என் மலர்
நாமக்கல்
- நாமக்கல்லில் இருந்து முட்டையின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து பல கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
- தொடர்ந்து முட்டை விலை 30 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதம் உள்ள முட்டைகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வடமாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டை 560 காசுகள் வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 23-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.60 ஆக இருந்தது.
26-ந்தேதி முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மேலும் 20 காசுகள் குறைந்து முட்டை விலை 430 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இன்றும் அதே விலை நீடிக்கிறது. தொடர்ந்து முட்டை விலை 30 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
முட்டை விலை சரிவுக்கான காரணம் குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:- நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 1 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது . கேராளாவில் நாளை (29-ந் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த சில நாட்களாக கேரளாவில் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து முட்டையின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து பல கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஓணம் பண்டிகை முடிந்ததும் மீண்டும் ஏற்றுமதி உயரும் போது முட்டை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.
இதேபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.110 ஆக நீடிக்கிறது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பிராய்லர் கோழி மற்றும் முட்டை கோழி விலைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு
- பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், நெட்டை யாம்பாளையம், கொந்த ளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், சாணார்பா ளையம், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம்,
கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், ஜமீன் எளம்பிள்ளை, குரும்பல மகாதேவி ,சோழ சிராமணி, திடுமல், சின்னாம்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபி லர்மலை, பரமத்தி வேலூர்,
பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ
சாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
கரும்புகளை வாங்கிய ஆலை உரிமையாளர்கள் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வரு கின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கவுன்சிலர் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிக்கு செல்வோம் என கூறியும், பாது காப்பு கேட்டும் பணியை புறக்க ணித்து பேரூராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகை யிட்டனர்.
பரமத்தி வேலூர்:
வேலூர் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் குப்புச்சிபாளையம் 6- வது வார்டு பகுதியில் பெண் மற்றும் ஆண் தூய்மை பணி யாளர்கள் முட்செடிகளுக்கு தீவைத்து அருகில் பரவாமல் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த தி.மு.க வைச் சேர்ந்த 6-வது வார்டு உறுப்பினர் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியா ளர்களை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் தூய்மை பணியாளர்கள் வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தரக்குறைவாக பேசிய வார்டு உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை யடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீசில் புகார்
இந்த நிலையில் நேற்று காலை 5- மணிக்கு பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் காலை 10-மணி வரை தூய்மை பணியில் ஈடுபட்ட னர். பின்னர் கவுன்சிலர் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிக்கு செல்வோம் என கூறியும், பாது காப்பு கேட்டும் பணியை புறக்க ணித்து பேரூராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகை யிட்டனர். பின்னர் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உங்க ளுடைய கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் அடிப்படையில் தூய்மை பணி யாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு எழுதிக் கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ சாயிகள் பதிவு
- பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், நெட்டை யாம்பாளையம், கொந்த ளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், சாணார்பா ளையம், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம்,
கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், ஜமீன் எளம்பிள்ளை, குரும்பல மகாதேவி ,சோழ சிராமணி, திடுமல், சின்னாம்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபி லர்மலை, பரமத்தி வேலூர்,
பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ
சாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
கரும்புகளை வாங்கிய ஆலை உரிமையாளர்கள் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வரு கின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார்.
- ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பாப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (26). இவர் புல்லாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் மில்லில் மேலாளராக உள்ளார். இந்த மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார். இதனால் மில்லில் வரவு, செலவு கணக்கு வைத்திருந்தார்.
இந்நிலையில் ராஜேந்திரன் பாக்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கடனாக எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து அறிந்த ராஜேந்திரன் ஆயில் மில்லுக்கு வந்து, தகாத வார்த்தைகளால் மேலாளர் பிரேம்குமாரை திட்டி உள்ளார்.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் பணி முடித்துவிட்டு பிரேம்குமார் ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பிரேம்குமார் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற செயல் அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
- இனிவரும் காலங்களில் பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, பொத்தனூர் ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற செயல் அலு வலர்கள் உத்தரவிட்டனர்.
அதன் பேரில் பரமத்தி, பரமத்திவேலூர், பொத்த னூர் ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இனிவரும் காலங்களில் பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
- வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பி.ஆர்.டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் பரந்தாமன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1500, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 100, 200, 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 14, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் என்பது போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது.
இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் உள்ள 32 பள்ளிகளை சேர்ந்த 1,258 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரிபட்டி கிராமத்தில் 100- க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
- இந்த மைதான பகுதியின் குறுக்கே அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023 கீழ் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட பொன்னேரிபட்டி கிரா மத்தில் 100- க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த சில ஆண்டுகளாக செயல்ப டாமல் உள்ளது.
தொடக்கப்பள்ளி முன்பு உள்ள விளையாட்டு மைதா னம் தற்பொழுது பள்ளி செயல்படாமல் உள்ளதால் தற்பொழுது குழந்தைகள் விளையாட்டு மைதானமாக உள்ளது. இந்த மைதான பகுதியின் குறுக்கே அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023 கீழ் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் வடி வேல், பாரதீய கிசான் மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நேற்று பொது மக்கள் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திராணி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதனை தொடர்ந்து அங்கு வந்த காளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி மற்றும் பொதுமக்கள் சிமெண்ட் சாலை மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இதனிடையே சிமெண்ட் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் இந்திராணி இருதரப்பினரி டமும் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த வர்கள் கலைந்து சென்றனர்.
- பேரூராட்சியில் பணியாற்றும் 45 பெண் மற்றும் 35 ஆண் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.
- 6 வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியாளர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டு களிலும் தினந்தோறும் குப்பைகள் அகற்றுவது, கழிவு நீர் சுத்தம் செய்வது, சாக்கடை சுத்தம் செய்வது, வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளை பேரூராட்சியில் பணியாற்றும் 45 பெண் மற்றும் 35 ஆண் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று குப்புச்சிபாளையம் 6- வது வார்டு பகுதியில் 4 பெண் தூய்மை பணியாளர்கள் 3 ஆண் தூய்மை பணியா ளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அருகே வெட்டி கீழே போடப்பட்ட முள்ளு செடிகளை அங்கி ருந்த வீட்டின் உரிமையாளர்கள் தீ வைத்து அப்புறப்படுத்துமாறு கூறியுள்ளனர்.
அதனையடுத்து தூய்மை பணியாளர்கள் முட்செடிகளுக்கு தீவைத்து அருகில் பரவாமல் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தி.மு.க வைச் சேர்ந்த 6 வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியாளர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சக தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து நேற்று மாலை வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தூய்மை பணி யாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தரக்குறை வாக பேசிய வார்டு உறுப்பி னர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு 8.30 மணிக்கு அங்கி ருந்து கலைந்து சென்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராசிபுரம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூ ராட்சி பகுதிகளில் உள்ள
772 பள்ளிகளில் இத்திட்ட மானது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 35,544 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இதன் தொடக்க விழா ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த னர். பின்னர் பள்ளியில் பயிலும் 42 மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 842 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 41 ஆயிரத்து 129 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
இந்த நிகழச்சியில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அரங்கசாமி, முத்துகாளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருண், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
- அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது என நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் மோகன் விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்கினார். விதை சான்று அலுவலர் ரஞ்சிதா, உதவி விதை அலுவலர் பொன்னுவேல், உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் தேசிய தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
- இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டில் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் தேசிய தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டில் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார். நிகழ்ச்சியில் நாமக்கல் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அலங்கம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது குழந்தைகளுக்கு தாயின் கருவில் இருந்து 2 வயது வரை உள்ள சுமார் 1000 நாட்கள் தான் மூளை வளர்ச்சி பெறும் நாள். குழந்தைக்கு தாய்ப்பால் மிக மிக முக்கியமானது. குழந்தைக்கு மூளை வளர்ச்சி சீராக இருக்க தாய்ப்பால் அவசியமானதாக உள்ளது. குழந்தைக்கு அளிக்கும் தாய்ப்பாலில் கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின், சரியான முறையில் இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாயிற்கு மார்பக புற்றுநோய் வராது. எனவே தாய்பால் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அழகு குறையும் என்பது மூடநம்பிக்கை என்றார். இந்நிகழ்ச்சியில் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மாணவிகளால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.






