search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்
    X

    ஊட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • 16 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முஹம்மத் சைபுல் மற்றும் ஏட்டு குமரன் தலைமையிலான போலீசார் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 16 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீண்டும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

    Next Story
    ×