என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கூடலூர் காந்தி திடலில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைமுன்னிட்டு கூடலூர் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் காந்தி திடலில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூடலூர் நகர இளைஞரணி ஏற்பாட்டில் காந்தி திடலில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதேபோல் ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூடலூர் நகர தி.மு.க சார்பில் அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.ஜீவன் ரக்க்ஷாபவன் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் அவைதலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஜபருல்லா ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ராசாக் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரெனால்ட் பால்ராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சகாயநாதன், கூடலூர் நகர இளைஞரணி விஜயகுமார், ராமன், நிர்மல், செல்லதுரை, நியாஸ், அபுதாகீர், சிவக்குமார், தாகீர், நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், வெண்ணிலா, இளங்கோ, தனலக்ஷ்மி, ஆபிதா, மும்தாஜ் வாணி, கிளை செயலாளர்கள் கனகராஜ், வில்லியம் இஸ்மாயில், விஜயராஜா, மல்லிகராஜ், சடையபிள்ளை கிருஷ்ணமூர்த்தி பாலகிருஷ்ணன், ராஜகோபால், ராஜி மணல், மணி, மூர்த்தி, புட்ராஜ், ஆசாத், நாகேஷ், புஷ்பராஜ், மணிவண்ணன், ஜெகநாதன், மூசா செல்வா, மதிவாணன், வசந்த், இஸ்மாயில், ஜோண்சன், மலையரசன், நசீர், பிரகாஷ், வர்ணராஜ், நாகராஜ், சுஜித், மொஹமது, உதயகுமார், ராமசந்திரன், ஷபிக், செல்வன், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களை தேடி மருத்துவத்திட்டம் தங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது
    • நீலகிரி மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட அருவங்காடு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

    மக்களை தேடி மருத்துவத்திட்டம் தங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது, நோயின் தம்மை மற்றும் அதற்காக வழங்கப்படும் மருந்துகள், மக்கள் நலப்பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனரா, தேவையான மருந்துகள் இல்லங்களுக்கு பணியாளர்கள் மூலம் கொண்டு வந்து தரப்படுகின்றதா என்பது குறித்து அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 218 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 5 நோய் ஆதரவு செவிலியர் மற்றும் 5 இயன்முறை மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். 128 இடைநிலை சுகாதார சேவையாளர்கள் மற்றும் 61 பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து தொற்றா நோய்க்கான சேவைகளும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நமது மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 7,29,576-ல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,53,019 ஆவர். இதில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை பெற்றவர்கள் 4,95,213 நபர்கள், உயர் ரத்த அழுத்த நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் பெற்றவர்கள் 21,143 நபர்கள், நீரிழிவு நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் பெற்றவர்கள் 6,113 நபர்கள் மற்றும் 6,137 நபர்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகங்களையும் இத்திட்டத்தின் மூலம்பெற்றுள்ளனர்.

    மேலும், ஒவ்வொரு பயனாளியும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மக்கள் நலபதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இத்திட்டம் துவங்கப்பட்டு இதுவரை உயர் ரத்த அழுத்த நோய்சிகிச்சைக்காக 27,792 நபர்களும், நீரிழிவு நோய்க்காக 10,025 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்காக 9,414 நபர்களும், நோய் ஆதரவு சிகிச்சை 2,657 நபர்களும், இயன்முறை சிகிச்சை 2,424 நபர்களும், வாய் புற்று நோய் சிசிச்சை 10 நபர்களும், மார்பக புற்று நோய் சிகிச்சை 74 நபர்களும், கர்ப்பபை வாய் புற்றுநோய் சிகிச்சை 22 நபர்களும் என மொத்தம் 52,418 நபர்கள் முதன்முறையாக சேவை பெற்றுள்ளனர். இதைத் தவிர தொடர் சேவையாக 1,35,987 நபர்களும் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயனடைந்த பயனாளி கேசவன் தெரிவித்ததாவது:

    எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக நான் தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறேன். முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி வருவேன். சில நேரங்களில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தேன்.

    தற்பொழுது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் எனக்கு தேவையான மருந்துகளை வீட்டிற்கே வந்து தருகின்றனர். எனக்கு இது மிகவும் பயனள்ளதாக இருக்கிறது. எங்களை போன்ற வயதானவர்களுக்கு இதுபோன்ற திட்டத்தினை துவக்கி வைத்து மிகச்சிறப்பாக செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பயனாளி ஆறுமுகம் தெரிவித்ததாவது:-

    நான் அருவங்காடு எம்.ஜி காலனி பகுதியில் செல்வி ஹோம் நீட்ஸ் பக்கத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 3 வருட காலமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளது. எனவே தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வாங்கி வருவேன். சில நேரங்களில் மாத்திரை வாங்க முடியாத காரணத்தினால் தொடர்ந்து சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு வந்தேன். தற்பொழுது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தினை துவக்கி வைத்ததின் மூலம் எனக்கு தேவையான மருந்து மாத்திரைகளை களப்பணியாளர்கள் நேரடியாக வீட்டிற்கே கொண்டு வந்து தருகின்றனர்.

    இதனால் நான் சரியான முறையில் மாத்திரைகள் உட்கொண்டு, தற்போது நலமுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
    • பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினந்தோறும் வெளி மாநிலங்கள், வெளிமாவட்ட ங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. மேலும் அதிகாலையில் கடுங்குளிரும் வாட்டுகிறது.

    இந்த குளு,குளு சீசனை அனுபவிக்க வார இறுதி நாட்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடா் சாரல் மழையும் பெய்தது.

    ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல், மழையில் நனைந்தபடி தாவரவியல் பூங்கா,

    ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். மேலும் ஊட்டியில் நிலவிய கால நிலையையும் வெகுவாக ரசித்தனா்.

    வார விடுமுறை என்பதால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

    • நீலகிரி மாவட்டத்தில் வலசை பாதையில் மலபார் ‘விசிலிங் திரஸ்’ பறவைகள் பறந்து திரிகின்றன.
    • மலபார் விசிலிங் திரஸ் பறவை மனிதர்களை போல விசில் அடிக்கும் தன்மை கொண்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலம் மற்றும் பனி தொடங்கும் நேரத்தில் பறவைகளின் உள்ளூர் வலசை எப்போதும் ஆரம்பிக்கும். அந்த வகையில் தற்போது நவம்பர் மாத பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால், பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது. இதன்படி சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெப்பம், குளிர் காரணமாக பறவைகள் இடம் பெயர்கின்றன.

    அதில் தற்போது மலபார் விசிலிங் திரஸ் பறவை அதிகளவில் உள்ளூர் இடம் பெயர்வான வலசை பாதையில் பறந்து திரிய தொடங்கி உள்ளது. மலபார் விசிலிங் திரஸ் பறவை மனிதர்களை போல விசில் அடிக்கும் தன்மை கொண்டது. இதனால் விசில் அடிக்கும் பறவை என்று பொதுமக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.

    இந்த இனம் மேற்கு தொடர்ச்சி மலை, மத்திய இந்தியா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகிறது. அடர்ந்த ஆற்றங்கரை காடுகளிலும், இருண்ட மரத்தின் அடிகளிலும் பொதுவாக பாறை நீரோடைகள் மற்றும் காடுகள் உள்ள ஆறுகளின் விளிம்புகளில் வாழ்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 220 மீட்டர் உயரத்தில் உள்ள மலையடிவாரத்தில் வாழும் தன்மை கொண்டது. நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா, கோடநாடு, பர்லியார் ஆகிய பகுதியில் இந்த பறவை அதிகமாக காணப்படுகிறது.

    இது குறித்து பறவை ஆர்வலர்கள் கூறுகையில், இந்த பறவை கருநீல நிற கழுத்து, நீல நிற இறகுகள், தலைமேல் வீ போன்ற வடிவை கொண்டு மிக அழகாக காணப்படும். காலை நேரங்களில் விசில் அடிப்பது போன்று குரல் எழுப்புவது இனிமையாக இருக்கும். இந்த விசிலின் சத்தத்தை கேட்பதற்காகவே ஏராளமான பறவை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த பறவையை காண செல்கின்றார்கள் என்றனர்.

    • கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • தாய்சோலை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கரடி ஒன்று நேற்று நடமாடியது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும், உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் குன்னூா் அருகே உள்ள தாய்சோலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தாய்சோலை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கரடி ஒன்று நேற்று நடமாடியது. நீண்ட நேரம் சாலையில் சுற்றித் திரிந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனா். சிலா் செல்போனில் கரடியை படம் பிடித்தனா். சிறிது நேரத்துக்குப் பின் கரடி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர்.

    • பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்ததற்காக ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ஒரு கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஊட்டி

    தமிழக அரசு ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பினாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்,ஓட்டல், பேக்கரி, உணவகங்கள், வணிக வளாகங்கள், பார்கெட் ஆகிய பகுதிகளில் தடைசெய்யப்ட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வு மேற்கொண்டதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 15 கிலோ பறிமுதல் செய்யபட்டு ரூ.55,000 அபராதம் விதித்தனர். குன்னூர் வட்டாட்சியர் தலைமையில், 2 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.4,500அபராதம் விதித்தனர்.

    உதகை நகராட்சி ஆணையாளர் தலைமையில், 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.5,000 அபராதம் விதித்தனர். குன்னூர் நகராட்சி ஆனையாளர் தலைமையில், 300 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.7,000 அபராதம் விதித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர்களின் ஆய்வில் ஒரு கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ. 7.500 அபராதம் விதித்தனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், 100 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.500 அபராதம் விதித்தளர்,

    நீலகிரி மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 19.400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அக்கடைகளுக்கு 25.11.2022 மற்றும் இன்று 26.11.2022 அபராத தொகையாக மொத்தம் ரூ.79,600 விதிக்கப்பட்டது. மேலும், தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    • றப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2023-2ஐ தகுதிநாளாகக் கொண்டு 09.11.2022 முதல் 08.12.2022 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் நடைபெறுகிறது. மேலும் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைதிருத்தங்கள், முகவரி மாற்றங்கள் மற்றும் வாக்காளர் அடையான அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 09.11.2022 அன்று முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பொதுமக்கள் உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    ஏற்கனவே 12:11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்றது. அதை போல் இன்று 26.11.2022 மற்றும் நாளை 27.11.2022 காலை 10.00 மணி முதல் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிக்கு விண்ணப்பங்களை வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமே பெற்று ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பொதுமக்கள் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி சம்மந்தப்பட்ட வாக்குச்சா வடிகளை அணுகி வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டும், திருத்தங்க ள் இருப்பின், அதனை சரி செய்வதற்குரிய படிவத்தை பெற்று உரிய ஆதாரங்க ளுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை சென்று ஆய்வு செய்யும்போது, வாக்காளர்கள் இறந்துவிட்டதாக வீட்டின் அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில், அந்த விவரத்தினை சம்மந்தப்பட்ட வாக்குசாவடி நிலை முகவர்கள் மூலம் உறுதி செய்து, சம்மந்தப்பட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செம்மையான வாக்காளர் பட்டியல் வெளியிடும் வகையில் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடந்தது. 

    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி கோத்தகிரியில் மூடுபனியுடன் சாரல் மழை பெய்ததால் குளிா்ந்த காலநிலை நிலவி வருகிறது. சாலைகளில் அடா்ந்த பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மாலை முதல் மூடு பனியும், சாரல் மழையும் காணப்பட்டது. ஊட்டி நகரம், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடா்ந்த மூடுபனி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    • கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியிருக்கிறது.
    • மக்னா யானையை பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உலா வரும் யானைகள், குடியிருப்புகளை சேதப்படுத்தி தானியங்களை உட்கொள்வதை உட்பட வழக்கமாக கொண்டிருக்கிறது. பந்தலூர் மக்னா (எம்.பி.-2) என அந்த யானைக்கு பெயரிட்டு, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை இடித்து சேதப் படுத்தியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவாலா வாழைவயல் பகுதிக்குள் நுழைந்து பாப்பாத்தி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை இடித்து அவரையும் தாக்கி கொன்றது.இதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மக்னா யானையை பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறும்போது, தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வனப்பாது காவலர், 4 வனச்சரகர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானையை கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து கும்கி யானைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. யானைகளை பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இருவர், கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். யானையை பிடித்து உடல் பரிசோதனை செய்து, மீண்டும் முது மலையில் விடுவிக்கப்படும்" என்றார்.

    வனத்துறையினர் கூறும்போது, நான்கு கண்காணிப்பு குழுவினர்கள் காட்டிமட்டம், நீர்மட்டம், இல்டாப், புளியம் பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டி மட்டம், பராமரிப்பு இல்லாத அக்கார்டு தேயிலை தோட்டப் பகுதியில் மக்னா யானையின் நடமாட்டம் தென்பட்டது. அதனை கண்காணிக்க ஆங்காங்கே தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. தற்போது வரை தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் தான் யானை இருக்கிறது என்றனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் ேததி வரை புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான முகாம் சங்க வளாகத்தில் நடக்க உள்ளது.
    • புதிய உறுப்பினர்களாக சேர்ந்து தேவைப்படும் கடனுக்குரிய கடனை மனுவை சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கீழ்க்கண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் ே ததி வரை புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான முகாம் சங்க வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த முகாமில் இதுவரை உறுப்பினராக சேராமல் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

    ஜெகதளா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆலட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கவரட்டி ஸ்ரீவேல்முருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கன்னேரி மந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மூரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எடக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் புதிய உறுப்பினர் முகாம் நடைபெறும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன், மத்திய கால கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன், சுய உதவிக்குழு கடன் மற்றும் நகைக்கடன் வழங்கப்படுகிறது. நில உடமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான தாசில்தாரின் அனுபோன சான்றிதழ் மற்றும் அடங்கல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றை அளித்து பயிர்க்கடன் பெற்று கொள்ளலாம். எனவே அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு புதிய உறுப்பினர்களாக சேர்ந்து தேவைப்படும் கடனுக்குரிய கடனை மனுவை சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காபி, குறுமிளகு போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
    • காபி பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பானை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் செங்கல்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு காபி, குறுமிளகு போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அங்கு, குன்னூர் வட்டார தோட்டக்கலை துறை சார்பில் தேசிய மண் வள இயக்கத்தின் மூலம் மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண்வளத்தை பாதுகாப்பது குறித்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு காபி பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பானை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் குறுமிளகு செடிகளில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு தேவையான இயற்கை இடுபொருட்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

    இதுதவிர முதன் முறையாக வெண்ணை பழம் என்று சொல்லப்படும் பட்டர் புரூட் மற்றும் எலுமிச்சை நாற்றுகள் 2 எக்டருக்கு தேவையான அளவில் வழங்கப்பட்டது. இங்கு விளைவிக்கப்படும் காபி மற்றும் குறுமிளகு எந்தவித ரசாயனங்களும் இன்றி இயற்கை முறையிலேயே விளைவிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே அவர்களுக்கு அங்கக சான்றிதழ் வாங்கி பயன்படுத்த தோட்டக்கலைத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மண் மாதிரி எடுப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தோட்டக்கலை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட மேலாளர், தோட்டக்க–லை அலுவலர், குன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் பழங்குடியின விவசா–யிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    ×