என் மலர்tooltip icon

    நீலகிரி

    • முதுமலைப் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல விரிவாக்கம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து அனைத்து கட்சிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • கூடலூா் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலப்பிரச்னையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் முதுமலைப் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல விரிவாக்கம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து அனைத்து கட்சிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- கூடலூா் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலப்பிரச்னையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிலத்தில் குடியிருக்கும் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெளிமண்டல விரிவாக்கம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33 சதவீதம் உயா்த்துவதே அரசின் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் என்.வாசு, மசினகுடி வாழ்வுரிமை இயக்கத் தலைவா் வா்கீஸ், வியாபாரிகள் சங்க நிா்வாகி எம்.எஸ்.கந்தையா,தி.மு.க நகர செயலாளா் இளஞ்செழியன், சி.பி.எம்.செயலாளா் மணி, சி.பி.ஐ. செயலாளா் முகமது கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் சகாதேவன், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளா் அனீபா, காங்கிரஸ் சாா்பில் அம்சா மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

    • ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் பகுதியில் பலத்த மழைக்கு தோட்ட தொழிலாளர்களான லீலா, அம்மாமுத்து உள்பட 12 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • தொடர் மழையால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் கூடலூர், தேவாலா, சேரம்பாடி மற்றும் பந்தலூரில் பலத்த மழை பெய்தது. மழையால் பாண்டியாறு மற்றும் புண்ணம்புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் அதன் நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. பல்வேறு இடங்களில் நீரோடைகள் தூர்வாராப்படாததால், தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் பகுதியில் பலத்த மழைக்கு தோட்ட தொழிலாளர்களான லீலா, அம்மாமுத்து உள்பட 12 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தொடர் மழையால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டுள்ளது.

    இதற்கிடையே தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் கூடலூரில் நடந்தது.

    ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் மழைப்பொழிவு அதிகளவில் உள்ளதாலும், காற்றின் வேகம் இருக்கும்பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் போதுமான பொக்லைன் எந்திரம், மணல் மூட்டைகள், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மின்சார வாரியம் சார்பில் மின்கம்பங்கள் அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் போன்ற மின்சாதனங்கள் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்கு தடையின்றி மின் இணைப்பு வழங்க தயாராக இருக்க வேண்டும்.

    மேலும் கனமழையின் போது, பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கூடுதலாக இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பேரிடர் காலத்தில் தூய்மை பணிகள், பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் கருவிகளை கொண்டு வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், கூடலூர் பகுதியில் 23 பகுதிகள் பாதிப்புள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் தங்க 23 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உணவு, குடிநீர்வசதி, மருத்துவ வசதி, மின்வசதி, கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

    • இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

    குன்னூர்:

    தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கு

    ன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழை தான் அதிக அளவு பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் தீவிரமாக பெய்து வருகிறது. படகு சவாரி நிறுத்தம் கடந்த 2 நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. ஏரியில் 14 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. சவாரி இல்லாததால் படகு இல்லத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • ஜெகதளா குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி வீடுகளின் கதவை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நவ பழத்தை ருசிக்க கரடிகள் அடிக்கடி குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் உலா வருகின்றன.

    ஊட்டி:

    குன்னூர் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நடமாடி வருகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்னூர் அருகேயுள்ள ஜெகதளா குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி வீடுகளின் கதவை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையின் இருப்புறமும் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இங்கு தற்போது இயற்கையாக விளையும் சோலைப் பழமான நவப்பழ சீசன் தொடங்கியுள்ளது.

    இந்த பழத்தை ருசிக்க கரடிகள் அடிக்கடி குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் உலா வருகின்றன. மரப்பாலம் அருகே குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையும் ரெயில் பாதையும் சந்திக்கும் இடத்தில் கரடி ஒன்று ரெயில் பாதையின் ஓரத்தில் அமர்ந்திருந்தது. இதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகிறது.
    • யானை பஸ்ைச நோக்கி வேகமாக வந்து மறித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகிறது. குறிப்பாக சாலையில் சுற்றி திரியும் யானை கூட்டம் சாலையில் வாகனங்களை மறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    கூடலூரில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று எல்லமலை நோக்கி சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பஸ் ஒவேலி அடுத்த சூண்டி பாரம் இடையே ஒத்தக்கடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து சாலையோரம் யானை ஒன்று நின்றிருந்தது. இதனை பார்த்த டிரைவர் வாகனத்தை மெதுவாக இயக்கினார்.திடீரென யானை பஸ்ைச நோக்கி வேகமாக வந்து மறித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். நீண்ட நேரம் யானை அங்கேயே நின்றிருந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடை ந்தனர்.பின்னர் யானை அங்கிருந்து வனத்தி ற்குள் சென்று விட்டது . இதையடுத்து பஸ்சை டிரைவர் இயக்கி சென்றார். யானை அங்கிருந்த சென்ற பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை பாா்வையிட்டனர்.
    • பொக்காபுரம் பகுதியில் மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினா்.

    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில், தமிழக சட்டப் பேரவை ஏடுகள் கு ழு தலைவா் ராமகிருஷ்ணன் தலைமையில், கூடுதல் செயலாளா் நாகராஜன், உறுப்பினா்கள் நல்லதம்பி, பொன்னுசாமி, அப்துல் வஹாப், அலமேலு, தேன்மொழி ஆகியோா் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஏடுகள் குழு தலைவா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-தமிழகத்தில் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் மூலம் ஓராண்டில் 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடா்ந்து ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை பாா்வையிட்டு, பொக்காபுரம் பகுதியில் மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் உணவுப் பொருள்களை வழங்கி னாா்.

    பின்னா் பைக்காரா இறுதி நிலை நீா் மின்திட்ட மின் நிலையம், மாயாறு மின் நிலையத்தின் செய ல்பா டுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டாா்.

    இந்த ஆய்வின்போது, கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி தாசில்தார் ராஜசேகா், கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் நந்தகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா். 

    • பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருக்கிறது.பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருக்கிறது.
    • பள்ளி வளாகத்தில் உள்ள ஒதுக்குப் புறமான பகுதியில் கழிப்பிடம் கட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    அரவேனு:

    கோத்தகிரி அரவேனு தும்பூர் ஆரம்ப அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 28-ந் தேதி நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்து மனு கொடுத்தனர்.

    பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருப்பதாகவும், அந்த கழிவறையில் அட்டைப்பூச்சி, வனவி லங்குகள் புகுந்து விடுவதால் மிகவும் பாதிக்கப்ப ட்டு உள்ளதாகவும், எனவே பள்ளி வளாகத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மனுவில் கூறியிரு ந்தனர். இதைத் தொடர்ந்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்களில் சிலர் கோவிலுக்கு அருகில் பள்ளி அமைந்துள்ளதால், அங்கு கழிப்பிடம் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதற்கு சப்-கலெக்டர் கோவிலுக்கு அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு கழிப்பிடங்களும் கட்ட ப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நலன் கருதி கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். பள்ளி வளாகத்தில் உள்ள ஒதுக்குப் புறமான பகுதியில் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கான திட்ட மதிப்பீட்டை விரைவில் தனக்கு அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் தீபக், ஜக்கனாரை ஊராட்சி செயலர் மூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • கொட்டநள்ளி பகுதியில் உள்ள ஜானகி என்பவரின் மளிகை கடையை உடைத்து பொருட்களை சேதம் செய்து உள்ளது.
    • ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் செய்து பஸ்சை சிறைபிடிக்க முயன்றனர்.

    அரவேணு:

    கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.

    இந்தநிலையில் கோத்தகிரி நெடுகுளா கொட்டநள்ளி கிராமத்தில் 150 வசித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிற நிலையில், கொட்டநள்ளி பகுதியில் உள்ள ஜானகி என்பவரின் மளிகை கடையை உடைத்து பொருட்களை சேதம் செய்து உள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவ்வப்போது வனத்துறையினர் வந்து செல்கிறார்கள். இதனால் ஊர் மக்கள் தினந் தோறும் இரவு நேரங்களில் தீ மூட்டி கரடியை விரட்டி வந்துள்ளனர்.

    இரவு மீண்டும் மளிகை கடையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியதால் காலையில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் செய்து பஸ்சை சிறைபிடிக்க முயன்றனர்.

    தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார், வனத்துறையினர் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் உடனடியாக கூண்டு வைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பின்னர் கரடியை பிடிக்க வனத்துறையினர் மூலம் கூண்டு வைக்கப்பட்டது.  

    • வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • மழையால் வால்பாறை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே மிதமானது முதல் கனமழை பெய்தது.

    பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, பிதர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு, தாளூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக பொன்னானி, சோலாடி ஆறுகள் மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கூடலூர் பகுதியில் பெய்த மழைக்கு தெப்பக்காடை அடுத்த மாயாற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் லைட்பாடி, ஆனைப்பாடியை சேர்ந்த மக்கள் ஒரு கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மழையுடன் சூறாவளி காற்றும் வீசி வருவதால், பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. தீயணைப்பு படையினர் உடனடியாக மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் குடைபிடித்த படி செல்கின்றனர். தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்போர், பணிக்கு செல்வோர் பிளாஸ்டிக் கவர் அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் வால்பாறை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    மழை காரணமாக சிறுவர் பூங்கா பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து 2 வீடுகள் சேதமானது. இதேபோல் துளசிங் நகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன.

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.

    தொடர் மழையால் வாழைத்தோட்டம், ஆறு, ஸ்டேன்மோர் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    வால்பாறை பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் அக்காமலை தடுப்பு அணை நிரம்பி வழிகிறது. மேலும் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.

    கடந்த 2 தினங்களாக வால்பாறையில் சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மாணவ, மாணவிகள் வந்து செல்லும் சிரமத்தை கருத்தில் கொண்டு கோவை கலெக்டர் உத்தரவின் பேரில் இன்று மற்றும் நாளை வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுப்பட்டுள்ளது. இந்த தகவலை வால்பாறை தாசில்தார் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
    • விவசாயிகள் அறுவடை செய்யும் பச்சை தேயிலை மூட்டைகளை தினமும் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் மழைக்காலத்தில் சேற்றில் சிக்கி விடுகிறது.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப்பிரிவு- 17 நிலம் உள்ளது. இதனால் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதிவாசி கிராமங்களுக்கு உச்சநீதிமன்ற அனுமதி பெற்று அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலை உள்பட எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களுக்கு சாலை வசதி பூர்த்தி செய்யப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் அவசர காலங்களில் ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் விவசாயிகள் அறுவடை செய்யும் பச்சை தேயிலை மூட்டைகளை தினமும் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் மழைக்காலத்தில் சேற்றில் சிக்கி விடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான வாகன டிரைவர்கள் அப்பகுதிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே அண்ணாநகர் பகுதியில் தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிவரும் காலங்களில் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறும் போது, வனவிலங்குகள் நடமாட்டம், சாலை வசதி இன்மை உள்ளிட்ட காரணங்களால் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே அதிகாரிகள் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.
    • நாடுகாணி வனச்சரகர் வீரமணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே பால்மேடு பகுதியில் ஒரு கும்பல் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தேவாலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 3- ம் தேதி நள்ளிரவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 2 மூட்டைகளை சோதனை செய்த போது கடமான் இறைச்சி 50 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது கள்ளத்துப்பாக்கி மூலம் கடமானை வேட்டையாடியது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பால் மேட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 38), ஓ வேலி பேரூராட்சி பெரிய சூண்டியைச் சேர்ந்த மைக்கேல் (30) அருண் (26) மற்றும் சூண்டி மரப்பாலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.

    மோப்ப நாயுடன் வீட்டில் சோதனை பின்னர் போலீசார் பறிமுதல் செய்த கடமான் இறைச்சியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து நாடுகாணி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர்கள் சீனிவாசன், ஷர்மிலி, நாடுகாணி வனச்சரகர் வீரமணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது முதுமலை வனத்துறைக்குச் சொந்தமான மோப்ப நாயும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. தொடர்ந்து வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 250 கிராம் வெடி மருந்து பொருட்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் லைட் ஆகியவற்றை வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசாரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து வன குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேகமூட்டம் காரணமாக கோடநாடு காட்சி முனையில் இருந்து சமவெளிப் பகுதிகளைக் காண முடியாவிட்டாலும், அழகிய மேகக் கூட்டங்கள் கடல் அலைகள் போல காட்சியளிக்கின்றன.
    • மேகக் கூட்டங்களின் மேல் அங்குள்ள ரங்கசாமி மலைசிகரம் மற்றும் மலைகள் அழகாக காட்சியளிக்கிறது.

    ஊட்டி:

    கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக கோடநாடு காட்சி முனை அமைந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சி முனைக்கு சென்று, அங்குள்ள காட்சி முனை தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் உள்ள பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள், ரங்கசாமி மலை, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்டவற்றை கண்டுகளித்து வருகின்றனர்.

    இந்த காட்சிமுனை கோத்தகிரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேகமூட்டம் காரணமாக கோடநாடு காட்சி முனையில் இருந்து சமவெளிப் பகுதிகளைக் காண முடியாவிட்டாலும், அழகிய மேகக் கூட்டங்கள் கடல் அலைகள் போல காட்சியளிக்கின்றன.

    மேலும் மேகக் கூட்டங்களின் மேல் அங்குள்ள ரங்கசாமி மலைசிகரம் மற்றும் மலைகள் அழகாக காட்சியளிக்கிறது. இந்த கண்கொள்ளாக் காட்சியை ஆச்சர்யத்துடன் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு களிப்பதுடன், தங்களது செல்போனில் படம் பிடித்துச் செல்கின்றனர்.

    ×