என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆலங்குடி அருகே லோடு வேனில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது
    • ஒருவர் கைது, டிரைவர் தப்பி ஓட்டம்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய வரை குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார், மாந்தங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வண்டியில் 1 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. லோடு வாகனத்தில், வந்த அதன் உரிமையாளர் செம்பட்டிவிடுதியை சேர்ந்த தொப்புளான் மகன் ரெகுநாதன் என்பவர் அரிசியை கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெகுநாதனை கைது செய்த, புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலிசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய லோடு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • அறந்தாங்கியில் சிட்டங்காடு மாயம்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா சிட்டங்காடு கிராமத்தில் உள்ள மாயம்பெருமாள் கோவில் திருப்பணிகள் முடிவுற்றதை, தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதற்காக 7ம் தேதி அக்னி பிரதிஷ்டையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 3 நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று வந்தது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம் புறப்பாடு நடைபெற்று, ஆதித்ய பட்டச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • ரூ.15 லட்சம் கேட்டு இளம் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்
    • கணவர், மாமனார், மாமியார உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாஹர்பான் (வயது 27) இவருக்கும் புதுக்கோட்டை டைமண்ட்நகர் பகுதியைச் சேர்ந்த நிஷ்க்அஹமெட் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிவுற்று 4 ஆண்டுகளில் குழந்தை ஏதும் இல்லாத சூழ்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்சுடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கணவர் நிஷ்க்அகமெட், மாமியார் அக்பியாபர்வீன், மாமனார் ரபியுதீன் ஆகியோர் சாஹர்பானுவிடம் ரூ. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதனையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளான சாஹர்பான் அங்கிருந்து கிளம்பி தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் வழக்கு அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் சாந்தி, ஆய்வாளர் சாந்தகுமாரி தலைமையில் கணவர், மாமியார், மாமனார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு பெண்ணை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கறம்பக்குடியில் தி.மு.க. தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது
    • தலைமை கழக பேச்சாளர் தஞ்சை காமராஜ் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்தார்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் மற்றும் நகரக் கழக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் வரவேற்றார். கறம்பக்குடி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, நகர இளைஞரணி அமைப்பாளர் ராசி பரூக் ஆகியோர் கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஆத்மா குழு தலைவருமான மணமடை முத்துகிருஷ்ணன், கறம்பக்குடி பேரூராட்சி தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான முருகேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை காமராஜ் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்தார். இதில் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது உள்ளிட்ட ஒன்றிய நகர இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர். தெருமுனைப் பிரச்சாரம் கறம்பக்குடி சீனி கடை முக்கம், கோவில் கடைவீதி, ரகுநாதபுரம் புது விடுதி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    • ஆலங்குடி அருகே சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழை மரங்களை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்
    • பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைத்திட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளங்குறிச்சி, சூரக்காடு, கோட்டைக்காடு, கருப்பகோன்தெரு, வடதெரு, பட்டத்திக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றில் பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா நேரில் சென்று சேதம் அடைந்த வாழை மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைத்திட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இதில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பஞ்சாலன், அரசு ஒப்பந்தக்காரர் பரிமளம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘ஸ்மார்ட் வாட்ச்'கள் ‘போர்ட்டபிள் மீடியா பிளேயர்’களாக செயல்படுகின்றன.
    • எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன.

    புதுக்கோட்டை:

    ஒடிசா ரெயில் விபத்தில் 288 பயணிகள் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின்போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:-

    தற்போது 'ஸ்மார்ட் வாட்ச்' பயன்பாடு அதிகரித்துள்ளதால் 'புளூ டூத்' மூலம் வாட்சில் கனெக்ஷன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்துவிடும். மேலும் சில 'ஸ்மார்ட் வாட்ச்'கள் 'போர்ட்டபிள் மீடியா பிளேயர்'களாக செயல்படுகின்றன.

    எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணியாற்றுகிறபோது இதுபோன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

    இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    அறந்தாங்கி,

    தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் சாலையோரத்தில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர செயலாளர் ராஜேந்திரன், கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன், உதவிப் பொறியாளர் சுபாஷினி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    • எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
    • சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் சாலை மறியல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வருவாய் வட்டாட்சியர் ராமசாமி, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகநாதன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் பொன்னுசாமி சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டுள்ள 3 டாக்டர்களில் ஒருவர் மகப்பேறு விடுதியில் இருக்கிறார். மற்ற டாக்டர்களை உடனடியாக பணியில் சேர அறிவுறுத்துவது, மாற்றுப் பணிகளில் கூடுதல் டாக்டர்களை நியமிப்பது, வருகிற 23-ம் தேதி முதல் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க செய்வது, மேலும் 2 டாக்டர்களை நியமிக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்புவது, டயாலிசிஸ் எக்ஸ்ரே போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுப்பது, வாரம் ஒரு முறை மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராமு உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெருவதாக எம்.எல்.ஏ. சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

    • மகளிர் போலீஸ் நிலையத்தை கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் காரையூர் உள்ளிட்ட 4 போலீஸ் நிலையம் இலுப்பூர் சப்-டிவிசன்களுக்கு உட்பட்டது. இந்தநிலையில் இப்பகுதி பெண்கள் தங்களது பிரச்சினை குறித்து மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டுமானால் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்லும் நிலை இருப்பாக கூறிவந்தனர். எனவே இந்த இலுப்பூரிலேயே அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அப்போது அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குருபாபு, நகர செயலாளர் மணிகன்டன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது
    • மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, தஞ்சாவூர் சாலை, சிட்கோ எதிரில், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை நெடுஞ்சா லைத்துறை கோட்டத்தி ற்குட்பட்ட தஞ்சாவூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்



    • சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்
    • இப்பகுதி விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் திருவரங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால் இப்பகுதியில் உள்ள20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கருக்கு மேலான வாழை, 200 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான சோழம், இதே போல் நெல், எள் உள்ளிட்ட பயிர்களும் காற்றில் சாய்ந்து கடுமையான பாதிப்படைந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது.

    இந்தப் பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் வேளாண் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணியை தொடங்கவும் அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை, சோளம், நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பெற்று தரப்படும். வாழை விவசாயிகள் வருங்காலத்தில் முறையான காப்பீடு செய்ய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயம் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கி வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
    • கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்த வானக்கண்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். தி.மு.க. பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதியின்றி பார் நடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அத்துடன் பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருடன் சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினார்.

    அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பரிமளத்தை மதுபாட்டில்களுடன் பிடித்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த மதியழகன், பரிமளத்தை கீழே இறக்கிவிட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்து காலணியை கழற்றி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

    இதே போல கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது. போலீசாரை தாக்க முயன்றும், அனுமதி இல்லாமல் பார் நடத்தியும் வந்த மதியழகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீஸ்காரர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன், பரிமளம் ஆகியோர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்க முயன்றது, காலணியை கழற்றி தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×