பெரம்பலூரில் - மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

முன்னாள் துணை சபாநாயகர் வரகூர்அருணாசலம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் -  மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
Published on

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செந்துறை தெற்கு ஒன்றியம் பாளையகுடி ஊராட்சி, வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பா.ம.க. ஒன்றிய துணை தலைவர்வேலுசாமி,

தே.மு.தி.க. ஒன்றிய இளை ஞரணி துணை செயலாளர் நல்லதம்பி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான தமிழ்ச்செல்வன் தலைமையில், அமைப்புச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர்அருணாசலம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் , பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com