என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பயணித்த படகு நடுக்கடலுக்கு சென்று திருப்பியபோது பலமாக காற்று வீசியதால் நிலைதடுமாறியது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    ராமநாதபுரம்:

    மதுரை சுண்ணாம்புக்கார தெருவை சோ்ந்தவா் முருகன் (வயது62). இவா் தனது மனைவி, 3 மகன்கள், உறவினா்களுடன் கடந்த 18-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ள உலக நாயகி அம்மன் கோவிலுக்கு குலதெய்வ வழிபாடு செய்ய சென்றனர்.

    அவா்கள் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றுமாலை தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து சுந்தர் என்பவரின் நாட்டுப்படகில் கடலுக்குள் சுற்றுலா சென்றனா். அந்த படகில் முருகன், அவரது மனைவி பஞ்சவா்ணம் (வயது56), மகன்கள் கனகராஜ் (35), முத்துமணி (33), ரவி (30), முத்து மணியின் மாமியாா் மணி மேகலை (50), அவரது மூத்த சகோதரி இருளாயி (54), குழந்தைகள் உள்ளிட்ட 13 போ் சென்றனர்.

    அவர்கள் பயணித்த படகு நடுக்கடலுக்கு சென்று திருப்பியபோது பலமாக காற்று வீசியதால் நிலைதடுமாறியது. அப்போது படகின் ஓரத்தில் அமா்ந்திருந்த மணிமேகலை, இருளாயி ஆகியோா் தவறி கடலுக்குள் விழுந்து தத்தளித்தனா்.

    அவர்கள் தத்தளிப்பதை கண்டு, படகில் சென்ற முத்துமணி என்பவர் கடலுக்குள் குதித்து காப்பாற்ற முயன்றார். இதில் 2 பெண்களையும் மீட்டு படகில் ஏற்றிய அவரை கடல் அலை இழுத்துச்சென்றது.

    இதையடுத்து கரைக்கு வந்து பாா்த்தபோது மீட்கப்பட்ட மணிமேகலை, இருளாயி ஆகிய இருவரும் இறந்து விட்டது தெரியவந்தது. இதை தொடா்ந்து அவா்களது உடல்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

    மேலும் கடலில் மூழ்கிய முத்துமணியை கடலோர காவல்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முழுவதும் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 8 படகுகளில் மீனவர்கள் மற்றும் மரைன் போலீசார் முத்துமணியை தேடினர். அப்போது அவரது உடல் நடுக்கடலில் மிதப்பது தெரியவந்தது. அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஏற்கனவே 2 பெண்கள் இறந்தநிலையில், அவர்களை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குறித்த என்ஜினீயர் முத்துமணியும் இன்று பிணமாக மீட்கப்பட்டதால், படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    இந்த சம்பசவம் தொடர்பாக சட்ட விரோதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். சுற்றுலா பயணிகளை படகில் அழைத்துச்சென்ற சுந்தர்(30), ராஜா(45) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘ஹைவே’ போக்குவரத்து போலீசாரின் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • அதிகரிக்கும் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட 'ஹைவே' போலீசார் தங்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    சோதனை சாவடியில் போலீசார் இல்லாதால் விபத்துக்களை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர். இரவில் நடந்து செல்பவர்கள் மீது வாகனம் மோதுவதும், அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை கீழாக கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும் இந்த சாலையில் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது. இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    நேற்று நதிப்பாலம் அருகே நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சிக்னல் விளக்கு அமைக்க கோரி பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பகுதியில் விபத்து என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப்பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர். இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

    இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருவார்கள். மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    இன்று மாசி மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆற்றாங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி வழிபாட்டு குலதெய்வ மக்கள் செய்திருந்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனில் ஆறும், கடலும் சங்கமிக்கக்கூடிய ஆற்றாங்கரையில் விரைவில் பொற்கோவிலாக அமைய உள்ள கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நடந்தது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்ட மக்களால் அன்போடு வள்ளல் என்று அழைக்கப்படும் டாக்டர் ராமு களஞ்சிய தேவர் மாசி களரி திருவிழாவை பிரமாண்டமாக நடத்தி வந்தார்.

    அப்போது 101 கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம். விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி 5 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி-சேலை மற்றும் மருத்துவ கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அனைத்து சமுதாய மக்க ளுக்கும் தொடர்ந்து உதவி செய்து வந்தார்.

    தற்போது அவரது மூத்த மகனும், பொறியாளரும், ஆன்மீக செம்மலுமான ஆர்.கே.வெங்கட்ராமன் தலைமையில் மகன்கள் டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் ஆகியோர் தந்தை வழியில் நற்காரியங்களை செய்து வருகின்றனர். மாசி களரி திருவி ழாவிவைெயாட்டி ஆற்றாங்கரையில் உள்ள கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரா தனைகள் நடந்தன.

    விழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை ராக்கச்சி அம்மனுக்கு முதல்கால பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை 10 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, தீபாராதனை நடை பெற்றது. இன்று (19-ந்தேதி) 101 கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் டாக்டர் களஞ்சிய தேவரின் மனைவி லட்சுமி களஞ்சியம் நாச்சியார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மகன்கள் பொறியாளர்-ஆன்மீக செம்மல் ஆர்.கே.வெங்கட்ராமன், டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் மற்றும் மருமகள்கள், பேரன்-பேத்திகள் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    மாசி களரி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மின் விளங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி வழிபாட்டு குலதெய்வ மக்கள் செய்திருந்தனர்.

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
    • கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோச மங்கை மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீபரதகலா அகாடமி இணைந்து 5-வது ஆண்டு கலை விழா நாட்டியாஞ்சலி நடந்தது.

    சிவராத்திரி நாட்டி யாஞ்சலி கலை நிகழ்ச்சி களை ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் ஆா்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியாா் தொடங்கி வைத்தார். இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை நாட்டியாஞ்சலி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கலைஞா்கள் பரதநாட்டியம், நாதசங்கமம், குச்சுப்புடி நடனம், சிவபூஜை உள்ளிட்ட பொருள்களில் பரதநாட்டியம் ஆடினா். பக்தர்கள் விடிய,விடிய விழித்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய பால், பன்னீா், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருள்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் விடிய, விடிய மகா சிவராத்திரி விழா பூஜைகள் நடந்தது. மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, வாகனங்களில் குலதெய்வ வழிபாட்டுக்காக ராமநாதபுரம் கிராமப் பகுதிகளுக்கு பக்தர்கள் வந்தனர். இதனால் கிராம பகுதிகளில் சிவராத்திரி விழா களைகட்டியது.

    • இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மீனவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மீனவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகளை மனுக்கள் மூலம் மற்றும் வாய்மொழியாகவும் பதிவு செய்தனர். அவர்களுக்கு தீர்வுகள் அளிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கும் முறை எளிதாக்கப்பட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான இரட்டைமடி மற்றும் சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேதமடைந்த படகு களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை மிக விரைவில் வழங்க அறிவுறுத்தப்படும். ரோந்து நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது இந்த ஆண்டு மட்டும் சுமார் 420-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    மேலும் ரூ. 80 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீடித்த நிலையான மீன் பிடிப்பை ஏற்படுத்த மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாமகேஸ்வரி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலாடி அருகே காணாமல் போன விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.
    • இவர் இந்தப்குபதியில் உள்ள பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழச் செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனம் (வயது45), விவசாயி. இவர் இந்தப்குபதியில் உள்ள பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார்.

    கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மயில்வாகனம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மயில்வாகனத்தின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில், சிக்கல் அருகே உள்ள ஆண்டிச்சிகுளம் கண்மாய் மேற்கு பகுதியில் விவசாயியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    கடலாடி இன்ஸ் பெக்டர் ஜான்சிராணி, கீழச் செல்வனூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச் சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பிணமாக கிடந்தது. மயில்வாகனம் என்பதை உறுதி செய்தனர். அவரது உடலை போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாயி மயில்வாகனம் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு வழங்கும் உதவி தொகையால் உயர்கல்வி படிக்கும் சிரமம் குறைந்தது.
    • ராமநாதபுரம் மாணவிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரால் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம் கல்லூரி மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பில் படிக்கக் கூடியவர்கள் தொடர்ந்து 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து முடித்து மேற்படிப்பிற்கு கல்லூரிக்கு செல்லுகின்ற நேரத்தில் அவர்களுககு வசதி இல்லாத காரணத்தினால் கல்லூரிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகின்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன்பெற்று வரும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ரையானா பர்வீன் கூறியதா வது:- எனது தந்தை முஹமது இன்சா துல்லா ஹ்கான். தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். எனது குடும்பத்தில் எனது தந்தை மட்டுமே வேலைக்குச்சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். எனது தந்தையின் வருமானம் வீட்டு செலவுகளுக்கு சரியாக உள்ளதால் என்னுடைய கல்லூரி படிப்பிற்கான தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் சிரமமாக இருந்து வந்தது.

    தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தினால் எனக்கு மாதம் ரூ. 1000 கிடைக்கிறது. இதன் மூலம் நான் எனது படிப்பிற்கு உதவக்கூடிய உபகரணங்களை என்னுடைய தந்தையை சிரமப்படுத்தாமல் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

    திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மாணவி பாண்டி ச்செல்வி கூறியதா வது:-

    என் தந்தை பாண்டி. கூலி வேலை செய்து வருகிறார். என் தந்தை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் என்னை படிக்க வைப்பதை எண்ணி பல நாட்கள் கவலையில் இருந்தேன்.

    தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டத்தின் மூலம் எனக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கிறது. அதனை வைத்துக்கொண்டு என்னுடைய கல்விக்கு ஆகும் செலவுகளை நானே செலவு செய்து கொள்வேன் என்றார்.

    • ஏர்வாடி மனநல காப்பகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா?என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் மனநல காப்பகத்திற்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு மனநல காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள 22 பெண்கள், 28 ஆண்கள் மொத்தம் 50 பேர் தங்கி வருவது குறித்து அறிந்து கொண்டதுடன், அவர்களை சந்தித்து சரியாக உணவு வழங்கப்படுகிறதா? மற்றும் மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார்.

    தற்பொழுது அங்குள்ள நபர்கள் சுயதொழில் செய்யும் அளவிற்கு குணமடைந்ததையொட்டி, கடல்பாசியில் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வயர் கூடை, தயாரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அவர்களிடம் உங்களை நன்றாக பராமரிக்கிறார்களா, உங்களுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமா என்று கேட்டறிந்தார்.காப்பகத்தை பராமரிக்கும் நிறுவனத்திடம் இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கி பூரண குணமடைந்து அவர்களது உறவினர்கள் அழைத்துச் செல்லும் வரை நன்றாக பாதுகாத்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல உதவி அலுவலர் ஜெய்சங்கர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று இரவு சதுரகிரியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
    • ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் தமிழகத்தில் அமைந்துள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகராக கருதப்படும் இங்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலித்தனர்.

    மகா சிவராத்திரியான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ராமநாதசுவாமிக்கும், பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் படிக லிங்க பூஜை நடந்தது.

    சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் ஏராளமானோர் நீராடினர். காலை 9 மணிக்கு கேடயத்தில் நடராஜர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு இன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

    இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இன்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்துள்ளதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்க கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இன்று முதல் 21-ந்தேதி வரை மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சதுரகிரிக்கு செல்வதற்காக நேற்று இரவு முதலே மலை அடிவார பகுதியான தாணிப்பாறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை 6 மணிக்கு வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.

    முன்னதாக பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. மாலை பாதையில் உள்ள வழுக்குப் பாறை, சங்கிலிப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சதுரகிரியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆனால் பக்தர்கள் இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

    • கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பால சுப்ரமணியன் வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சமூக மேம்பாடு (கனடா - இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டம்), கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து தன்னார்வ ரத்த தான முகாமை கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலைமையேற்று தொடங்கி வைத்து ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.

    ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பால சுப்ரமணியன் வரவேற்றார்.துணை முதல்வர் சேக் தாவூத், ரோட்டரி சங்க தலைவர் சம்சூல் கபீர் ஆகியோர் ரத்ததானம் செய்வது எப்படி நம் ஆளுமையை வடிவமைக்கிறது என்பது குறித்தும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் ரவி ரத்ததானம் கொடுப்ப வருக்கும், பெறுபவர்க்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த சேகரிப்பு மருத்துவ குழுவினரிடம் பயிலக மாணவர்கள் 96 பேர் ரத்தம் தானம் அளிக்க ஆர்வத்துடன் முன் வந்தனர்.

    முடிவில் கல்லூரியின் கனடா இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டத்தின் தொடர் கல்வி மேலாளர் நாகராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கீழக்கரை ரோட்டரி சங்க செயலர் சுப்ரமணியன், மரியதாஸ், எபன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • உதிரிபாகங்கள் அனுப்பாமல் அலைக்கழித்த நிறுவன உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விடுத்துள்ளது.
    • ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் தினகரன் (வயது34). இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்திற்கு தேவையான சில உதிரி பாகங்களை 2021-ம் ஆண்டு செப்.22-ந்தேதி பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் ஆர்டர் செய்தார். அதற்கான தொகை ரூ.35 ஆயிரத்தையும் செலுத்தினார். ஆனால் ஆர்டர் பெற்ற நிறுவனம் அனுப்புவதாக சொன்ன தேதியில் பொருட்கள் வந்து சேரவில்லை.

    இதுகுறித்து கேட்ட போது முகவரி மாறி சென்று விட்டதாக கூறினர். ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர். அதன் பின் நிறுவனமும், டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் மாறி மாறி அலைக்கழித்தனர். உரிய நேரத்தில் உதிரி பாகங்கள் கிடைக்காததால் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட தினகரன் ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2022-ம் ஆண்டு ஜூலை.15-ந்தேதி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பொருளுக்குரிய தொகை ரூ.35 ஆயிரத்துடன், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் குட்வின் சாலமன்ராஜ், நமச்சிவாயம் உத்தரவிட்டனர்.

    ×