search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் லப்பைகுடிக்காட்டில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
    X

    பெரம்பலூர் லப்பைகுடிக்காட்டில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

    • பெரம்பலூர் லப்பைகுடிக்காட்டில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது
    • கபடியில் போலீசும், கைப்பந்தில் பொதுமக்களும் வெற்றிவாகை சூடினர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக கபடி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பாக ஒரு அணியும் பொதுமக்கள் சார்பாக ஒரு அணியும் என இரு அணிகள் கலந்து கொண்டனர். இரண்டு அணியும் சிறப்பாக விளையாடிய நிலையில் இறுதியாக கைப்பந்து போட்டியில் பொதுமக்கள் அணியும் கபடி போட்டியில் காவல்துறை அணியினரும் வெற்றி வாகை சூடியது.

    விளையாட்டு போட்டியின் இறுதியாக வெற்றி பெற்ற அணியினருக்கும் சிறப்பாக விளையாடியவர்களை பாராட்டியும் பரிசு பொருட்களை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளா தேவி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மங்களமேடு டி.எஸ்.பி. சீராளன், மங்களமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசுவரன் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×