search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது
    X

    பெரம்பலூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது

    • பெரம்பலூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யபட்டனர்
    • காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

    பெரம்பலூர:

    பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி சூரியா நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரஞ்சித் (வயது 22). இவரது நண்பர் சின்னசாமி மகன் ராஜ்குமார் (28). இவர்கள் 2 பேரும் நேற்று காலை எசனையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ரஞ்சித்தின் தம்பி ராம்கி (20), தாயார் ராஜேஸ்வரி, ராஜ்குமாரின் தாயார் கனகா ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர்.

    அப்போது, அங்கு தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் காவலாளி சின்ராஜ் (53), காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் உள்ளே சென்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகியோர் சின்ராஜை தாக்கியுள்ளனர். இதனை தட்டி கேட்ட தற்காலிக ஒப்பந்த ஊழியர்களின் கண்காணிப்பாளர் அசோக் (28), காவலாளிகள் சுரேஷ்குமார் (37), வினோத்குமார் (42), துப்புரவு பணியாளர்கள் கவுரி (31), சங்கீதா (32) ஆகியோரையும் மேற்கண்ட 3 பேரும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×