என் மலர்
நாமக்கல்
- மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரிபட்டி கிராமத்தில் 100- க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
- இந்த மைதான பகுதியின் குறுக்கே அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023 கீழ் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட பொன்னேரிபட்டி கிரா மத்தில் 100- க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த சில ஆண்டுகளாக செயல்ப டாமல் உள்ளது.
தொடக்கப்பள்ளி முன்பு உள்ள விளையாட்டு மைதா னம் தற்பொழுது பள்ளி செயல்படாமல் உள்ளதால் தற்பொழுது குழந்தைகள் விளையாட்டு மைதானமாக உள்ளது. இந்த மைதான பகுதியின் குறுக்கே அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023 கீழ் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் வடி வேல், பாரதீய கிசான் மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நேற்று பொது மக்கள் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திராணி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதனை தொடர்ந்து அங்கு வந்த காளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி மற்றும் பொதுமக்கள் சிமெண்ட் சாலை மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இதனிடையே சிமெண்ட் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் இந்திராணி இருதரப்பினரி டமும் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த வர்கள் கலைந்து சென்றனர்.
- பேரூராட்சியில் பணியாற்றும் 45 பெண் மற்றும் 35 ஆண் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.
- 6 வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியாளர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டு களிலும் தினந்தோறும் குப்பைகள் அகற்றுவது, கழிவு நீர் சுத்தம் செய்வது, சாக்கடை சுத்தம் செய்வது, வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளை பேரூராட்சியில் பணியாற்றும் 45 பெண் மற்றும் 35 ஆண் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று குப்புச்சிபாளையம் 6- வது வார்டு பகுதியில் 4 பெண் தூய்மை பணியாளர்கள் 3 ஆண் தூய்மை பணியா ளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அருகே வெட்டி கீழே போடப்பட்ட முள்ளு செடிகளை அங்கி ருந்த வீட்டின் உரிமையாளர்கள் தீ வைத்து அப்புறப்படுத்துமாறு கூறியுள்ளனர்.
அதனையடுத்து தூய்மை பணியாளர்கள் முட்செடிகளுக்கு தீவைத்து அருகில் பரவாமல் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தி.மு.க வைச் சேர்ந்த 6 வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியாளர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சக தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து நேற்று மாலை வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தூய்மை பணி யாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தரக்குறை வாக பேசிய வார்டு உறுப்பி னர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு 8.30 மணிக்கு அங்கி ருந்து கலைந்து சென்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராசிபுரம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூ ராட்சி பகுதிகளில் உள்ள
772 பள்ளிகளில் இத்திட்ட மானது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 35,544 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இதன் தொடக்க விழா ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த னர். பின்னர் பள்ளியில் பயிலும் 42 மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 842 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 41 ஆயிரத்து 129 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
இந்த நிகழச்சியில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அரங்கசாமி, முத்துகாளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருண், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
- அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது என நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் மோகன் விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்கினார். விதை சான்று அலுவலர் ரஞ்சிதா, உதவி விதை அலுவலர் பொன்னுவேல், உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் தேசிய தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
- இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டில் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் தேசிய தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டில் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார். நிகழ்ச்சியில் நாமக்கல் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அலங்கம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது குழந்தைகளுக்கு தாயின் கருவில் இருந்து 2 வயது வரை உள்ள சுமார் 1000 நாட்கள் தான் மூளை வளர்ச்சி பெறும் நாள். குழந்தைக்கு தாய்ப்பால் மிக மிக முக்கியமானது. குழந்தைக்கு மூளை வளர்ச்சி சீராக இருக்க தாய்ப்பால் அவசியமானதாக உள்ளது. குழந்தைக்கு அளிக்கும் தாய்ப்பாலில் கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின், சரியான முறையில் இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாயிற்கு மார்பக புற்றுநோய் வராது. எனவே தாய்பால் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அழகு குறையும் என்பது மூடநம்பிக்கை என்றார். இந்நிகழ்ச்சியில் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மாணவிகளால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
- அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.
நாமக்கல்:
நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கோபால் (42) என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து நேற்று இரவு லாரியை வீட்டின் முன்பு சாலையில் நிறுத்தி இருந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது அந்த வழியாக லாரியில் வந்த அருள், கோபாலிடம் லாரியை ஓரமாக நிறுத்தாமல் ஏன் இடையூறாக நிறுத்தி இருக்கிறாயே, நான் எப்படி போவது என கூறி யுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.
கைது
இதையடுத்து கோபாலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் நாமக்கல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்தார்.
- நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
- பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தினமும் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்வது வழக்கம். இதனால் இந்த வணிக வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்லை சேர்ந்த தனியார் டிரான்ஸ்போர்ட் ஊழியர் வினோத்குமார் என்பவர் வேலை நிமித்தமாக மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார்சைக்கிளை வணிக வளாகம் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் இது பற்றி நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இைதயடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது
47) என்பவர் மோட்டார்
சைக்கிளை திருடியது தெரிய
வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அங்காளக் கோட்டை பகுதியை சேர்ந்த ரகுபதிராஜா (25), சொக்கநாதபுரம் அருகே போரடப்பு பகுதியை சேர்ந்த அஜித் (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கேத்தங்கால் தெற்கு தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகிய 3 பேர் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கருப்பண்ண சாமி மற்றும் 18 அடி உயரமுள்ள அரிவாள் ஆகியவற்றிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருப்பண்ணசாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் சமூக அலுவலர் மணிகண்டன், கிஷோர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் விண்வெளியில் தரையிறங்கும் நிகழ்ச்சியினை
- பட்டாசு வெடித்தும் சந்தோசமாக கொண்டாடினார்கள்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் விண்வெளியில் தரையிறங்கும் நிகழ்ச்சியினை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் மகிழ்ச்சியினை தெரிவிக்கும் வகையில் அந்தப் பகுதியில் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் சந்தோசமாக கொண்டாடினார்கள். குன்னமலை ஊராட்சி பாமகவுண்டம்பாளையம் பகுதியில் இருந்துதான் சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் பரிசோதனைக்காக சந்திரனில் இருக்கும் மண் போலவே இந்த ஊரில் இருக்கிறது என்று எடுத்துச் சென்று விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நடவடிக்கைக்கு ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் குன்னமலை, சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள பாறைகள் நிலவு மண்ணுடன் 99 சதவீதம் ஒத்துப் போவது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த பாறைகளை வெட்டி எடுத்து சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அனார்தசைட் இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் -3 ரோவரும் இறங்கி பழகி பயிற்சி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
- நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கவும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.
நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவ ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர் மன்ற துணைத் தலைவர், நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல், நகர துணை செயலாளர் ராஜவேல், நகர்மன்ற உறுப்பி னர்கள் செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல், சண்முக வடிவு, திவ்யா வெங்கடேசன், தாமரைச்செல்வி மணிகண்டன், டி.என்.ரமேஷ், முருகேசன், டபிள்யூ.டி.ராஜா, அண்ணாமலை, அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






