search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
    X

    திருச்சி குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

    • திருச்சி மாவட்டம் குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிகளில் சங்க பணியாளர்கள் மற்றும் புள்ளம்பாடி பகுதியை சுற்றியுள்ள குமுளூர், கண்ணாக்குடி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் லால்குடி சரக துணைப்பதிவாளர் ரா.திவ்யா கலந்துகொண்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான புதிய உறுப்பிர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கினார். இந்த சங்கத்தில் 197 நபர்களுக்கு ரூ.1.64 கோடி விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    குமுளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த உறுப்பினர் கல்வித்திட்ட முகாமில் திருச்சி கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அ.ஹபிபுல்லா கலந்துகொண்டு அதிகமான உறுப்பினர்கள் சங்கத்தில் சேர ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளரும், கள அலுவலருமான குணசேகரன், குமுளூர் பஞ்சாயத்து தலைவி பழனியம்மாள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நடராஜன், தமிழழகன், மணி, ரவிச்சந்திரன், ஆபிரகாம், வெற்றிச்செல்வன், ஆறுமுகம், பழனிய்மமாள், ரம்யா, ராஜேஸ்வரி மற்றும் சங்க செயலாளர் மலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சிகளில் சங்க பணியாளர்கள் மற்றும் புள்ளம்பாடி பகுதியை சுற்றியுள்ள குமுளூர், கண்ணாக்குடி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×