search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panthalur"

    • கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியிருக்கிறது.
    • மக்னா யானையை பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உலா வரும் யானைகள், குடியிருப்புகளை சேதப்படுத்தி தானியங்களை உட்கொள்வதை உட்பட வழக்கமாக கொண்டிருக்கிறது. பந்தலூர் மக்னா (எம்.பி.-2) என அந்த யானைக்கு பெயரிட்டு, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை இடித்து சேதப் படுத்தியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவாலா வாழைவயல் பகுதிக்குள் நுழைந்து பாப்பாத்தி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை இடித்து அவரையும் தாக்கி கொன்றது.இதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மக்னா யானையை பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறும்போது, தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வனப்பாது காவலர், 4 வனச்சரகர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானையை கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து கும்கி யானைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. யானைகளை பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இருவர், கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். யானையை பிடித்து உடல் பரிசோதனை செய்து, மீண்டும் முது மலையில் விடுவிக்கப்படும்" என்றார்.

    வனத்துறையினர் கூறும்போது, நான்கு கண்காணிப்பு குழுவினர்கள் காட்டிமட்டம், நீர்மட்டம், இல்டாப், புளியம் பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டி மட்டம், பராமரிப்பு இல்லாத அக்கார்டு தேயிலை தோட்டப் பகுதியில் மக்னா யானையின் நடமாட்டம் தென்பட்டது. அதனை கண்காணிக்க ஆங்காங்கே தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. தற்போது வரை தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் தான் யானை இருக்கிறது என்றனர்.

    • ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஜோய், மற்றும் ஜெய் சங்கர் ஆகியோர் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கூடலூர்

    பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 3 பகுதியில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் ஜோய் (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அங்கு ெசன்று, ஜோயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-4 பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெய்சங்கர் (53) என்பவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று, ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து, ஜோய், மற்றும் ஜெய் சங்கர் ஆகியோர் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கையுன்னி அருகே போத்துகொல்லி, மங்கரை உள்பட பல ஆதிவாசி காலனிகள் உள்ளன.
    • முகாமில் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கூடலூர்:

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கையுன்னி அருகே போத்துகொல்லி, மங்கரை உள்பட பல ஆதிவாசி காலனிகள் உள்ளன.

    இங்கு கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவுபடி சேரம்பாடி வனத்துறையினரும், சுகாதாரத்துறையினரும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர். இதற்கு உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி தலைமை தாங்கினார். வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கலந்துகொண்ட ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வேட்டை தடுப்பு காவலர்களும் கலந்துகொண்டனர்.

    • போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 4 பேர் காரில் வந்தனர். போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தேவாலா டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    கேரள மாநிலம் வைத்திரி பகுதியில் சுற்றுலா விடுதி நடத்தி வரும் ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.

    அதனை கடந்த வாரம் கோழிக்கோடு பகுதிக்கு எடுத்துச் சென்றபோது நண்பர்கள் 4 பேரிடம் கொடுத்துள்ளார். மீண்டும் அவரிடம் வழங்க கோழிக்கோட்டில் இருந்து தமிழக எல்லையான சுல்தான்பத்தேரி, எருமாடு வழியாக இவர்கள் வைத்திரி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்த போலீசார் பின்னர் கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பினர்.

    ×