என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கடும் உறைபனி- விளைச்சல் குறைந்தது.
    • விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் தேயிலை மற்றும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, அவரை, மலைப்பூண்டு போன்ற மலைக்காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது.இதில் கொடி பந்தலில் வளரக்கூடிய ேமரக்காய் கொடிகள் அதிகளவில் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

    இந்நிலையில் நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் ேமரக்காய் கொடிகள் அனைத்தும் வாடி வதங்கி காய்ந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. 20 மூட்டை கிடைத்த இடத்தில் தற்போது 6 முதல் 7 மூட்டை வரை மட்டுமே மேரக்காய் காய்கறிகள் கிடைக்கிறது.

    அதுமட்டுமின்றி மேரக்காய்களுக்கு சரியான விலையும் விவசாயிளுக்கு கிடைப்பதில்லை. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ேமரக்காய் விலை 1 கிலோ ரூ.25-ல் இருந்து ரூ.20 வரையிலும் விற்பனை ஆனது. தற்போது ேமரக்காய் 1 கிலோ ரூ.8 விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் லாபம் ஒன்றும் இல்லாமல் பராமரிப்பு செலவிற்க்கு கூட கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர். 

    • பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி படகு இல்லத்திற்க்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நீலகிரியில் இருந்து ஊட்டி படகு இல்லத்திற்க்கு ெசல்லும் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். இதனால் வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது கழிவுநீர் தெறிப்பதினால் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஊட்டி நகராட்சியில் பல பகுதிகளில் இந்த அவல நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமூக ஆர்வலர்கள் வரவேற்பு.
    • வனத்துறையினர் சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.

    ஊட்டி

    மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வாகனங்கள் மூலம் வன விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களை தடுக்க 6 இடங்களில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சார்பில் வேகத்தடைகள் அமைக்க ப்பட்டது.

    மலைகளின் அரசியான ஊட்டிக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் இச்சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    தற்போது ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருவதால் அதனை ரசிப்பதற்காக இளம் தம்பதியினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதனால் குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில் யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் காரணமாக மலை ப்பாதைகளில் கவனத்து டனும், மெது வாக இயக்கும் படியும் வனத்து றையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களில் அடிபட்டு மான் உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதும், ஊனமாவதும் அடிக்கடி நிகழ்கின்றன.

    இதனை கருத்தில் கொண்டு ஊட்டி சாலையில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகள் கடந்த 3 மாதங்களாக கண்காணிக்கப்பட்டன. அதேவேளையில் உயிரி ழக்கும் இடங்கள் குறித்தும் தீவிரமாக கண்காணித்ததில் ஊட்டி சாலையில் 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த இடங்களில் வேகத்த டைகள் அமைக்க மேட்டு ப்பாளையம் வனச்ச ரகர் ஸ்டாலின், மாவட்ட வன அலுவலர் அசோக்கு மாருக்கு பரிந்துரைத்தார்.

    பின்னர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் நெடுஞ்சாலைத்துறை யினருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    எனினும் நெடுஞ்சா லைத்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று விசார ணைக்கு வந்த நிலையில் ஊட்டி சாலையில் வேகத்தடைகள் அமைக்க உத்தரவிடப்பட்டது.

    இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் ஐகோர்ட்டு உத்தரவின் படி நேற்று ஊட்டி சாலையில் மொத்தமாக 6 இடங்களில் வேகத்தடைகள் அமைத்தனர்.

    இதனை அனைத்து சமூக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.  

    • கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது.
    • சிறந்த பயிற்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

    அரவேணு

    கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு செல்வபுரத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி.

    இவரது மகன் பிரவீன்(வயது17). இவர் கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரது தாயார் ஜெயலட்சுமி தேயிலை பறிக்கும் கூலித் தொழிலாளி ஆவார். பிரவீனுக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது.

    இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர்கள் இமானுவேல், செந்தில்கு மார் ஆகியோர் அவருக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

    இதன் விளைவாக அவர் மாவட்ட, மாநில அணிகளுக்கு தேர்வு பெற்று போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் தேர்வாகினர்.

    இதில் கோத்தகிரியை சேர்ந்த பிரவீனும் பங்கேற்றார். போட்டியின் முடிவில் அவர் தேசிய அணிக்கு தேர்வு பெற்று சாதனை படைத்தார்.

    இவர் வரும் மே மாதம் வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ள சர்வதேச ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய அணிக்கு தேர்வு பெற்றுள்ள பிரவீனை அப்பகுதி மக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். மாணவனின் தயார் கூறுகையில்,

    பொருளாதார ரீதியாக பின்னடைவு இருப்பதால் அரசு மற்றும் பொது அமைப்புகள் ஏதாவது உதவி செய்தால் எனது மகன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு சிறந்த பயிற்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • 16 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முஹம்மத் சைபுல் மற்றும் ஏட்டு குமரன் தலைமையிலான போலீசார் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 16 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீண்டும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

    • கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் காணப்படுகிறது.
    • பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வன விலங்குகள் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி முக்கிய நகர பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி ஒன்று உலா வருவதாகவும், அந்த கரடி இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபடும் ஊர் காவல் படையினர் மற்றும் பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    அந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் புகார்கள் எழுந்தது. ஆனால் தற்போது கோத்தகிரி போலீஸ் நிலையம் அருகிலேயே அந்த கரடி உலா வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இரவு நேரம் பணியில் இருந்த காவலர்கள் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அங்கு கரடி ஒன்று நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு கரடியை பார்த்து கூச்சலிடவே அந்த கரடி அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று மறைந்தது. போலீஸ் நிலையம் அருகில் கரடி சுற்றி திரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பூங்காவில் சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடந்தது.
    • குழந்தைகள் டிராக்டர், ரெயிலில் ஏறி பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

    கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் துவக்கி வைத்தனர்.

    இந்த கண்காட்சியில் பல்வேறு துறை அரங்க ங்களும் இடம்பெற்றிருந்தன.

    இதில் குறிப்பிடும்படியாக கூடலூர் நகராட்சியை சேர்ந்த அரங்கமானது பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    தூக்கி எறியப்பட்ட பழைய பொருட்களில் இருந்து பிரம்மாண்டமான பட்டாம்பூச்சி, டயர்களில் வடிவமைக்கப்பட்ட பூந்தொட்டிகள், டிராக்டர், புகைவண்டி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இது அங்கு வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை கவர்ந்திழுத்தது. குழந்தைகள் டிராக்டர், ரெயிலில் ஏறி பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தாவரவியல் பூங்கா வி ற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்த வடிவமைப்பின் முன் நின்றும், தங்கள் குழந்தைகளை அமர வைத்தும் புகைப்படம் மற்றும் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

    • ஜெகத்குரு சிவராத்திரி மகா சுவாமிகளின் தேர்த்திருவிழா நடைபெற்றது.
    • 116 தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கல்வி பணியாற்றி வரும் ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியின் தலைமையிடமான ஜே.எஸ்.எஸ். மகாவித்ய பீடம் மைசூர் மாவட்டம் சுத்தூர் திருத்தலத்தில் அமைந்துள்ளது.

    இங்கு ஒரு வாரம் தேர்த்திருவிழா நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி, அமெரிக்கா என உலகம் முழுவதும் சமூக பணியுடன் கல்விப்பணி கலாசாரப்பணியை சிறப்பாக ஆற்றிவரும் ஜே.எஸ்.எஸ். மகாவித்ய பீடத்தின் தலைமை குருவான சிவயோகி ஆதி ஜெகத்குரு சிவராத்திரி மகா சுவாமிகளின் தேர்த்திருவிழா மைசூர் அருகேயுள்ள சுத்தூர் திருத்தலத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு 116 தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஜெகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகளின் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட அனைத்து தம்பதிகளுக்கும் தங்கத்தாலி, பட்டுபுடவை, பட்டுவேட்டி மற்றும் பாத்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஊட்டியில் செயல்படும் ஜே.எஸ்.எஸ். கல்லூரியின் அலுவலர்கள் முதல்வர் டாக்டர் தனபால் மற்றும் முதன்மை அலுவலர் பசவண்ணா தலைமையில் தன்னார்வ பணிகளை செய்தனர்.

    • இந்திய வாலிபர் சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்து கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரவேணு

    புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் மலம் கலந்த குடிநீர் தொட்டியை இடிக்க கோரி போராட்டம் நடத்த திட்டமிட்ட இந்திய வாலிபர் சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்து கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் யோகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன், இந்திய மாணவர் சங்க கோத்தகிரி இடைக்கமிட்டி தலைவர் சுகுந்தன் தலைமை வகித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், வாலிபர் சங்க தாலுக்கா செயலாளர் பகத்சிங், பொருளாளர் சுனந்தா, மாணவர் சங்க செயலாளர் சச்சின், மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புகைப்படக்கண்காட்சி மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் அமைக்க ப்பட்ட பணிவிளக்க கண்காட்சி தொடங்கியது
    • நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், "ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழர்களின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக்கண்காட்சி மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் அமைக்க ப்பட்ட பணிவிளக்க கண்காட்சி தொடங்கியது.

    இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்பட அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் நீலகிரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் நீலகிரியில் கூடலூர் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டில், 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று வன யானைகளை பாதுகாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஊரக வளர்ச்சி முகமை, வேளாண் வளர்ச்சி துறை போன்ற துறைகளின் மூலமாகவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    எனவே சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற அரசு திட்டங்களை தெரிந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து 69 பயனாளிகளுக்கு ரூ.96.89 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், மாவட்ட வன அலுவலர் கவுதம், திட்ட இயக்குநர்கள் ஜெயராமன் (ஊரக வளர்ச்சி முகமை), பாலகணேஷ் (மகளிர் திட்டம்), தோட்டகலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, ஊட்டி நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சண்முக சிவா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), பிரான்சிஸ் ஜேவியர் (கூடலூர்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராஹீம்ஷா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீணா தேவி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பி ளைவுட் பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது
    • பள்ளத்தில் சாய்ந்து விடாமல் கயிரால் மரங்களில் கட்டி வைத்தனா்.

    ஊட்டி

    கேரளத்திலிருந்து கூடலூர் வழியாக கா்நாடக மாநிலத்துக்கு பிளைவுட் பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி கோழிப்பாலம் பகுதியில் வந்த போது சாலையில் சாய்ந்து நின்றது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் லாரி பள்ளத்தில் சாய்ந்து விடாமல் கயிரால் அருகில் உள்ள மரங்களில் கட்டி வைத்தனா். சிறிது நேரத்தில் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து லாரியை பள்ளத்தில் கவிழாமல் பாதுகாப்பாக நகா்த்திய பிறகு லாரி கா்நாடகத்துக்கு சென்றது. அதிக பாரம் ஏற்றி வந்ததால் மலைப்பகுதியில் செல்லமுடியவில்லை என கூறப்படுகிறது.

    • சட்ட ரீதியான உதவிகள் பெற்று பயனடையலாம்.
    • கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    நீலகிரி மாவட்ட சமூக நல துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் குன்னூர் தனியார் கல்லூரியில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்படி மாவட்ட அலுவலர் பிரவீனா தேவி அறிவுறுத்தலின்படி, சமூக நலத்துறை அலுவலர் ஹெலன் கிறிஸ்டீனாள் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது புதுமை பெண் திட்டம், சமூக நலத்துறையின் திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள், சைபர் கிரைம் பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, போதைப் பொருளின் தீமைகள், குழந்தைகளுக்கான இலவச உதவி எண் 1098, பெண்களுக்கான இலவச உதவி எண் 181 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருந்தால் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகி உளவியல் ஆலோசனை, காவல் துறை ரீதியான உதவிகள், மருத்துவ ரீதியான உதவிகள், சட்ட ரீதியான உதவிகள் பெற்று பயனடையலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதில் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை ஏட்டு ராஜம்மாள் மற்றும் குன்னூர் இலவச சட்ட பணிகள் குழு பணியாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×