என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் மரம் நடும் விழா-அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
- தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
அறந்தாங்கி,
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் சாலையோரத்தில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர செயலாளர் ராஜேந்திரன், கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன், உதவிப் பொறியாளர் சுபாஷினி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






