுடன் அத்திமரம் சாகுபடி செய்யப்படுகிறது.
    • மருத்துவ குணம் கொண்ட ருசி மிகுந்த இந்த பழத்தில் நார்ச்சத்துடன், இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஏற்காடு திகழ்கிறது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ ஆகும்.

    ஏற்காடு மலை கிராமங்கள் மற்றும் தனியார் காபி தோட்டங்களில் காபி செடியுடன் அத்திமரம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அத்தி மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகிறது. நன்கு கனிந்த பழங்கள் தானாகவே கீழே விழுகின்றன. பழத்தில் இருந்து வெளிப்படக்கூடிய வாசனை கவர்ந்திழுப்பதாக உள்ளது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். ஒரு சில தோட்ட உரிமையாளர்கள் அத்திப்பழங்களை சேகரித்து உலரவைத்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.

    சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    மருத்துவ குணம் கொண்ட ருசி மிகுந்த இந்த பழத்தில் நார்ச்சத்துடன், இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கியுள்ளன. மருத்துவ குணமிக்க அத்திப்பழங்கள் ஏற்காட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    சேலம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாப்பி செட்டிப்பள்ளி ராசன்னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இனோ ஆண்ட்ரூஸ் (வயது 41). இவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் ஈமு கோழி மோசடி வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கில் கோவை டான்பிட் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இனோ ஆண்ட்ரூஸ்-க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து இனோ ஆண்ட்ரூஸ் தலைமறைவானார். இந்த நிலையில் கடந்த வாரம் சேலம் அன்னதானப்பட்டி லாட்ஜ் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இனோ ஆண்ட்ரூஸ் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்தனர்.

    அவரை பிடித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து கடந்த கடந்த 30-ம் தேதி அவரை குற்றப்பிரிவு போலீசார் செல்வகுமார், கேசவன் ஆகியோர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி தெரிவித்தார். இதனால் இனோ ஆண்ட்ரூசை, 2 போலீசாரும் தனியார் லாட்ஜிற்கு அழைத்துச் சென்று இரவு அங்கு தங்கினர். அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரர்களை அறையில் விட்டு விட்டு, நைசாக வெளியே வந்த இனோ ஆண்ட்ரூஸ், கதவை வெளிபக்கமாக பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    அதன் பிறகு போலீசார் எழுந்து பார்த்தபோது அறை கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததும், இனோ ஆண்ட்ரூஸ் தப்பிச் சென்று விட்டதும் தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.சிவகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் தனிப்படை போலீசார் தப்பி ஓடிய இனோ ஆண்ட்ரூசை தேடி வருகின்றனர்.

    இதனிடையே, கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 174 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 104 கன அடியாக சரிந்துள்ளது.
    • நேற்று காலை 83.35 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நீர்மட்டம் 82.34 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 700 அடியாக சரிந்துள்ளது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 174 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 104 கன அடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    நேற்று காலை 83.35 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நீர்மட்டம் 82.34 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 44.32 டி.எம்.சி.யாக உள்ளது.

    • டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.

    7-வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    நேற்று இரவு நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

    இதில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்துள்ளது.

    அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் அஜிதேஷ் குருசாமி 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ் ஜோடி 78 ரன்கள் சேர்த்த நிலையில் சோனு யாதவ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நிதிஷ் ராஜகோபால் 76 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரித்தீஸ்வரன் 10 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக ஆதித்யா அரை சதம் அடித்து 73 ரன்களை குவித்தார். தொடர்ந்து, ஸ்வப்நில் சிங் 48 ரன்களும், சுரேஷ் லோகேஸ்வர் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ஹரி நிஷாந்த் 4 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியாக, ஜகதீசன் கவுஷிக் 16 ரன்கள் மற்றும் சரவணன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    19.5 ஓவரில் ஒரு பந்துக்கு 6 ரன்கள் இருந்த நிலையில் களம் பரபரப்பாக இருந்தது.

    இந்நிலையில், கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்த நிலையில் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    இதன்மூலம் நெல்லை கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் ச்சுற்றுக்கு முன்னேறியது.

    • டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நெல்லை அணி 211 ரன்களை குவித்தது.

    சேலம்:

    7-வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    நேற்று இரவு நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்துள்ளது.

    அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் அஜிதேஷ் குருசாமி 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ் ஜோடி 78 ரன்கள் சேர்த்த நிலையில் சோனு யாதவ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராஜகோபால் 76 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரித்தீஸ்வரன் 10 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார்.
    • ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் தனது நண்பரை பார்க்க, நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் வந்தார். கேன்டீன் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சென்ற அவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, அவரது வண்டியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எனது வண்டியே மிகவும் பழையது. அதையும் திருடிச்சென்று விட்டார்களா? என்ற வேதனையுடன் வண்டியை தேடினார். சாவி தன்னிடம் இருப்பதால், யாராவது தள்ளிக்கொண்டு தான் சென்றிருக்க வேண்டும் என முடிவு செய்த அவர், நீண்ட தூரம் வண்டியை தள்ளிச் சென்றிருக்க முடியாது என கருதி, தனது நண்பருடன் வண்டியை தேடத் தொடங்கினார்.

    அப்போது, கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த வண்டியை கொண்டு வந்து ரிப்பேர் பார்க்க சொன்னது யார்? என கேட்டார். அப்போது, அங்கிருந்த மற்றொரு நபரை கடை உரிமையாளர் கைகாட்டினார்.

    இதற்கிடையில், அந்த நபர் பட்டறையின் எதிர்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து, எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து, திருடி வந்த வண்டிக்கு சிறிய பூஜையும் போட்டிருந்தார். இதுகுறித்து வேலு விசாரித்த போது, அவர் மன்னார்பாளையத்தை சேர்ந்த ராஜா (49) என்றும், அது தன்னுடைய வண்டி எனக் கூறினார்.

    இதனையடுத்து, அவரை நண்பர் உதவியுடன் மடக்கிப் பிடித்த வேலு, டவுன் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவர், 'என்னை திருடன்னு சொல்லாதீர்கள். எனது நண்பன் தான் வண்டியை கொடுத்தான்.

    எனது செல்போனும் அவனிடம் தான் இருக்கிறது. எனது 2 பிள்ளைகள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் திருடல, என்னை திருடன் என சொல்லாதீர்கள்,' என்றார்.

    இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, என்னை திருடன்னு சொல்லாதீர்கள் என்று அவர் கூறும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற 8 ஆயிரம் பேர் பண பலன் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
    • அவர்களுக்கு உடனே தமிழக அரசு பண பலன்களை வழங்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் தலைவர் சையத் மொய்னுதீன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களுக்கு இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பின்னர் மாநில தலைவர் கதிரேசன் நிருபர்களிடம் கூறுகையில், பிற துறைகளைப் போன்று ஓய்வு பெறும் நாளில் போக்குவரத்து துறையினருக்கும் பணபலன்கள் வழங்க வேண்டும்.

    கடந்த 8 மாதங்களில் 8 ஆயிரம் பேர் பண பலன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடனே தமிழக அரசு பண பலன்களை வழங்க வேண்டும் என்றார்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களை குறி வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓலூர் வட்டார கிராமங்களை குறி வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓமலூர் நகர், புளியம்பட்டி, கோட்ட மேட்டுப்பட்டி, பல்பாக்கி, இந்திராநகர், பச்சனம்பட்டி, திமிரிகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பர், 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.

    அதே போல சட்ட விரோதமாக சந்துகடைகள் வைத்து மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சந்துகடைகள் ஒவ்வொரு கிராமத்திலும் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யபடு கிறது. குறிப்பாக காமலாபுரம் கிராமத்தில் தான் அதிகள வில் சந்துகடைகள் வைத்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாட்டிலை திறந்து கலப்படம் செய்தும் மது விற்பதாக புகார்கள் கூறப்படுகிறது. அதனால், சந்துகடை வைத்து மது விற்பனை செய்யும் அனை வரும் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவக்குமார் உத்தர விட்டார்.

    இதனை தொடர்ந்து ஓமலூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்கும ரன் மற்றும் போலீசார் அனைத்து பகுதிகளிலும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், ஒரே நாளில் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் நேரடியாக விற்பனை செய்யாமல், செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதே போல சந்து கடை மூலம் மது விற்பனை செய்த பெண் உட்பட 6 பேரை போலீசார் அதிரடி யாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

    தொடர்ந்து ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 11 பேரி டமும் லாட்டரி விற்பனை செய்யக்கூடாது என்றும் சட்டவிரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று ஆலோசனை மற்றும் விழிப் புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இதே வேலையை செய்து வந்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.

    • சேலத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஏ.டி.ஜி.பி அருண் திடீர் ஆலோசனை நடத்தினார்.
    • போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

    சேலம்:

    கோவையில் போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை கோவை மாநகர மற்றும் சரகத்தில் உள்ள காவல் அதிகாரிகளுடன் தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி (சட்டம் ஒழுங்கு) அருண் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அதன்படி, இன்று மதியம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா, மற்றும் கவுதம் கோயல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சேலம் சிவகுமார், நாமக்கல் ராஜேஷ் கண்ணா, தர்மபுரி ஸ்டீபன் ஜேசுபாதம், கிருஷ்ணகிரி சரத்குமார் தாகூர் ஆகியோருடன் ஏ.டி.ஜி.பி அருண் ஆலோசனை நடத்தினார்.

    கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போல் இனி நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் ஆலோசனை வழங்கி வழங்கினார்.

    இதேபோல் உயர் அதிகாரிகளுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து தரப்பினரையும் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    ×