என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் நடைபெற்றது
    • வட்டார கல்வி அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை குறித்த வாகன பிரச்சாரம் நடைபெற்றது. அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பிரச்சார வாகனத்தை வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆடல் பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் என்னும் எழுத்தும் திட்டம், அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், சுரேஷ்குமார், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா மற்றும் பள்ளி மேலாண்மைகுழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை கறம்பக்குடியில இலவச யோகா பயிற்சி
    • அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் பங்கேற்பு

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பல்லவராயர் மணி மண்டபக்குழு மற்றும் பன்னீர் தேவர் அறக்கட்டளை இணைந்து யோகா பயிற்சி பட்டறையை கறம்பக்குடியில் தனியார் மண்டபத்தில் துவங்கினர். நிகழ்ச்சியை பன்னீர் தேவர் அறக்கட்டளையின் செயலாளர் ப கருப்பையா துவங்கி வைத்தார்.. இதில் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் சுந்தர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு யோகாவின் பயிற்சி முறை அதன் வகைப்பாடு மற்றும் செயல் விளக்கத்தை எடுத்து கூறினார். மேலும் திருமூலர் எழுதிய திருமந்திர நூலில் உள்ள யோகாவின் வழிமுறை மற்றும் நேர கால அளவுகள் படி பயிற்சியை செய்து காண்பித்து விளக்கினார். இந்த பயிற்சியின் மூலம் மனிதர்களுக்கு உண்டாகும் சுவாசக் கோளாறு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பயிற்சியையும் செய்து காண்பித்தார்.முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேனிநாதன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்க செயலாளர் இரா முத்தையா, ஆசிரியர் அப்பு, தட்சிணாமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் திருமாறன் நன்றி கூறினார்.

    • 120க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி
    • 5வது ஆண்டு தகுதிப்பட்டை வழங்கும் விழா

    அறந்தாங்கி,

    ஆவுடையார்கோவில் பகுதியில் தக்ஸ்னாஸ் மார்ஷியஸ் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பில் கராத்தே சிலம்பம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தகுதி பட்டை வழங்கப்படுகிறது. வெள்ளை, மஞ்சள், பச்சை, ஊதா, காவி, கருப்பு ஆகிய நிறங்களில் தகுதியின் அடிப்படையில் தகுதி பட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் 5-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில் பள்ளித்தாளாளர் அருளரசு தலைமை வகித்தார். தக்ஸ்னாஸ் மார்ஷியஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்து தகுதிப்பட்டைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பிராங்கோ எடின், தேர்வு நடத்துனர் சண்முகம், ஒன்றியத் தலைமை பயிற்சியாளர் சரவணன், சிறப்பு அழைப்பாளர்கள் சோமசுந்தரம், ராசப்பா, ஆனந்த், ரமேஷ், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • 14 மொழிகளில் தொகுக்கப்பட்ட பிரதமரின் உரை டிஜிட்டல் புத்தகமாக வெளியீடு
    • ஏவிசிசி கணேசன் முன்னிலையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டார்

    புதுக்கோட்டை,

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மனதின் குரல் உரையானது, புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி பள்ளி வளாகத்தில் நேரடியாக தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், சமூக சேவகர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர். பிரதமரின் நூறாவது உரையாடலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், 14 மொழிகளில் தொகுக்கப்பட்ட பிரதமரின் மன் கி பாத் டிஜிட்டல் புத்தகத்தை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் ஏவிசிசி கணேசன் முன்னிலையில், டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டார். முதல் பிரதியை பாஜக மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், நகர தலைவர்கள் லெட்சுமணன், சக்திவேல், அணிப்பிரிவு மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், மணிராஜன் மற்றும் நகர நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

    • டபேதாரை கௌரவப்படுத்திய கலெக்டர்
    • புதுக்கோட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு டபேதாராக இருந்தவர் அன்பழகன். இவர் மாவட்ட கலெக்டர்கள் உமா மகேஸ்வரி மற்றும் தற்போது செயல்பட்டு வரும் கவிதா ராமு ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்பழகனை மாவட்ட கலெக்டர் தனது காரில், அவர் அமர்ந்து செல்லும் இடத்தில் அன்பழகனை அமர வைத்து அவர் வீடு உள்ள அடப்பன் வயல் ஒன்றாம் வீதியில் உடன் சென்று வீட்டில் இறக்கி விட்டு அதன் பின்னர் வீட்டில நடைப்பெற்ற விருந்தில் கலந்துக் கொண்டார். அப்போது அன்பழகனுக்கு பரிசுகள் வழங்கி அவரை கௌரவப்படுத்தினார். அன்பழகன் ஓய்வு பெற்றதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் தனது காரில் கொண்டு சென்று வீட்டில் விட்டதை புதுக்கோட்டை மக்கள் வெகுவாக பாராட்டினர். 

    • அறந்தாங்கி நகராட்சி பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
    • இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ரேணுகா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    இறுதியில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணை தலைவர் முத்து, வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், அன்பழகன், நிஸார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் விஸ்வமூர்த்தி, மங்கையர்கரசி, அசாருதீன், இடைநிலை ஆசிரியர் நிர்மல்சகில்தா உள்ளிட்ட ஆசிரியர்கள் அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


    • இலுப்பூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக இந்த போட்டியினை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர். சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த போட்டியில் 850 காளைகளும், 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.திருச்சி, மதுரை, அரியலுர், தேனி, பெரம்பலூர், மணப்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 850 காளைகள் கலந்து பங்கேற்றுள்ளது. காளைகளுக்கும், காளையர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் சார்பில் அண்டா, சைக்கிள், தங்க நாணயம், உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.அது மட்டுமல்லாமல் விழா குழு சார்பில் கட்டில், பேன், ஹாட்பாக்ஸ் , டைனிங் டேபிள், கிப்ட் பேக் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து பார்த்து ரசித்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குழந்தை திருமணங்களை தடுத்தலில் சிறப்பான பங்ளிப்பை வழங்குகிறது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் பாராட்டினார்
    • தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் 21 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர்மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளியின் வகுப்பறை கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் குறித்தும், கழிப்பறை வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது குறித்தும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பள்ளியில் கழிப்பறை வசதி தேவைப்படுவதை அறிந்து, மாவட்ட கலெக்டர் 2 நாட்களுக்குள் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்ததற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், பள்ளியின் மேம்பாட்டு வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் 21 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஒரு குழந்தை தொழிலாளர்கள் கூட இல்லாத நிலையை உருவாக்கும்வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பேருந்து நிலையங்கள், சாலை சிக்னல்களில் குழந்தை தொழிலாளர்கள் குறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை நகர்மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான இடவசதி மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குற்றங்களை தடுத்தல், போஸ்கோ சட்டம், குழந்தை திருமணங்களை தடுத்தல் போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தை குழந்தை களின் நட்பு மாவட்டமாக முன்னெடுக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மேம்பாடு அடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.மேலும் கூர்நோக்கு இல்லங்களில் சிறார்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது குறைக்கப்படும். குழந்தைகளே தாங்களாக முன்வந்து தங்களுக்கு ஏற்படும் குற்றங்களை புகார் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்தும் பொழுது அவர்களின் மீதான குற்றங்கள் குறையும் என்றார்.

    இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், புதுக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வேலுச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை அரிமளத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • இதில் நூற்றுக்கும் மேறபட்டோர் பங்கேற்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை அடுத்த அரிமளத்தில் உலக பூமி தின தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இளையோர் அமைப்பை சார்ந்த இளைஞர்கள், சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு, புதுக்கோட்டை ரோஸ் நிறுவனம், டி.டி.எச் ரூரல் லிட்டரசி அண்ட் ஹெல்த் புரோகிராம் இணைந்து நடத்திய இந்த பேரணிக்கு இளையோர் அமைப்பின் தலைவர் சத்யா தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் அகிலா பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.

    பாடல்கள், ஒயிலாட்டம், பறையாட்டம் ஒலிக்க சுற்றுசூழல் விழிப்புணர்வு கோஷங்களுடன் நடைபெற்ற இந்த பேரணியின் முடிவில், நாடகம் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில், ஜூன் 5ம் தேதி வரை தொடர்ந்து சுற்றுசூழல் பாதுகாப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. டி.டி.எச்.-ன் சிந்தியா இளையோர் அமைப்பு சங்கீதா, பத்மினி, கீர்த்தனா, ரோஸ் நிறுவன விஜயா கலைச்செல்வி, வேலாயுதம், மதுரை செந்தில், பாண்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரச்சார பேரணியில் கலந்து கொண்டனர்.


    • கந்தர்வகோட்டை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதல், முதலாம் ஆண்டு நிறைவு விழா, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனி திருவீதி உலா மற்றும் திருமுறைகள் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்து நால்வர் திருமேனிகள் மற்றும் திருமறைகள் அடங்கிய பெட்டிகளை சிவன் அடியார்கள் தங்களின் சிரமேல் வைத்து பக்தி பெருக்குடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கைலாய வாத்தியம் முழங்க திரு வீதிஉலா நடைபெற்றது.திருவீதி உலாவின் போது சிவன் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் ஆங்காங்கே பொதுமக்கள் நீர்மோர், இளநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் சென்னை, பட்டுக்கோட்டை, திருச்சி, கந்தர்வகோட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


    • வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
    • காளை ஒன்று அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட இழுவை கம்பியில் மோதியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரசு விதிகளின்படி நடைபெற்ற இப்போட்டியில் புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை, திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. இதனை அடக்குவதற்கு 300 வீரர்கள் களத்தில் குதித்தனர்.

    வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சில காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தனர். சில காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றது.

    அப்படி சென்ற காளை ஒன்று அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட இழுவை கம்பியில் மோதியது. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது. இதில் 14 பேர் காயங்களுடன் துடித்தனர். அவர்களை அங்கிருந்த டாக்டர்கள் முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • புதுக்கோட்டை நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • வரி வசூலில் காட்டும் வேகத்தை ஆக்ரமிப்பு அகற்றுவதிலும் காட்ட வேண்டும் என விஜய் மக்கள் இயக்க உறுப்பினர் பர்வேஸ் பேசினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரா ட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடை ப்பெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமை வகித்தார். துணை த்தலைவர் லியாகத்அலி முன்னிலை வகித்தார். ஆணையர் (பொ) சேகரன் மற்றும் அதிகாரிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தலைவர் தனது தலைமையுரையில் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கும், புதுக்கோட்டை புதிய பேரூந்து நிலையத்தில் கட்டுமான பணிகளுக்கான ரூ.25 கோடி அரசு ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவித்தார்.

    மேலும் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளை தனியார் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளவிருப்பதால் தூய்மையான நகராட்சியாக மாறும் என்றும் தெரிவித்தார்.விஜய் மக்கள் இயக்க நகர்மன்ற உறுப்பினர் பர்வேஸ் பேசுகையில் அதிகாரிகள் வரி வசூல் செய்வதில் காட்டும் வேகத்தை ஆக்ரமிப்பு அகற்றுவதிலும் காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.திமுகவை சேர்ந்த காந்திமதிபிரேம்ஆனந்த் பேசுகையில், எனது வார்டுக்கு பல பணிகள் ஒதுக்க ப்பட்டதாக அறிவிப்போடு மட்டும் உள்ளது.

    எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. பைப் லைன் கொடுக்கும் ஒப்பந்தகார் யார் எனவே தெரியவில்லை. எனவே கவுன்சிலர்களுக்கு பணிகளை செய்பவர் களை தெரியப்படுத்துங்கள் என்றார்.அதிமுகவை சேர்ந்த செந்தில்குமார் பேசுகையில் கலைஞர் கருணாநிதி அரசு பெண்கள் கல்லூரி எதிரே அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு சென்ற கூட்டத்தில் கலைஞர் பெயர் வைக்கப்படும் என தெரிவித்தீர்கள். ஆனால் தீர்மானத்தில் கையொப்பம் வாங்கவில்லை. ஆகையால் இந்த கூட்டத்தில் அதை எதிர்க்கிறோம் என்றார். இதே போல் உறுப்பினர் கள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.


    ×