search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parts"

    • உதிரிபாகங்கள் அனுப்பாமல் அலைக்கழித்த நிறுவன உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விடுத்துள்ளது.
    • ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் தினகரன் (வயது34). இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்திற்கு தேவையான சில உதிரி பாகங்களை 2021-ம் ஆண்டு செப்.22-ந்தேதி பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் ஆர்டர் செய்தார். அதற்கான தொகை ரூ.35 ஆயிரத்தையும் செலுத்தினார். ஆனால் ஆர்டர் பெற்ற நிறுவனம் அனுப்புவதாக சொன்ன தேதியில் பொருட்கள் வந்து சேரவில்லை.

    இதுகுறித்து கேட்ட போது முகவரி மாறி சென்று விட்டதாக கூறினர். ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர். அதன் பின் நிறுவனமும், டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் மாறி மாறி அலைக்கழித்தனர். உரிய நேரத்தில் உதிரி பாகங்கள் கிடைக்காததால் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட தினகரன் ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2022-ம் ஆண்டு ஜூலை.15-ந்தேதி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பொருளுக்குரிய தொகை ரூ.35 ஆயிரத்துடன், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் குட்வின் சாலமன்ராஜ், நமச்சிவாயம் உத்தரவிட்டனர்.

    • தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
    • வாலிபரின் உடலில் இருந்து கல்லீரல், ஒரு சிறுநீரகம் மற்றும் கண் விழிகள், எடுக்கப்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தனர்.

    அதை ஏற்று அவர்கள் வாலிபர் உடல் உறுப்பு களை தானம் தர ஒப்புக்கொண்டனர். வாலிபரின் உடலில் இருந்து கல்லீரல், ஒரு சிறுநீரகம் மற்றும் கண் விழிகள், எடுக்கப்பட்டது.

    முன்னுரிமை அடிப்படையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

    நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு வாலிபரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அந்த வாலிபர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டதில் உரிய முறையில் அறுவை சிகிச்சைகளை மருத்துவமனையில டீன் ரவிச்சந்திரனின் வழிகாட்டுதல் படி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

    அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மயக்கவியல் துறை மருத்துவர்கள், சிறுநீரக துறை மருத்துவர்கள், நரம்பியல், சிறுநீரக அறுவைசிகிச்சை துறை மருத்துவர்கள் ஆகிய 4 துறை மருத்துவர்களுக்கு டீன் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்

    ×