என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சதீஷ் எருமாட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார்.
    • சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40).

    இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை உள்ளது.

    சதீஷ் சேரங்கோட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை சதீஷ் எருமாட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் எருமாடு-சேரங்கோடு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக லாரி சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சேரம்பாடி போலீசார் லாரி டிரைவரான சோனமுத்து என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
    • குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

    இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

    தற்போது இந்த வழக்கை கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 8-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி போலீசார் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.

    சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் வாதாடினர். அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் தொலைபேசி, செல்போன் டவர் போன்றவற்றை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும் என கேட்டு வாதாடினர்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்காதர் வழக்கை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
    • ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த அய்யன்கொல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நம் நாடு பல்வேறு வகையிலும் வல்லரசு நாடாக மாறி வருவதை வெளிநாடுகள் பாராட்டி வருகின்றன.

    அதற்கு காரணம் இளைய தலைமுறைகளின் அறிவு வளர்ச்சியாகும். விளையாட்டு துறையில் சாதிப்பதற்கு பல புதிய செயல் திட்டங்களை செயல்படுத்தியதால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெரும் வெற்றி கிடைத்தது.

    புதிய கல்வி கொள்கையால் போட்டி தேர்வுகளில் எளிதாக சாதிக்க முடியும். நாடு டிஜிட்டல் மயமானதன் மூலம், கிராமபுறங்களும் வளர்ச்சி கண்டுள்ளன.

    தற்போது கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவை மிக சிறந்த வல்லரசு நாடாக உருவாக்கும் வகையில், மாணவர்கள் தங்களை தற்போதே முழுமையாக உருவாக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் வீட்டிற்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்ற அவர், ஆவணப்படத்தில் இடம் பிடித்த ரகு மற்றும் பொம்மியை பார்வையிட்டு உணவு வழங்கினார்.

    மேலும் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படும் முறைகள், யானைகள் பராமரிப்பு, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படம் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து அவர் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு மக்களை சந்தித்து பேசினார். மக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அவை முறையாக வந்து சேர்கிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    தேவர்சோலை பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்த தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்து மனு அளித்தனர். அதனை மத்திய மந்திரி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பந்தலூர் நெல்லியாளம் பகுதிக்கு சென்று அங்கு பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    • யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது.
    • யானை ஊருக்குள் வராதவாறு, ஊரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி:

    கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள பந்தலூா் இரும்புப்பாலம் மற்றும் இன்கோ நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடந்த சில நாட்களாக கட்டக்கொம்பன் என்ற யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்து வரும் யானையானது, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதோடு, விவசாயப் பயிா்களையும் சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது. எனவே இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமிலிருந்து வசீம், விஜய், பொம்மன், சீனிவாஸ் ஆகிய 4 கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டன.

    கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கட்டக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    யானை ஊருக்குள் வராதவாறு, ஊரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் கட்டக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் டிரோனும் பயன்படுத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று வனத்துறையினர் டிரோன் பறக்க விட்டு அதன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கினர்.

    டிரோன் மூலம் யானை வருகிறதா என்பதை கண்டறிந்து, அதனை ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானை எங்கு இருக்கிறது என்பதை அறிந்ததும் வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்
    • ஊட்டி நகரசபை தலைவி வாணீஸ்வரி, கவுன்சிலர்கள் முஸ்தபா, விசாலாட்சி விஜயகுமார், அபுதாகீர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.

    ஊட்டி நகராட்சி 7-வது வார்டில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊட்டி நகரசபை ஆணை யாளர் ஏகராஜ், ஊட்டி நகரசபை தலைவி வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், நகரசபை கவுன்சிலர்கள் முஸ்தபா, விசாலாட்சி விஜயகுமார், அபுதாகீர், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி, துணை அமைப்பாளர் விஜயகுமார், அரசு அதிகாரி கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   

    • யானைகளை விரட்ட 4 கும்கிகள் வரவழைப்பு
    • டிரோன் மூலமாகவும் வனத்துறை தேடுதல் வேட்டை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட எண்ணற்ற வனவிலங்குகள் உள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் இரும்புபாலம் இன்கோ பள்ளம் பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று இரவு 2 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன. பிளிறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த பொதுமக்களையும் காட்டு யானைகள் ஆக்ரோசமாக விரட்டின. அதன்பிறகு அவை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி சென்றுவிட்டன.

    பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், மாணவ-மாணவிகள் பள்ளி செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தனர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் பந்தலூா் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்காக முதுமலை புலிகள் காப்பக முகாமில் இருந்து வசீம், விஜய், பொம்மன், சீனிவாஸ் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. அவை பந்தலூர் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் வனத்துறையினர் ட்ரோன் காமிரா வழியா கவும் காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

    பந்தலூர் குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகளை கும்கிகள் உதவியுடன் நடுவழியில் தடுத்து நிறுத்தி மீண்டும் வனத்துக்குள் திருப்பி அனுப்பும் பணிகள் மும்முரம் அடைந்து உள்ளன. இதற்காக அங்கு வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பொது மக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், யானைகளை விரட்டும் பணியில் யாரும் ஈடுபட கூடாது, ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென காட்டு இலாகா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக தொலைபேசி எண்களும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

    • 315 திட்டங்களை நிறைவேற்றி மகத்தான சாதனை
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், வட்டார வளரச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் உற்சாகம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.8.58 கோடி மதிப்பில் மக்கள் நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றி சாதனை படைத்து உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக மாயன், வட்டார வளரச்சி அலுவலர்களாக ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் பயன்பெரும் வகையில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதிதிட்டம் மூலம் 230 பணிகள், ரூ.523 லட்சம் மதிப்பிலும், அனைத்து கிராம ஆண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் 24 பணிகள் சுமார் ரூ.133 லட்சம் மதிப்பிலும், மாவட்ட ஊராட்சி பொது நிதி பணிகள் மூலம் 5 திட்டப்பணிகள் ரூ.24 லட்சம் மதிப்பிலும் மேற்கொள்ளபட்டு வருகிறது.

    வட்டார வளர்ச்சி பொதுநிதி பணிகள் மூலம் 48 திட்டப்பணிகள் ரூ.94 லட்சம் மதிப்பிலும், கிராம வளர்ச்சி பொதுநிதி பணிகள் மூலம் 5 திட்டப்ப ணிகள் ரூ.4.60 லட்சம் மதிப்பிலும், நமக்குநாமே திட்டம் மூலம் 3 பணிகள், ரூ.77 லட்சம் மதிப்பில் நடந்து வருகின்றன.

    ஊட்டியில் ஒட்டு மொத்தமாக ஒரே நிதி ஆண்டில் 315 மக்கள் நலத்திட்டப்பணிகளை ரூ.8.58 கோடி மதிப்பில் செயல்படுத்தி ஊராட்சி ஒன்றியம் சாதனை படைத்து வருகிறது.

    • அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட பள்ளிவளாக தடுப்புச்சுவர் மற்றும் முடிவுற்ற புனரமைப்பு பணிகளையும் தொடங்கினார்
    • 21 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த தேனாடு பகுதியில் ராஷ்டிரிய கிராம சுராஜ் அபியான் அபியான் திட்டத்தின் கீழ், ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம், கோவை நெட்கான் நிறுவனத்தின் சமூகபொறுப்பு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட பள்ளிவளாகத்தில் தடுப்புச்சுவர் மற்றும் முடிவுற்ற புனரமைப்பு பணிகளை நீலகிரி எம்.பி ஆ.ராசா திறந்து வைத்தார்.

    பின்னர் கடந்த ஆண்டு 10-ம்வகுப்பு பொதுத் தேர்வில் 3 இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து ஆ.ராசா எம்.பி நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் பழங்குடியினர் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    ஒரு சமூகம் முன்னேற்ற கல்வி அவசியம். இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வித்துறை சார் பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு துறையின் வாயிலாகவும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனை வரும் தெரிந்து கொண்டு பயன்பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கீழகட்டப்பெட்டு பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.2.66 லட்சம் மதிப்பிலான 21 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

    மேலும் அதே பகுதியில் நடைெற்று வரும் 3 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டவர், அங்கு பணிகளை விரைவில் முடித்து சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து கெனவுக்கரை ஊராட்சி, குறிஞ்சி நகரில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஆ.ராசா எம்.பி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முதன்மை திட்டஇயக்குனர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் செல்வக்கு மார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் செல்வகுமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரவிக்குமார், முஸ்தபா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆல்வின் (தேனாடு), ஜெயப்பிரியா (கெணவக்கரை), நெட்கான் நிறுவன மேலாண்இயக்குனர் மகாலிங்கம், இயக்குனர் வடிவு, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டி யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது.
    • அ.தி.மு.க. கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி என்பது ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    தற்போது தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா இந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற பணிகளை தற்போதே தொடங்கி விட்டது.

    அதிலும் தமிழக பா.ஜனதா கட்சி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்பதை கண்டறிந்து அந்த தொகுதிகளுக்கு என்று தனி கவனம் செலுத்தி வருகிறது. அதில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியும் ஒன்றாகும்.

    அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடும் நோக்கத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பே எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி பா.ஜ.க தனது தேர்தல் பணியை தொடங்கி விட்டது.

    அங்குள்ள பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, மக்களை நேரில் சந்திப்பது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுவது என பல பணிகளை செய்து வருகின்றனர்.

    இந்த தொகுதியில் தற்போது மத்திய மந்திரியாக இருக்கும் எல்.முருகன் போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மத்திய மந்திரி எல்.முருகன் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊட்டியில் தனது முகாம் அலுவலகத்தை திறந்துள்ளார். இதன் மூலம் மத்திய மந்திரி எல்.முருகன் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிடுவது உறுதியாகிறது.

    இவருக்கு போட்டியாக தி.மு.க. சார்பில் இங்கு ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.பி. ஆ.ராசாவே இந்த முறையும் இங்கு போட்டியிட உள்ளார். அவரும் கடந்த சில மாதங்களாக நீலகிரியிலேயே முகாமிட்டு தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

    இவர்கள் தவிர அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. அந்த கட்சியும் மிக முக்கியமான பிரமுகரையே இங்கு நிறுத்தும். இப்படி தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க என 3 பேரும் மிக மக்களுக்கு பரிட்சியமான வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வி.ஐ.பி., தொகுதியாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முகாம் அலுவலகத்தை திறந்து வைத்த மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது. தி.மு.க என்றாலே ஊழல்தான். ஆ.ராசா மிகப்பெரிய ஊழல்வாதி. அவரது ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது, இந்த தொகுதி மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபோன்ற அரசியல் வாதிகளை மக்கள் வெறுக்கத் தொடங்கி விட்டனர். ஊழல்வாதிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்பதே மக்களின் கருத்து.

    அ.தி.மு.க. கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் 9 தொகுதிகளும், நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளும் பா.ஜ.க வெற்றி பெறும் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேயிலை தோட்ட பாறையில் அமர்ந்து ஒய்வெடுத்த சிறுத்தை
    • ரெயில் தண்டவாளத்தை தாண்டி, பஸ் நிலையம் வந்த காட்டெருமை

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிங்காரா பகுதியில் ஒரு சிறுத்தை வலம் வந்தது.

    அது நேற்று மாலை தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தது. இதனை அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்த சிறுத்தை பின்னர் தாமாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

    இதற்கிடையே குன்னூர் ரயில் நிலையத்தில் ஒற்றை காட்டெருமை உலாவந்தது. இது தீடிரென அங்குள்ள தண்டவாளத்தை தாண்டி, பஸ் நிலையம் வந்து, பின்னர் மவுண்ட் ரோடு சாலை வழியாக ஆந்த பகுதிகளில் சுற்றி திரிந்தது. காட்டெருமை முக்கிய சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குன்னூரில் பலத்த மழை காரணமாக மேகமூட்டமும் அதிகளவில் இருந்ததால், எதிரேவரும் காட்டெருமையை வாகன ஓட்டிகளால் சரிவர பார்க்க இயலவில்லை. அப்போது அது வாகனங்களை தாக்க முயன்றது. இதில் ஒரு சிலர் மயிரிழையில் உயிர்தபினர். பின்னர் அந்த காட்டெருமை ஒருவழியாக அருகே உள்ள வண்ணாரப்பேட்டை வனத்திற்குள் சென்று மறைந்தது.

    குன்னூரில் காட்டெருமை உலா காரணமாக மவுண்ட் ரோடு பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே நகரப்பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாவட்ட அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை பரிந்துரைகளை வழங்கினர்
    • முதல்வர் மருத்துவ திட்டத்தின்கீழ் 27 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, குன்னூர் வட்டார வளமையம், மாவட்ட மாற்றுத் திறனாளி நலதுறை உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம், குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கல்வி அதிகாரி நந்தகுமார் தலைமைதாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் கணேஷ், விஜயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, யசோதா, அறிஞர் அண்ணா பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    முகாமில் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு உபகரணங்கள், அறுவை சிகிச்சைக்கான பரிந்துரைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாரத்திற்குட்பட்ட 115 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    மேலும் 20 பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் தேசிய அடையாள அட்டை, வழங்கினர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 27 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

    குன்னூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், மைய பராமரிப்பாளர்கள், கணக்காளர்கள், கணிணிவிவர பதிவாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாணவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி மற்றும் பயணப்படி வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆடம்பர ஓட்டல் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    • வரையாடு உருவம் போல மனிதசங்கிலி நடத்தப்பட்டது
    • மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி வனச்சரகம் சார்பில் நீலகிரி வரையாடுகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ஓவியம், பேச்சு, வினாடி-வினா மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வனப்பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் வரையாடு உருவம் போல மனிதசங்கிலி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட வனஅலுவலர் கவுதம், மாணவர்களிடம் வரையாடு தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    ×