என் மலர்
புதுக்கோட்டை
- விராலிமலை அருகே மாயமான இளம்பெண்ணின் பிணம் கிணற்றில் மிதந்தது
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விராலிமலை.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுநகரை சேர்ந்தவர் காஜாமைதீன் இவரது மகள் தஜ்லீன்பானு (வயது24). இவர் தாய் தந்தை இறந்த நிலையில் சகோதர்களுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், இவரை திருமணம் செய்துகொள்ள சொல்லி சகோதரர்கள் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்த தஜ்லீன்பானு திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவரது சகோதரர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டு கிணற்றில் தஜ்லீன்பானு பிணமாக கிடந்துள்ளார்.உடனடியாக இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி பெண்ணின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஜ்லீன் பானுவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டை பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்
- கர்நாடக முதல்வரிடம், தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு
புதுக்கோட்டை,
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத தமிழக தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.பின்னர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-கர்நாடகாவில் தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் காவிரிஆற்றில் மேகதாது இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என தெரிவித்துள்ளனர் . அதற்கு தமிழக முதல்வர் கண்டனம்தெரிவிக்காமல் அங்கு சென்று வந்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டார். காவிரி விசயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழக அமைச்சர் கள் முதல்வருக்கு அழுத்தம் தரவேண்டும். இல்லையெனில் புதுக்கோட் டையில் அமைச்சர் ரகுபதி வீட்டு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கர்நாடகாவில் 2012 பாஜக அரசு அணை கட்டும் பணிகளை ஆரம்பித்த போது அதற்கு தமிழக பாஜக சார்பாக எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார்.பேட்டியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் குருஸ்ரீராம், மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், மாநில பொதுக்குழு மயில் சுதாகர், தரவு மேலாண்மை மாநில செயலாளர் கார்த்திகேயன், நகரத்தலைவர் சக்திவேல், ஊடகப்பிரிவு தலைவர் கோவேந்திரன், மாவட்ட செயலாளர் சுந்தரவேல், பிரசாத் உட்பட பலர் இருந்தனர்.
- கறம்பக்குடி அருகே ஆத்தியடிப்பட்டியில் அடிப்படை வசதிகள்
- மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி
கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சி ஆத்தியடிப்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யவில்லை.
இதேபோல் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை மனு அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை தவிர ஆத்தியடிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கடந்த 2020-21-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி வழங்கியும், இதுவரை சுற்றுச்சுவர் கட்டி தரப்படவில்லை. மேலும் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் சேதமடைந்த மின்மாற்றியை மாற்றி தரக்கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை மாற்றி தரவில்லை. ஆத்தியடிப்பட்டி கிராமத்திற்குள் வந்து செல்லும் அரசு நகர பஸ் சரியாக இயக்கப்படுவதில்லை. இந்த கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் இன்று காலை புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலை புதுப்பட்டி மூவர் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கோட்டைபட்டினத்தை சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
- 5 நாட்டிக்கல்லுக்கு குறைவான தூரத்தில் மீன் பிடித்ததால் மீன்வளத்துறை நடவடிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில் இதே பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகுகள் உள்ளன. விசைப்படகுகள் கடலுக்குள் 5 நாட்டிக்கல் அப்பால் சென்று தான் மீன்பிடிக்க வேண்டும். 5 நாட்டிக்கல் கீழ் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என்பது இந்திய மீன் பிடிச்சட்டத்தின் விதியாகும்.
இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விசைப்படகுகள் 5 நாட்டிக்கல் கீழ் மீன் பிடிக்கிறார்கள் என்றும், இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் புகார் பெறப்பட்டதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் அதிகாரிகள் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 2 விசைப்படகுகள் கரைப்பகுதியில் மீன்பிடித்தது தெரிய வந்தது. தொடர்ந்து 2 விசைப்படகு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மறுபடியும் கரைப்பகுதியில் மீன் பிடித்தால் விசைப்படகு மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஒலியமங்கலம், மறவாமதுரை, கொன்னையம்ப்பட்டி, காரையூர்,மேலத்தானியம் ஊராட்சிகளில் வசதி படைத்தவர்களை இணைத்தும் உண்மையான பயனாளிகளை புறக்கணித்தும் வெளியிடப்பட்டுள்ள வறுமைக்கோட்டு பட்டியலை ரத்து செய்து,உரிய முறையில் விசாரணை நடத்தி தகுதி உள்ள பயனாளிகளை பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்துபொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்து,காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது விதொச ஒன்றிய செயலாளர் பி. ராமசாமி தலைமை தாங்கினார். நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.மாநில செயலாளர் எஸ்.சங்கர். உள்ளிட்ட 300க்கும் மேற்ப ட்டோர் பங்கேற்றனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக்களை அளித்தனர்.
- பொன்னமராவதியில் சடலத்துடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- மயானத்தில் புதைக்க திடீர் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டம்
பொன்னமராவதி,
பொன்னமராவதி அருகே உள்ள பி உசிலம்பட்டி ஊராட்சி ஏனமேடு பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (65) என்ற முதியவர் உடல் நலக்குறைவின் காரணமாக இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் அங்குள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது அந்த இடத்தினை தனிநபர் ஒருவர் பட்டா பெற்றுள்ளார் எனக் கூறி வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தடுத்துள்ளனர்.இதனை அடுத்து இறந்து போன அழகர்சாமியின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பொன்னமராவதி பூலாங்குறிச்சி வேகுபட்டி நால்ரோடு பிரிவு சாலையில் இறந்தவர் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் உதவி கலெக்டர் திருஞானம் மற்றும் பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், டிஎஸ்பி அப்துல் ரகுமான் ஆகியோர் போராட்டம் நடத்தியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் நாளை தாசில்தார் அலுவலகத்தில் பேசிக் கொள்ளலாம். தற்பொழுது வருவாய்த் துறையால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இறந்தவர் உடலை அடக்கம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.
- ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளதை கண்டு பெண் அதிர்ச்சி
- தனிப்படை அமைத்து பதிவிட்டவதை கைது செய்த போலீசார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே 23 வயதுடைய ஒரு பெண் அவரது செல்போனில் இருந்து தவறுதலாக ஒரு செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியை அனுப்பிருக்கிறார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தபெண் சமூக வலைதளங்களில் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பெண்ணிடம் பேசிய நபர் அந்த பெண்ணின் பெயரில் ஒரு ஐ.டி.யை ஓப்பன் செய்து அதில் பெண்ணின் படத்தில் முகத்தை மட்டும் வைத்து விட்டு ஆபாச முறையில் மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து இலுப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி உத்தரவின் பேரில் அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்தது திருவள்ளூர் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கோவர்தன் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவர்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பெரம்பலூரில் நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார்
- நிதி நிறுவனம் நடத்திய 3 பேர் கைது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் சபரிநாதன் (வயது 35), அஜித்குமார் (32), சதீஷ் குமார் (29) ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். ஒரு குறிப்பிட்டதொகை செலுத்தினால் அதற்கு இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என்று கூறி பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் வசூல் செய்து உள்ளனர். ஆனால் அவர்கள் கூறிய காலக்கெடுவிற்கு முடிந்த பின்னரும் இரு மடங்கு பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது உரிய பதில் கிடைக்கவில்லை.இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள், புதுக்கோட்டை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சபரிநாதன் உள்பட 3 பேரையும் கைது செய்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நிலக்கடலைப் பயிர் மீது சுருள்பூச்சிகள் தாக்குதல் தொடங்கி உள்ளது
- கட்டுப்படுத்த வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் சுருள்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சுருள்பூச்சிப் புழுக்கள் இலைகளைத் துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடுநரம்பில் துளையிட்டு அதனுள் இருந்துகொண்டு சேதம் விளைவிக்கும். பின்னர், வளர்ந்த புழுக்கள் இலைகளைச் சுருட்டி அதனுள் புகுந்துகொண்டு பச்சையத்தைச் சுரண்டிச் சேதம் விளைவிக்கும். அதிகளவில் தாக்குதலுக்குண்டான செடிகள் காய்ந்தும் சுருங்கியும் காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட வயலைத் தொலைவிலிருந்து பார்த்தால் எரிந்து காய்ந்தது போல் காணப்படும்.நிலக்கடலை சாகுபடியில் ஊடுபயிராகத் தட்டைப்பயறு அல்லது உளுந்துப் பயிரினை 4-க்கு 1 எனும் விகிதத்தில் விதைக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு விளக்குப்பொறி 5 எண்கள் வீதம் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை வைத்துத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்கிற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கர் ஒன்றுக்கு 20,000 எனும் அளவில் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை வெளியிட்டுக் கட்டுப்படுத்திடலாம். செடி ஒன்றுக்கு 2 முதல் 3 புழுக்களுக்கு மேல் தென்பட்டால், அதாவது பொருளாதார சேத நிலையினைத் தாண்டும்பொழுது ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் இமாமெக்டின் பென்சொயேட் 100 கிராம் அல்லது ஸ்பினோசாடு 45 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 20 இ.சி. 500 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.மேலும் விவசாயிகள் உழவன் செயலியில் பூச்சிப் புலானாய்வு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயியின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடைபெற்று வருகிறது
- 4-ம் நாளில் நற்றமிழ் முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் கம்பன் பெருவிழா 10 நாள் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இதன் நான்காவது நாள் நிகழ்ச்சி நேற்று இரண்டு அமர்வுகள் இணைத்து நடத்தப்பட்டது. முதல் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கலந்துக் கொண்டு எழுச்சி உரையாற்றுவதாக இருந்தது. அவர் பெங்களுரில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்ற காரணத்தினால் கலந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அதனால் இரண்டு அமர்வுகளையும் இணைத்து ஒன்றாக நடத்தப்பட்டது. சென்னையை சேர்ந்த நாராயணன் மானுடத்தின் மகத்துவங்கள் என்ற தலைப்பிலும், முனைவர் அப்துல் சமது கம்பனில் சமூக அழகியல் என்ற தலைப்பிலும், முனைவர் கலியபெருமாள் ஏழை ஏதலன் என்ற தலைப்பிலும் நற்றமிழ் முற்றத்தை சிறப்பாக கொடுத்தனர் .நிகழ்ச்சியல் தமிழ் ஆசியர் கழக தலைவர் திருப்பதி, ஆர்த்தி ஹோட்டல் குமரகுரு, கட்டுனர் சங்க மாவட்ட தலைவர் தாமரைச் செல்வம், மாவட்ட வர் த்தக கழக துணைத்தலைவர் அசரப் அலி, சிறு தொழில் அதிபர் கள் சங்கம் தலைவா; ராஜ்குமார் , தொல்லியியல் ஆய்வு கழக இணைச் செயலாளர் பீர்முகமது, மதுரை வழக்கறிஞர் இருளப்பன், மாவட்ட வர்த்தக கழக தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சவரிமுத்து, அறந்தாங்கி வர் த்தக சங்க தலைவர் காமராஜ், ஆலங்குடி மனமோகன், திருக்குறள் கழக தலைவர் ராமையா ஆகியோருக்கு பொ ன்னாடை அணிவிக்கப்பட்டு துணை த்தலைவர் முருகப்பனால் கௌரவிக்கப்பட்டனர் நன்றியுரையை சேது கார் த்திகேயன், லெட்சுமி அண்ணாமலை ஆற்றினார் கள். நிகழ்ச்சியில் கவுன்சில் சுப.சரவணன், செந்தாமரை பாலு, கம்பன் கழக நிர் வாகிகள் பொருளாளார் கோவிந்தராசன், துணைத்தலைவர் எம்.ஆர் .எம்.முருகப்பன், துணை பொருளாளர் ராமசாமி, கூடுதல் செயலாளர் பாரதி, இணைச் செயலாளர் கள் முருகையன், காடுவெட்டி குமார், கருணாகரன், டாக்டர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்
- பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
- முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசுத் தொகை வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகுமார் (பொறுப்பு) தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தலைவர் சிராஜுதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற சிலை தடுப்பு காவல் துறை அதிகாரி பொன். மாணிக்கவேல் கலந்துகொண்டு அரசு பொது தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ரூ.2.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும் அவர் பேசும் பொழுது, பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருக்கும் அச்சம், வெட்கம் ஆகியவற்றை தூக்கி எறிந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நன்கு படித்து பொது வாழ்விலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.நிகழ்ச்சியில் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா சீனிவாசன், அரவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் காடவராயர், பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை ஷப்னம் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிலரங்கம் தொடங்கியது
- 5 நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மற்றும் ஐசிடிஏசிடி அகாடமி இணைந்து நடத்தும் 5 நாட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பப் பயிலரங்கம் நடைபெற்றது.கல்லூரி இயக்குனர்ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன் வழிகாட்டுதலின் படிதுவங்கிய இப்பயிலரங்க துவக்க விழாவில், கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமையேற்று பயிலரங்கை துவக்கி வைத்தார். கணினி அறிவியல் துறை தலைவர்இளவரசி வரவேற்புரை நிகழ்த்தினார்.ஐசிடிஏசிடி அகாடமியின் முதன்மை தொழில் நுட்பபயிற்றுனர் ராகவேந்திரசாமி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி டீன் ராபின்சன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.இப்பயிலரங்கில் மைக்ரோசாப்ட் அஸுர்-ஏஐ-ன் பயன்பாடு குறித்து முழுமையாக விளக்கப்பட உள்ளது. மேலும்ஐசிடிஏசிடி அகாடமியின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் .காளிராஜ் உதவிப் பேராசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் சசிகலா நன்றியுரை கூறினார்.






