search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Membership Camp"

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் ேததி வரை புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான முகாம் சங்க வளாகத்தில் நடக்க உள்ளது.
    • புதிய உறுப்பினர்களாக சேர்ந்து தேவைப்படும் கடனுக்குரிய கடனை மனுவை சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கீழ்க்கண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் ே ததி வரை புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான முகாம் சங்க வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த முகாமில் இதுவரை உறுப்பினராக சேராமல் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

    ஜெகதளா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆலட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கவரட்டி ஸ்ரீவேல்முருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கன்னேரி மந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மூரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எடக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் புதிய உறுப்பினர் முகாம் நடைபெறும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன், மத்திய கால கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன், சுய உதவிக்குழு கடன் மற்றும் நகைக்கடன் வழங்கப்படுகிறது. நில உடமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான தாசில்தாரின் அனுபோன சான்றிதழ் மற்றும் அடங்கல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றை அளித்து பயிர்க்கடன் பெற்று கொள்ளலாம். எனவே அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு புதிய உறுப்பினர்களாக சேர்ந்து தேவைப்படும் கடனுக்குரிய கடனை மனுவை சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாவட்டம் குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிகளில் சங்க பணியாளர்கள் மற்றும் புள்ளம்பாடி பகுதியை சுற்றியுள்ள குமுளூர், கண்ணாக்குடி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் லால்குடி சரக துணைப்பதிவாளர் ரா.திவ்யா கலந்துகொண்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான புதிய உறுப்பிர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கினார். இந்த சங்கத்தில் 197 நபர்களுக்கு ரூ.1.64 கோடி விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த உறுப்பினர் கல்வித்திட்ட முகாமில் திருச்சி கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபிபுல்லா கலந்துகொண்டு அதிகமான உறுப்பினர்கள் சங்கத்தில் சேர ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளரும், கள அலுவலருமான குணசேகரன், குமுளூர் பஞ்சாயத்து தலைவி பழனியம்மாள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நடராஜன், தமிழழகன், மணி, ரவிச்சந்திரன், ஆபிரகாம், வெற்றிச்செல்வன், ஆறுமுகம், பழனிய்மமாள், ரம்யா, ராஜேஸ்வரி மற்றும் சங்க செயலாளர் மலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சிகளில் சங்க பணியாளர்கள் மற்றும் புள்ளம்பாடி பகுதியை சுற்றியுள்ள குமுளூர், கண்ணாக்குடி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 1936-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44.90 லட்சமும், நகை்கடனாக 279 நபர்களுக்கு ரூ.83.18 லட்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையினர் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் டாப்செட்கோ மற்றும் தாம்கோ லோன் மேளா, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துவரங்குறிச்சி பகுதியை சுற்றியுள்ள பொன்னம்பட்டி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நல்லூர், செவந்தாம்பட்டி, லெக்கநாயக்கன்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, தெத்தூர, செவல்பட்டி ஆகிய 9 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 1936-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மொத்தம் 5,884 உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பாக 2021-2022 ஆம் ஆண்டில் மட்டும் புதிய உறுப்பினர்களாக 1,219 பேர் சேர்ந்துள்ளனர். இந்த சங்கத்தின் மூலம் 1,210 நபர்களுக்கு புதிய கடனாக ரூ.420.50 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4.2022 முதல் 23.8.2022 வரை புதிய உறுப்பினர்கள் 294 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களில் 265 நபர்களுக்கு ரூ.13.25 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சங்கம் மூலம் பயிர்க்கடன் 169 நபர்களுக்கு ரூ.401.83 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4.2022 முதல் 23.8.2022 வரை 313 நபர்களுக்கு ரூ.252.53 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44.90 லட்சமும், நகை்கடனாக 279 நபர்களுக்கு ரூ.83.18 லட்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சங்கத்தில் இ-சேவை மையம் மூலம் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட அரசு சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

    இ-சேவை மையம் மூலம் 2021-2022 ஆம் ஆண்டில் 2,560 நபர்களுக்கு அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சங்க்ததில் இ-சேவை மையம் செலவு போக ரூ.1.54 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. 1.4.2022 முதல் 23.8.2022 வரை 1,750 அரசு சான்றிதழ் வழங்கியதன் மூலம் ரூ.1.05 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த சங்கத்தில் விவசாய, நகை பயிரீட்டு கடன், கறவை மாட்டு கடன், விவசாய முதலீட்டு மூலதன கடன் ஆகிய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் நடந்த உறுப்பினர் கல்விதிட்ட முகாமில் திருச்சி கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபிபுல்லா கலந்துகொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்கள் கடன் வாங்கி பயன்பெற ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மருங்காபுரி ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளரும், கள அலுவலருமான பிரேமலதா, சங்க எழுத்தர் மணிகண்டன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் ஹரிதாஸ், பிற்படுத்தப்பட்டோர் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக சங்க பணியாளர் என்.டி.ராமசாமி வரவேற்றார். முடிவில் துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அசோகன் நன்றி கூறினார். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் தெரிவித்துள்ளார்.


    ×