என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
- திருச்சி மாவட்டம் குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிகளில் சங்க பணியாளர்கள் மற்றும் புள்ளம்பாடி பகுதியை சுற்றியுள்ள குமுளூர், கண்ணாக்குடி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் லால்குடி சரக துணைப்பதிவாளர் ரா.திவ்யா கலந்துகொண்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான புதிய உறுப்பிர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கினார். இந்த சங்கத்தில் 197 நபர்களுக்கு ரூ.1.64 கோடி விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த உறுப்பினர் கல்வித்திட்ட முகாமில் திருச்சி கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபிபுல்லா கலந்துகொண்டு அதிகமான உறுப்பினர்கள் சங்கத்தில் சேர ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளரும், கள அலுவலருமான குணசேகரன், குமுளூர் பஞ்சாயத்து தலைவி பழனியம்மாள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நடராஜன், தமிழழகன், மணி, ரவிச்சந்திரன், ஆபிரகாம், வெற்றிச்செல்வன், ஆறுமுகம், பழனிய்மமாள், ரம்யா, ராஜேஸ்வரி மற்றும் சங்க செயலாளர் மலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிகளில் சங்க பணியாளர்கள் மற்றும் புள்ளம்பாடி பகுதியை சுற்றியுள்ள குமுளூர், கண்ணாக்குடி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்