என் மலர்
நாமக்கல்
- கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- முன்னாள் மாணவிகள் சங்க பொருளாளர், உதவி பேராசிரியை செல்வி வரவேற்றார்.
நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்து பேசினார். முன்னாள் மாணவிகள் சங்க பொருளாளர், உதவி பேராசிரியை செல்வி வரவேற்றார். சங்க செயலாளர் காஞ்சனா ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 50 முன்னாள் பேராசிரியைகள், 750 முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களது கல்லூரி கால பழைய நினைவுகள் குறித்து பேசி மகிழ்ந்தனர். மேலும், கல்லூரியில் முதல் முறை பட்டம் பெற்ற 3 முன்னாள் மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் பேராசிரியைகள், முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். உதவி பேராசிரியை சுகன்யா நன்றி கூறினார்.
- சப்பானி (54). இவரது மகன் சந்துரு (35). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
- இன்று காலை சப்பானி கியாஸ் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்து.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சப்பானி (54). இவரது மகன் சந்துரு (35). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். மகனுக்கு உதவியாக சப்பானியும் டீக்கடையில் வேலை செய்து வருகிறார்.
தீ விபத்து
இந்த நிலையில் இன்று காலை சப்பானி கியாஸ் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்து.
இதில் சப்பானி, கடையில் டீக்குடிக்க வந்த அதே பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளியான கணேசன் (55) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
2 பேர் காயம்
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, வலியால் துடித்த இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சப்பானிக்கு அதிக தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார்.
- பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான நேற்று தனது நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில் அங்குள்ள நத்துக்குளிப்பட்டி - பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர்.
தொடர்ந்து கொல்லிமலை செம்மேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ஏழுமலை உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- “ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு” என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
- பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 21-ந்தேதி ( திங்கட்கிழமை) "ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு" என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், உற்பத்தி திறனை அதிகரிக்க வழிமுறைகள் பற்றியும், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசாங்கத்தின் மீன் வளர்ப்புக்கான மானியம் பற்றியும் எடுத்துரைபடும்.இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் ெதரிவித்துள்ளது.
- அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி தேதி ஆகும்.
- இதற்கான எழுத்துத் தேர்வு 13.10.2023 முதல் நடைபெறும். பிறந்ததேதி 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் இருக்க வேண்டும்.
நாமக்கல்:
இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி தேதி ஆகும். இதற்கான எழுத்துத் தேர்வு 13.10.2023 முதல் நடைபெறும். பிறந்ததேதி 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடப்பிரிவை பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் . நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் பங்குபெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 மாவட்டங்களில் பணிக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது.
- இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
நாக்கல்:
மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை, கோயமுத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய 5 கோட்டங்கள் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சேலம் கோட்டத்தின் கீழ் இயங்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் பணிக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான முன்னாள் படைவீரர்கள் www.petrolpumpdealerchayan.in என்ற இணையதள முகவரியில் 27.09.2023 வரை விண்ணப்பித்து பயன்பெறலாம். விருப்பமும் தகுதியும் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு நாக்கல் கலெக்டர் உமா கேட்டுக்கொண்டுள்ளார்.
- நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கிட உள்ளது. கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு
இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்திடவும், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிட அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக் கப்பட்டுள்ளார்.
இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு ஊராட்சியிலும் சேவை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி, யுபிஸ் ரவுட்டர், ரேக் மற்றும் கண்ணாடி இழை கேபிள் உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும்.
எச்சரிக்கை
மேற்கண்ட கேபிள் அமைக்கும் பணியை தடை செய்தாலோ, உபகரணங்கள் மற்றும் கேபிளை சேதப்படுத்தினாலோ அல்லது திருடினாலோ, அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாமக்கல்:
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டனர்.
மேலும் சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் உமா கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 16 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.
விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.83,500 வீதம் 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தாட்கோ மூலம் 1 பயணியர் வாகனம், 2 டிராக்டர், 14 அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு ஆணை என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.2.36 மதிப்பிட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு சேமிப்பு கடன், 1 பயிர்கடன் என மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும் வழங்கினார். தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு நிழல்வலை குடில், 1 பயனாளிக்கு நுண்ணீர்பாசனம் என மொத்தம் ரூ.2.55 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 18.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை த்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,260 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.5,580 வீதம் ரூ.11.160 மதிப்பில் இலவச தையல் எந்திரம், மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கு கடனுதவிகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.2.11 கோடி மதிப்பில் 3 வங்கி பெருங்கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு முதல்- அமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை என ஆக மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.5.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய 35 காவல்துறை அலுவலர்கள், 180 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 215 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
கண்கவர் கலைநிகழ்ச்சி
விழாவில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ராசிபுரம் ஆர்.சி தூய இருதய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 492 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதா, நாமக்கல் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணன் (நாமக்கல்), கௌசல்யா (திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், துறைச்சார்ந்த அலுவலர்கள், அரசுத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ. மேட்டூர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் பெண்கள் பலரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் நேற்று இரவு குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பரமத்தி - வேலூர் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.
- வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து பதிப்பு
புதிய வாகன பதிவு மற்றும் தரச் சான்றிதழ் பெற வரும் கனரக வாகனங்களை பரமத்தி - வேலூர் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.
இங்கே தினசரி வாகன ஓட்டுனர் உரிமம் பெற மற்றும் பழகுனர் உரிமை பெற வருகின்றனர்.
இதனால் சேலம், கரூர் செல்லும் தனியார் பஸ்கள் பரமத்தி நகருக்குள் நுழைவதை தவிர்த்து பைபாஸ் சாலையிலே சென்று விடுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.
பரமத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும் எனவும் அதுவரை பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் கூறியி ருந்தார்.
தற்போது பரமத்தி மோட்டார் வாகன ஆய்வா ளர் அலுவலக ஆய்விற்காக வரும் வாகனங்கள் அலுவ லகத்தின் அருகில் உள்ள காலி இடங்க ளில் நிறுத்தப்பட்டு போக்கு வரத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
- இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன.
நாமக்கல்:
நாமக்கல்லில் கோட்டை சாலை, பரமத்தி சாலை, கடைவீதி, மோகனூர் சாலை, திருச்சி சாலை, துறையூர் செல்லும் சாலைகள் உள்ளன.
தெரு நாய்கள்
இந்த சாலைகளில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதுதவிர இலகு ரக, கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன.
மேலும், வாகனங்கள் வரும்போது, திடீரென குறுக்கே பாய்வதால் பலர் விபத்துகளில் சிக்குகின்றனர்.
இதனால் பலருக்கு கை, கால்கள் முறிவதும், சில உயி ரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பரமத்தி சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் நாய் குறுக்கே சென்றதால் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
எனவே சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கடைசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கடைசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்த ரேஸ்வரர்,பரமத்தி வேலூ ரில் 400 ஆண்டுகள் பழமை யான எல்லையம்மன் ஆல யத்தில் உள்ள ஏகாம்ப ரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திரு வேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத தேய்பிறை பிரதோ ஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






