என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது
    • 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டியில்லாப் பயிர்க்கடன் நவம்பர் 15 -ந் தேதி முடிய ரூ.245.08 கோடி 29,524 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக நடப்பாண்டில் அக்டோபர் 2023 முடிய 41,405 விவசாயிகளுக்கு ரூ.30.22 கோடி மதிப்புள்ள 12975.366 டன் உர விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயிர் கடன், டாம்கோ, டாப்செட்கோ கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கியதில் பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது..இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அகரம்சீகூர் அருகே சாலையில் நின்ற லாரி மீது பைக் மோதி என்ஜினீயர் பலியானார்
    • மங்களமேடு போலீசார் வினோத்குமாரின் உடலை கைப்பறறி விசாரணை நடத்தி வருகின்றனர்

    அகரம்சீகூர்,

    விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் வினோத்குமார் (வயது 32).இவை பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் சேஃப்டி என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் வினோத்குமார் தனது சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வாலிகண்டபுரம் சென்றார். அங்கு தனது வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இவர் மோதினார்.இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார், பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த மங்களமேடு போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செட்டிகுளம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது
    • முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடை பெற்றது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற தண்டாயுத பாணி சுவாமி கோயில் உள்ளது. மற்ற முருகன் கோயில்களில் முருகன் கையில் வேல் இருக்கும். ஆனால் இந்த கோயிலில் முருகன் கையில் வேலுக்கு பதிலாக செங்கரும்பு ஏந்தி நிற்பார். இதனால் இந்த முருகனுக்கு செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா வையொட்டி ஷண்முகா ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து தண்டாயுதபாணி உற்சவர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, விபூதி, பழவகைகள் மற்றும் கலச தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்ச வர் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளோடு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்த னூர், இரூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், பொம்மனப்பாடி, சத்திர மனை, வேலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை மற்றும் பெரம்பலூர் மாவட்ட மின்றி, வெளி மாவட்டங்க ளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பக்தர்களுக்கு பிரசாத மும், அன்னதா னமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் இருந்து சுவாமிகள் செட்டி குளம் கடைவீதியில் அமைந்துள்ள ஏகாம்ப ரேஷ்வரர் கோயி லுக்கு வந்தடைந்தது. அங்கி ருந்து சிறப்பு அலங்காரம் செய்த பிறகு வீதி உலா தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடை பெற்றது. முடிவில் சூரச ம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து செட்டி குளம் கடைவீதி அருகே உள்ள ஏகாம்பரேஷ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடை பெற்றது. 

    • மூன்றாவது ஆண்டாக அய்யப்ப பக்தர்களுக்கான அன்னதான முகாம் தொடங்கப்பட்டது.
    • இங்கு கார்த்திகை,மார்கழி என இரண்டு மாதம் முழுவதும் என வரும் ஜனவரி 14-ம்தேதி வரை என 60 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.

    பெரம்பலூர்

    அகில பாரத அய்யப்ப சேவா சங்க பெரம்பலூர் மாவட்ட யூனியன் சார்பாக சிறுவாச்சூர் மலையப்ப நகர் பிரிவு அருகே மூன்றாவது ஆண்டாக அய்யப்ப பக்தர்களுக்கான அன்னதான முகாம் தொடங்கப்பட்டது.

    முன்னதாக காலை 6 மணிக்கு கணபதி ஹோ மமும் அதனை தொடர்ந்து கோ பூஜை நடந்தது. தனலட்சுமி குழுமத்தின் தலைவர் சீனிவாசன் அன்ன தான கூடத்தை திறந்து வைத்தார். அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.

    ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியன் , லயன்ஸ் கிளப் ஆளுநர் இமயவரம்பன் , முன்னாள்

    விக்டரி லயன்ஸ் கிளப் தலைவர் குணசீலன் , முன்னாள் ஊராட்சி தலைவர் ராமராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் மத்திய துணை தலைவரும், மாநில இணை செயலாளரும், திருச்சி மாவ ட்டத்தின் செயலாளருமான ஸ்ரீதர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் சங்க கவுரவ தலைவர் சேகர், மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் பால கிருஷ்ணன், பொருளாளர் தியாகராஜன், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ரவீந்திரன், இணை செயலாளர் சதீஷ்குமார், ஆலோசகர் ரவிச்சந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இங்கு கார்த்திகை,மார்கழி என இரண்டு மாதம் முழுவதும் என வரும் ஜனவரி 14-ம்தேதி வரை என 60 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை அணிந்து அய்யப்பன் சுவாமி கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    • பெரம்பலூர் எளம்ப லூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம் ஹார விழா நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் எளம்ப லூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம் ஹார விழா நடந்தது.

    விழாவையொட்டி பாலமுருகனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவி யங்களால் அபிஷேகங்கள் செ ய்யப்பட்டு மகாதீ பாரதனை காண்பிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் நாகரத்தினம், அர்ச்சுணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீ பாரதனை காண்பி க்கப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து தெப்பக்குளம் பகுதியில் முருகன் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு எளம்பலூர் பிரம்மரிஷி மலை யடிவாரத்தில் காக ன்னை ஈஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக முருகப்பெ ருமானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக செய்ய ப்பட்டு அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொ ண்டு முருகனை வழிப்ப ட்டனர். பின்னர் அனை வருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தவயோகி தவசிநாத சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    பெரம்பலூர் மாவ ட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செட்டிகுளம் பால தண்டாயுதபாணி கோவில், வாலி கண்டபுரம் வாலீ ஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது.

    • புதிய வாக்காளர்களை சேர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
    • தேர்தல் தொடர்பான குற்றங்களில் நிலுவை நிலையினை குறைக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவிற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து வாக்காளர்களுக்கும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 ஐ பயன்படுத்த வேண்டும். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு படிவம் 8 ஐ பயன்படுத்த வேண்டும். இதுகுறித்த சிறப்பு சுருக்கத்த முகாம்கள் வருகிற 25, 26-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்படும். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலம். ஒரே கட்டமாக எப்போதும் தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் 2 இடங்களில் இருத்தல், இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    ஒரே வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இடம்பெற்றிருந்தால் வாக்காளரின் ஒப்புதல் பெற்று அவர்கள் எங்கு வாக்களிக்க விரும்புகின்றார்கள் என்பதை எழுத்தப்பபூர்வமாக பெற்ற பிறகு மற்றொரு இடத்தில் பெயர் நீக்கம் செய்யப்படும்.

    புதிய வாக்காளர்களை சேர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கல்லூரிகளில் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களிடையே எவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    பதற்றமான வாக்குச்சாவடிகளை போலீசார் கள ஆய்வு செய்ய வேண்டும். திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கபட்ட அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்த வேண்டும். தேர்தல் தொடர்பான குற்றங்களில் நிலுவை நிலையினை குறைக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    • முன்னாள் துணை சபாநாயகர் வரகூர்அருணாசலம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
    • தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செந்துறை தெற்கு ஒன்றியம் பாளையகுடி ஊராட்சி, வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பா.ம.க. ஒன்றிய துணை தலைவர்வேலுசாமி,

    தே.மு.தி.க. ஒன்றிய இளை ஞரணி துணை செயலாளர் நல்லதம்பி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான தமிழ்ச்செல்வன் தலைமையில், அமைப்புச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர்அருணாசலம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் , பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • மாரத்தான் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி , வானொலி திடலில் முடிவடைந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நல துறை சார்பில் நடந்த பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

    சமூகநல அலுவலர் ரவிபாலா தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி , வானொலி திடலில் முடிவடைந்தது. இதில் 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓடினர்.

    • விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது
    • இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    2023-24-ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் சம்பா பயிர் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை மேலும் நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்ய வருகிற 22-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு ள்ளது.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் சம்பா பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி வரும் 22-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை தூக்கியெறியவேண்டும் என மக்கள் குரல் கொடுத்தனர்.
    • தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை.

    பெரம்பலூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் பெரம்பலூரில் யாத்திரையில் பங்கேற்றார்.

    பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய நடைபயணம் ரோவர் ஆர்ச், சங்குபேட்டை, சிவன் கோவில், கடைவீதி, தெப்பக்குளம் கனரா வங்கி, பழைய பஸ்ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக வந்து ஆத்தூர் சாலை காமராஜர் வளைவு பகுதியில் முடிவடைந்தது.

    என் மண் என் மக்கள் யாத்திரையை ஜூலை 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி தென் தமிழகம், கொங்கு மண்டலம் பூர்த்தி செய்து 107-வது சட்டசபை தொகுதியாக பெரம்பலூருக்கு யாத்திரை வந்துள்ளேன். எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளேன்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை தூக்கியெறியவேண்டும் என மக்கள் குரல் கொடுத்தனர். ஏழை மக்களை பரம ஏழையாக மாற்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே 32 சதவீதம் உற்பத்தி திறனில் வளர்ச்சியில் உள்ளது. பெரம்பலூரின் உற்பத்தி திறன் வெறும் புள்ளி 6 சதவீதம் கூட கிடையாது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் ஒரு சதவீதம் கூட உற்பத்தி திறனை அடையவில்லை. 70 ஆண்டுகளாக 6 முறை தி.மு.க. ஆட்சி புரிந்தும் உற்பத்தி திறன் பெறவில்லை.

    தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. தொழிற்சாலை கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    பாசன வசதியை மேம்படுத்தவில்லை, விவசாயத்தை செழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தமிழகத்திற்கு புதிய அரசியல் தேவைப்படுகிறது. நம்மை ஒதுக்கிய அரசியல்வாதிகளை நாம் ஒதுக்கிவைக்கவேண்டும்.

    ஊழல் பட்டியல் வெளியிட்டு வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அமைச்சரவையில் உள்ள 35 பேரில் 11 பேர் மீது ஏற்கனவே ஊழல் வழக்கு உள்ளது.

    5 பேர் மீது தற்போது ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் இந்த அளவிற்கு ஊழல் செய்த அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ளனர். 30 மாதங்களில் ஊழலை சாதனையாக செய்துள்ளது தி.மு.க. அரசு.

    திருவண்ணாமலையில் சிப்காட்டிற்காக அரசு 3 ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்களாக அவர்களது விவசாய நிலத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் மீது தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த ஒரே அரசு தி.மு.க. அரசு தான்.

    அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்த பட்டியலில் உலக அளவில் முன்னாள் மந்திரி ராசா பெயர் 2-வது இடத்தில் உள்ளது. கோவையில் அவருக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    9 ஆண்டில் மத்திய அரசு தமிழகத்திற்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டுகிறது.

    தமிழகத்தில் தேர்தலில் அளித்த 511 தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என தி.மு.க. கூறுகிறது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    2014-ம் ஆண்டில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 11-வது பெரிய நாடாக இருந்தது. தற்போது உட்கட்டமைப்பு, சாலை மேம்பாடு என அனைத்திலும் முன்னேற்றம் அடைந்து உலக அளவில் பொருளதாரத்தில் 5 இடத்திற்கு உயர்ந்துள்ளது. நாகரிகமான அரசியல் தமிழக மண்ணிற்கு வரவேண்டும், வளர்ச்சி சார்ந்த அரசியல் வரவேண்டும், ஏழை மக்கள் முன்னேற்றத்திற்கான அரசியல் வரவேண்டும். அப்படிபட்ட ஆட்சி வரவேண்டும் என்றால் மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். அதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    யாத்திரையில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம், மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் நகர தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் இன்று அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெறுகிறது
    • நாளை லால்குடியில் நடக்கிறது

    பெரம்பலூர்,

    பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி பெரம்ப லூரில் இன்று நடைபெறு கிறது .

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் யாத்திரை ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, சிவன் கோவில், கடைவீதி, தெப்ப குளம், கனரா வங்கி, அம்பேத்கர் சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வழியாக காமராஜர் வளைவு பகுதியில் நிறைவடைகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை பேசுகிறார்.

    இந்த யாத்திரையில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகா னந்தம், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அவர் நாளை(17-ந்தேதி) லால்குடி தொகுதியில் மதியம் 3 மணிக்கு தனது யாத்திரையை தொடங்குகிறார். லால்குடி அருகே ஆங்கரை பிள்ளையார் கோவில் அருகில் யாத்திரையை தொடங்கும் அண்ணா மலைக்கு புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாவட்ட பார்வையாளர் யோகிதாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    திருச்சி மெயின் ரோடு வழியாக ஆங்கரை, மலை யப்பபுரம், சந்தைப்பேட்டை, லால்குடி ரவுண்டானா சென்று அங்கு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை புறநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து வருகின்றனர்

    • பெரம்பலூரில் நடன செவ்வியல் போட்டி நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலா உற்சவப் போட்டிகளான வாய்ப்பாட்டு இசைசெவ்வியல், நடனம் செவ்வியல், நாடகம், இசைக்கருவி தாளவாத்தியம், காண்கலை, இருபரிமாணம் காண்கலை, முப்பரிமாணம் நடனம், பாரம்பரிய நாட்டுப்புறவகை, உள்ளூர் தொன்மை பொம்மை விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட சாரணர் கூட்ட அரங்கில் நடைபெற்றன.

    இதில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி வே.ஹாசினி நடன செவ்வியல் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மேலும் வருகின்ற 17-ந் தேதி சேலத்தில் வைஷ்யா கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான கலை பண்பாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    நடன செவ்வியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    பள்ளியின் முதன்மை முதல்வர், துணை முதல்வர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    .

    ×