என் மலர்
புதுக்கோட்டை
- புத்தக திருவிழா விழிப்புணர்வுக்காக புதுக்கோட்டையில் ஒரே நேரத்தில் 3 லட்சம் பேர் புத்தகம் வாசித்தனர்
- புத்தக திருவிழா 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து வரும் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள 6-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, 3 லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்வினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா துவக்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுமார் 3 லட்சம் பள்ளி, கல்லூரி, மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொது இடங்களில் 'புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற மாபெரும் நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மணி நேர நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது. இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவாற்றவும் உள்ளனர்.புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பு என்பது கற்பனை உலகத்தை நிஜமாக்குவதற்கு நம்மிடையே ஆர்வத்தை தூண்டுவதாகும்.
எனவே மாணவர்கள் அனைவரும் படிக்கும் பழக்கத்தை சிறு வயது முதலே பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் நாம் என்னவாக போகிறோம் என்பதற்கான வழிவகையினை ஏற்படுத்தும். புத்தகம் படிப்பின் மூலம் நம்மிடையே வளரும் அறிவு செல்வத்தின் மூலம் இச்சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய மக்களாக வளர வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கருணாகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி, நூலக அலுவலர் சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வேல்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் .சாலை செந்தில், கவிஞர் தஙகம் மூர்த்தி, டாக்டர் சலீம், அறிவியல் இயக்கம் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, விவசாய சங்கம் தனபதி, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனைசெய்யபட்டது
- நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி மனுதாக்கல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த வழக்கில் 13 பேரிடம் டி.என்.ஏ. பரிசோ தனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதற்கட்டமாக நடந்த டி.என்.ஏ. பரிசோதனையின் போது வேங்கை வயலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் வர மறுப்பு தெரிவி த்தனர். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமறுத்த 8 பேரிமும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி புது க்கோட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேரையும் டி.என்.ஏ. பரசோதனைக்கு உட்படுத்தி கொள்ள கோர்ட் உத்தர விட்டதோடு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிப்பு நடத்தவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் சிறுவர்கள் 4 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்ப ட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் போலீசார் நேற்று மனுதாக்கல் செய்தனர்.
- மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது
- வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில்கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைதொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இறந்த வித்யாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசின் நிவாரண உதவித் தொகையான ரூ. 4.லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார்
- கலெக்டர் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகள் குறித்தும், மாணவ, மாணவிகள் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து, பார்வையிட்டு, உரையாடினார்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு முதலமைச்சரால் மக்க ளுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் உரிய முறையில் பொதுமக்களுக்கு சென்றுசேரும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து மக்கள் நலத்திட்டங்களை துரிதப்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் விளையாட்டு மீதுள்ள ஆர்வத்தினை கேட்டறிந்தார்கள்.
மேலும் பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் மின் வசதிகள் உள்ளிட்டவைகள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக போதுமான அளவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதானம் உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகள் குறித்தும், மாணவ, மாணவிகள் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து, பார்வையிட்டு, உரையாடினார். ஆதனைத் தொடர்ந்து, அன்னவாசல் அரசு மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரித்திடவும், மருத்துவமனை வளாகத்தில் நிழல் தரும் மரங்களை நடுவதற்கும் மருத்துவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.
- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
- ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே, அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாருக்கு முறையான பதிலைத் தராமல் மழுப்பலான பதிலை ஆளுநர் அளித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். தான் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என தெரிவித்தார்.
- புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் திட்ட பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
- தமிழக அரசின் திட்ட பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது இன்றியமையாத கடமையாகும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் தெரிவித்ததாவது, தமிழக அரசின் திட்ட பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது இன்றியமையாத கடமையாகும்.
இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. அதனடிப்படையில் இக்கூட்டம் அனைத்துத்துறை உயர் அலுவலர்களுடன் நடத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரு துறைக்கு அரசின் மூலம் அறிவிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதற்குள்ள பணிகளை விரைவில் தீர்க்கப்படுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் அரசின் திட்டங்களை நிறைவேற்று வதற்கான இடத் தேர்வு, கட்டடப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற முடியும்.
எனவே அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசால் செய ல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றிட தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பணிகளை நிறைவேற்றிட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)தங்கவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டை ஆறாவது புத்தகத் திருவிழா-ஆட்டோ பிரச்சார பதாதைகள் வெளியிடபட்டுள்ளது
- புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இணைந்து புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாட்கள் புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவின் வரவேற்புக்குழு தலைவராக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா செயல்படுகிறார். மாவட்ட காவல் சூப்பிரெண்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர்களைக் கொண்ட வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கவிஞர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரசுத் துறைகளோடு இணைந்து விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் புத்தகத் திருவிழா விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆட்டோ பிரச்சார பதாகைகளை வெளியிட்டு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.
இதில் புத்தக திருவிழா ஒருங்கிணைப்பளார்கள் தங்கம் மூர்த்தி, ஆர்.ராஜ்குமார், அ.மணவாளன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், ஈ.பவனம்மாள், ஜீவி மற்றும் வரவேற்புக்குழுவினர் கவிகார்த்திக், யோகா பாண்டியன், கராத்தே கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி, நூலகங்கள், பொதுமக்கள் கூடும் ஆயிரக்கணக்கான இடங்களில் லட்சக்கணக்கில், தொடர்ந்து ஒரு மணி நேரம் புத்தகங்கள் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஆலங்குடி சந்தைபேட்டையில் தற்காலிக அரசு கல்லூரி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது
- இப்பகுதியில் திருமண மண்டபம் மற்றும் கோவில் அமைந்துள்ளது.
ஆலங்குடி,
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் சொர்ண குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் முயற்சியால் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கீழாத்தூர் சமத்துவபுரம் அருகே கல்லூரிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டிடமான பணிகள் நிறைவடையும் வரை ஆலங்குடி சந்தை பேட்டை பகுதியில் தற்காலிகமான கல்லூரி இயங்கி வருகிறது.
இப்பகுதியில் திருமண மண்டபம் மற்றும் கோவில் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் அதிக அளவில் இப்பகுதியில் சாலையை கடந்து செல்கின்றனர். புதுக்கோட்டை ஆலங்குடி மெயின் ரோட்டில் இந்த இடம் உள்ளதால் பேருந்து மற்றும் கார் லாரி போன்ற வாகனங்கள் அதிவேகமாக கடந்து செல்கின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- திருமயம் கடியாபட்டி அருகே செந்தாமரைக்கண்ணன் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருமயம் கடியாபட்டி அருகே ஊனையூரில் செந்தாமரைக் கண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள செந்தாமரைக்கண்ணன் பெருமாள் வெங்கடாசலபதி தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலில் திருப்பணிகள் கடியாபட்டி விஸ்வநாதபுரம் மல்லுபட்டி வகையறா நா.லெ குடும்பத்தார்களால் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. முன்னதாக 3-ந் தேதி விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து 1, 2, 3, 4 என நான்கு கால பூைஜ நடைபெற்றது. இதையடுத்து யாக சாலையில் புனிதநீர் நிரப்பி வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செந்தாமரைக்கண்ணன் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான நகரத்தார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பள்ளியில் தற்போது 28 மாணவர்கள் படித்து வருகின்றனர்
- ரூ.10 லட்சத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பள்ளியாக மேம்படு த்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஏ.சி.ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் அரசு தொடக்கப்பள்ளியை மேம்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டை விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மேம்படுத்தும் பணியில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இரு வகு ப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தில் வண்ணம் தீட்டப்பட்டது. புதிய வயரிங், பால் சீலிங் அமைக்கப்பட்டது. மேலும் கதவு மற்றும் ஜன்னல் பகுதிக்கு கண்ணாடி கதவு பொருத்தப்பட்டது.
கரும்பலகையை அகற்றி விட்டு வெள்ளை நிற பலகை பொருத்தப்பட்டது. மேலும் நமக்கு நாமே திட்டத்தில் இருந்து தரை தளத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அதே திட்டத்தில் இரு வகுப்பறைகளுக்கும் தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பணி புரியும் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரி யர் சார்பில் இரு வகுப்பறை களுக்கும் ஏ.சி.வசதி ஏற்படு த்தப்பட்டுள்ளது. மின்த டையில்லா நிலையை உருவாக்குவதற்காக இன்வெர்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ரூ.10 லட்சத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பள்ளியாக மேம்படு த்தப்பட்டு வருகிறது. இது குறித்து புது க்கோட்டை விடுதி பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பம் கூறியது:- பள்ளியில் தற்போது 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊர் மக்க ளின் முயற்சியால் சகல வசதிகளுடன் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட பள்ளியாக மேம்ப டுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள ஒரிரு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற உள்ளது என்றார்.
- முதல்கட்டமாக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் அனுமதி பெற்றனர்.
- இதுவரை 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் ரீதியான தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரிகளை சேகரித்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை மூலம் அறிக்கை பெறப்பட்டது. இதேபோல விசாரணை நடத்தியவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முதல்கட்டமாக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் அனுமதி பெற்றனர். பின்னர் 3 பேர் மட்டும் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்து வந்தனர். அவர்களிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேர் வர மறுத்த நிலையில், அவர்கள் பரிசோதனைக்கு எதிர்ப்பு தொிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் வாதிட்டனர். இதில் 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக புதுக்கோட்டை கோர்ட்டு மூலம் அனுமதி பெற சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேருக்கும் பரிசோதனைக்கு அனுமதி கோரி புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதன்படி அந்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவுபடி அந்த 8 பேரும் அதாவது சுபா, இளவரசி, ஜானகி, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை 11.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட மாதிரிகளை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொன்னமராவதியில் ஓய்வுபெற்ற கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை ;
பொன்னமராவதி பூக்குடி வீதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 64). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 2 மனைவிகளும், 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் தங்கமணி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தங்கமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






