என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்சை வழிமறித்த யானை"

    • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகிறது.
    • யானை பஸ்ைச நோக்கி வேகமாக வந்து மறித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகிறது. குறிப்பாக சாலையில் சுற்றி திரியும் யானை கூட்டம் சாலையில் வாகனங்களை மறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    கூடலூரில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று எல்லமலை நோக்கி சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பஸ் ஒவேலி அடுத்த சூண்டி பாரம் இடையே ஒத்தக்கடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து சாலையோரம் யானை ஒன்று நின்றிருந்தது. இதனை பார்த்த டிரைவர் வாகனத்தை மெதுவாக இயக்கினார்.திடீரென யானை பஸ்ைச நோக்கி வேகமாக வந்து மறித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். நீண்ட நேரம் யானை அங்கேயே நின்றிருந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடை ந்தனர்.பின்னர் யானை அங்கிருந்து வனத்தி ற்குள் சென்று விட்டது . இதையடுத்து பஸ்சை டிரைவர் இயக்கி சென்றார். யானை அங்கிருந்த சென்ற பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    ×