என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யபட்டனர்
    • காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

    பெரம்பலூர:

    பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி சூரியா நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரஞ்சித் (வயது 22). இவரது நண்பர் சின்னசாமி மகன் ராஜ்குமார் (28). இவர்கள் 2 பேரும் நேற்று காலை எசனையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ரஞ்சித்தின் தம்பி ராம்கி (20), தாயார் ராஜேஸ்வரி, ராஜ்குமாரின் தாயார் கனகா ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர்.

    அப்போது, அங்கு தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் காவலாளி சின்ராஜ் (53), காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் உள்ளே சென்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகியோர் சின்ராஜை தாக்கியுள்ளனர். இதனை தட்டி கேட்ட தற்காலிக ஒப்பந்த ஊழியர்களின் கண்காணிப்பாளர் அசோக் (28), காவலாளிகள் சுரேஷ்குமார் (37), வினோத்குமார் (42), துப்புரவு பணியாளர்கள் கவுரி (31), சங்கீதா (32) ஆகியோரையும் மேற்கண்ட 3 பேரும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • பெரம்பலூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையிலும், அகரம்சீகூர் ஊராட்சியில் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பெரம்பலூர் அருகே தச்சு தொழிலாளர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை போனது
    • வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற போது சம்பவம் நடந்தது

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 48). தச்சுத் தொழிலாளியான இவர், திருமணமாகி குடும்பத்துடன் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வீட்ைட பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு குடும்பத்துடன் சென்றார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி விட்டனர்.

    இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், உடனே வீடு திரும்பினார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 16 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் லப்பைகுடிக்காட்டில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது
    • கபடியில் போலீசும், கைப்பந்தில் பொதுமக்களும் வெற்றிவாகை சூடினர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக கபடி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பாக ஒரு அணியும் பொதுமக்கள் சார்பாக ஒரு அணியும் என இரு அணிகள் கலந்து கொண்டனர். இரண்டு அணியும் சிறப்பாக விளையாடிய நிலையில் இறுதியாக கைப்பந்து போட்டியில் பொதுமக்கள் அணியும் கபடி போட்டியில் காவல்துறை அணியினரும் வெற்றி வாகை சூடியது.

    விளையாட்டு போட்டியின் இறுதியாக வெற்றி பெற்ற அணியினருக்கும் சிறப்பாக விளையாடியவர்களை பாராட்டியும் பரிசு பொருட்களை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளா தேவி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மங்களமேடு டி.எஸ்.பி. சீராளன், மங்களமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசுவரன் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மதுபானம் விற்ற முதியவர் கைது செய்யபட்டார்
    • அவர்களிமிருந்து சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 228 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள பென்னக்கோணம் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மது விலக்கு சப் இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி தலைமையில் போலிசார் பென்னக்கோணம் பகுதியில் ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது பென்னக்கோணத்தில் வேலு மகன் பெரியசாமி (வயது 82) வீட்டில் சட்டவிரோதமாக அரசு மதுபானபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.

    அங்கு மதுபாட்டில்களை வைத்து விற்றுக்கொண்டு இருந்த பெரியசாமியை மது விலக்கு போலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிமிருந்து சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 228 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்த பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமம் 3-வது வார்டு, காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் நந்தினி(வயது 16). தமிழ்ச்செல்வி எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி, எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயின்று அரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மணிகண்டன், தமிழ்ச்செல்வி வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மதியம் 1.45 மணியளவில் வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் நந்தினி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    • பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வாலிகண்டபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் உள்படமொத்தம் 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பை டி.வி. உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள், பா.ஜ.க.வினர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    • புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி(வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி சம்பவத்தன்று விஷம் குடித்து மயக்கமடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


    • 2 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசனின் மகன் ரோஹித் ராஜ்(வயது 14). இவன் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில், அவனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் (22), திருநகரை சேர்ந்த அய்யனார் (23) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் ஆகிய 5 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். இதில் சீனிவாசன், அய்யனாரை திருச்சி மத்திய சிறையிலும், 3 சிறுவர்களை இளம்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர்.

    இந்நிலையில் சீனிவாசன், அய்யனார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று சீனிவாசன், அய்யனார் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

    • சேலைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 8 சேலைகள் பறிமுதல் செய்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் கடைவீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடைக்கு சம்பவத்தன்று மதியம் துணிகள் வாங்குவதுபோல் வந்த பெண்களில் 2 பேர் சேலைகளை திருடிக்கொண்டு கடையை விட்டு அவசர அவசரமாக வெளியே செல்ல முயன்றனர். இதனை கண்ட ஜவுளிக்கடையின் மேலாளர் வித்யா சாகர் அந்த பெண்களை பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவர் பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபாடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகேசனின் மனைவி ஜெயலெட்சுமி (வயது 37), மற்றொருவர் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசனின் மனைவி பிரியதர்ஷினி (20) என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு ஜெயலெட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 8 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


    • குன்னம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பிளஸ்-1 மாணவர் பலியானார்
    • இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவருடைய மகன் திருவேங்கடம் (வயது 16). இவர் வரிசைபட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற திருவேங்கடம் மாலை தனது விளையாட்டு ஆசிரியர் செந்துறை குமிழியனியத்தை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து ெசன்று கொண்டிருந்தார்.

    கொளப்பாடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியர் கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்றது. அதனை பார்த்த திருவேங்கடம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிளை சரி செய்து தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பியபோது எதிரே வந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் திருவேங்கடத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • பெரம்பலூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புஜங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகள் புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை பாசன வாய்க்கால்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளைவாய்க்கால் எண்கள் 25,26,27 ஆகியவற்றிற்காக நில கையகயெடுப்பு அறிவிப்பானை செய்திதாள் மூலம் அறிந்தோம்.

    மூன்று கிளைவாய்க்கால்களும் சுமார் 4 கி.மீ நீலத்திற்கு அமைத்து அதற்காக சுமார் 600 ஏர்ஸ் பாசன நிலம் கையகப்படுத்த உள்ளனர், ஆனால் இந்த வாய்க்கால்கள் அமைய உள்ள வழித்தடங்களில் 100 ஏர்ஸ் நிலங்கள் கூட தரிசு மற்றும் மானவாரி நிலங்கலாக இல்லை. இந்தநிலையில் 3 வாய்க்கால்கள் அமைக்க பட்டால் கிராம பொது மக்களாகிய நாங்கள் மிகபெரிய துன்பங்களையும் துயரங்களையும் வாழ்வாதாரங்களையும் அனுபவிக்க நேரிடும்.எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்தின் வழியாக அமைய உத்தேசித்துள்ள கள ஆய்வு செய்து கிளை வாய்க்கால்கள் அமைக்கும் முயற்சியை கைவிட கோகிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


    ×