என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது
    • முன்னதாக கோவிலில் மாணவிகளுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக பருவத்தேர்வு முடிந்து இளநிலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழும செயலாளர் விவேகானந்தன், முதல்வர் சுபலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழும தாளாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில்,இறைவன் இப்புவியில் பெண்களுக்கு இயற்கையிலே ஞானத்தை தந்துள்ளார். அஞ்ஞானத்தை நன்முறையில் பயன்படுத்திக் கல்வியால் முன்னேற வேண்டும். பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும். இறையருளால் கல்விச் செல்வம் மட்டும் அல்லாது அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் மேம்பட வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக கணபதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூரில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது
    • சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் சிறுதானிய உணவு திருவிழா ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நடந்தது.விழாவிற்கு நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா தலைமை வகித்தார். ரோவர் வேளாண்மை கல்லூரி முதல்வர் (பொ) வஹாப் முன்னிலை வகித்தார். மைய தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான நேதாஜி மாரியப்பன் சிறுதானிய கண்காட்சியை திறந்துவைத்து பேசினார். மைய நிர்வாக அலுவலர் ஜெயசீலன், மைய தொழில் நுட்ப வல்லுனர் கோகிலவாணி உட்பட பலர் பேசினர்.நிகழ்ச்சியில் சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களும், சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, அதன் பயன்பாடு, அதனால் எற்படும் நன்மைகள் பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.இதில் 100க்கு மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நேருயுவகேந்திரா கணக்காளர் தமிழரசன் வரவேற்றார். முடிவில் தன்னார்வ தொண்டர் வீரமணி நன்றி கூறினார்.

    • குன்னம் அருகே முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வழிபாடு, திருவீதியுலா, ஊர்வலம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த 8 நாட்களாக நடைபெற்றது. திருவிழாவின் சிரக நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு செட்டி ஏரியில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில் நன்னை, வேப்பூர், ஓலைப்பாடி, வைத்தியநாதபுரம், மண்டபம், கிழுமத்தூர், சாத்தநத்தம், வடக்களூர், பரவாய், பெருமத்தூர், மிளகாய்நத்தம் உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு, அம்மன் வழி விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    • சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை மண்டல துணை தாசில்தார் தங்கராசு மற்றும் கை.களத்தூர் போலீசார் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர்.



    • தடுப்பு சுவரில் இருந்து கீழே விழுந்த கூலித்தொழிலாளி இறந்தார்
    • இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 49), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7-ந்தேதி இரவு 9 மணியளவில் நாட்டார்மங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் இருந்து பெரியசாமி கீழே தவறி ஓடையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியசாமி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட்டில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 49), விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி காலை பெரம்பலூர்-துறையூர் சாலையில் அடைக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் இருந்து பாலசுப்பிரமணியன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எசனை-வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின்தடை செய்யபடுகிறது
    • நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது,

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது, என்று பெரம்பலூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி பலியானார்
    • இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்த ஜெயப்பெருமாள் மகன் ஜெயசூர்யா (வயது 26) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று சர்க்கரை தயாரிக்கும் பாய்லரின் மேல் பகுதியில் வெல்டிங் பணியில் ஜெயசூர்யா ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்க்கபட்டார்
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 84). இவர் கடந்த 15-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர்களால் கலியமூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அதே பகுதியில் வேலாயுதம் என்பவர் விவசாய கிணற்றில் கலியமூர்த்தி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதனை கண்டவர்கள் இதுகுறித்து கலியமூர்த்தியின் குடும்பத்தினருக்கும், பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கலியமூர்த்தியின் குடும்பத்தினரும், போலீசாரும் வந்தனர். பின்னர் போலீசார் கிணற்றில் இருந்து கலியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பு வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்போட்டி தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

    மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி முதல் இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி ஆகும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளதால், அதற்கான மாதிரி தேர்வுகள் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் காவலர் தேர்வுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ளவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஏதேனும் விவரங்களுக்கு 9499055913 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் 21-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாசலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. பூவைசெழியன், மாவட்ட அவைதலைவர் குணசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 21ம்தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வரும் 25ம்தேதிக்குள் ஒப்படைப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, மாவட்ட நிர்வாகிகள் ராஜேஸ்வரி, லெட்சுமி, ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், டாக்டர் நவாப்ஜான், வக்கீல் ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.

    • பெரியவடகரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு கோயில் நிலம் மீட்கப்பட்டது
    • கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியவடகரை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் உதவி ஆணையர் லெட்சுமணன் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் (கோவில் நிலம்) பிரகாசம் தலைமையில் சர்வேயர் கண்ணதாசன், வக்கீல், விஏஒ மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் சென்று கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து மீட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    ×