என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காட்டை சேர்ந்த வர்கள் சண்முகம் (70)-நல்லம்மாள் (65) தம்பதி. கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி அதிகாலையில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி சண்முகத்தையும், குரல்வளையை அறுத்து நல்லம்மாளையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகையும் திருடி சென்றனர்.

    இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இதனால் கொலையான தம்பதியின் உறவினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில், இறந்த சண்முகத்தின் குடும்பத்தாருக்கு எதிரிகளே இல்லாத சூழ்நிலையில் வீடு மாறி கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் கொலை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.

    • காவிரி ஆற்றில் அனுமதியின்றி டெம்போ வாகனத்தில் மணல் எடுப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காவிரி ஆற்றில் டெம்போவில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் அனுமதியின்றி டெம்போ வாகனத்தில் மணல் எடுப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காவிரி ஆற்றில் டெம்போவில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதனையடுத்து போலீசார் டெ ம்போ வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ய அனிச்சம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர் , கந்தம்பாளையம், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    இரவு முழுவதும்

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பகலில் விட்டு விட்டு பெய்த நிலையில் இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு சென்றனர்.

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தொடர் மழையின் காரணமாக தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வானம் பகல் ேநரத்தில் மேக மூட்டமாக காணப்பட்டது. லேசான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை பெய்ததால் நாமக்கல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. சேலம் ரோடு, கோட்டை ரோடு, நேதாஜி சிலை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் ரோட்டில் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேர வெப்ப நிலை மிகவும் குறைந்து குளிர் காற்று வீசியது.

      இந்த ஆண்டு பருவமழை உரிய பெய்யாததால், மானாவரி பயிர் விதைப்பு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது காலம் கடந்து உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.

      நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் விபரம் வருமாறு:-

      நாமக்கல் 58, எருமப்பட்டி 60 , குமாரபாளையம் 85.40 , மங்களபுரம் 34.60, மோகனுர் 77, பரமத்தி வேலூர் 60, புதுச்சத்திரம் 14.40 , ராசிபுரம் 18, சேந்தமங்கலம் 39, திருச்செங்கோடு 15, கொல்லிமலை (செம்மேடு) 27.

      மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 488.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

      • கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
      • அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

      அதன் அடிப்படையில் பரமத்தி சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இருக்கூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

      ரெயிலில்...

      விசாரணையில் இருக்கூரை சேர்ந்த அக்பர் உசேன் என்பவரது மனைவி சுப்பியா(40) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலோக்சிங் என்பவரது மகன் சங்கர் சிங் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

      மேலும் சங்கர் சிங், சுப்பியா மற்றும் அவரது கணவர் அக்பர் உசேன் என்கிற ராஜு ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு சென்று பலமுறை மொத்தமாக கஞ்சாவை ெரயில் மூலம் கடத்தி வந்து கபிலர்மலை பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

      கைது

      சுப்பியா மற்றும் சங்கர் சிங் ஆகியோரிடமிருந்து காய்ந்த விதைகள், இலைகள், காய்கள், பூ மற்றும் தன்டுகளுடன் கூடிய உலர்ந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

      இதையடுத்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் 2 பேரும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

      • பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை மற்றும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
      • நாட்டில் நல்ல மழை பொழியவும்‌, விவசாயம் செழிக்கவும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காவிரித்தாய்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.‌

       பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞான சம்பந்தர் மடாலயத்தினர் அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை மற்றும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நாட்டில் நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காவிரித்தாய்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

      அதனை தொடர்ந்து திருமுருக கிருபானந்த வாரியர் சாமிக்கு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தேவாரம், திருவாசகம், திருப்புகழ் மற்றும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. தீப ஆராதனை, சாதுக்கள் வழிபாடு மற்றும் அருளாசி வழங்குதலும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. விழாவில் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மடாலயத்தினர் மற்றும் அகில பாரத சந்நியாசிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

      • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
      • முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள், கோப்பணம்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், இருக்கூர், கபிலக்குறிச்சி , பெரியசோளிபாளையம், தி. கவுண்டம்பாளையம் ,திடுமல், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர், கொத்தமங்கலம் ,குறும்பலமகாதேவி, ஜமீன் இளம்பள்ளி , சோழசிராமணி ,சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி குப்பரிக்காபாளையம், மணியனூர், நல்லூர், குன்னமலை, மாணிக்கநத்தம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, மணப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

      முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள்.

      சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

      • வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன்- உஷா தம்பதியரின் மகன் ஹரீஷ் (8).
      • இரவு வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை அப்பகுதியில் இருந்த நச்சு பாம்பு ஒன்று கடித்தது.

      வாழப்பாடி:

      சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன்- உஷா தம்பதியரின் மகன் ஹரீஷ் (8). இந்த சிறுவன் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான் . நேற்று இரவு வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை அப்பகுதியில் இருந்த நச்சு பாம்பு ஒன்று கடித்தது. இதில் விஷம் ஏறி மயங்கி கிடந்த சிறுவன் ஹரீஷை மீட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

      இச்சம்பவம் இவரது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ேமலும் சிறுவனை கடித்த பாம்பை கண்டுபிடித்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

      • ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது.
      • ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

      கொல்லிமலை:

      நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வனவராக பணியாற்றி வந்தவர் ரகுநாதன் (40). கேரளாவைச் சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் (43), கொல்லிமலை அரியலூர் நாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு சேலம் நோக்கி ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர்.

      அவர்கள் இரவு 11.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் அவர்கள் வந்த ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது. இதில் ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

      இதுகுறித்து தகவல் தெரிந்ததும் பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் எதற்காக சேலம் சென்றார்கள்? விபத்தான ஜீப்பை ஓட்டி வந்தது மர வியாபாரியான மார்த்தாண்டம் ராஜனா? அல்லது வேறு யாராவது ஓட்டி வந்தார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

      • மணிகண்டன் (43). வக்கீல். இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் எருமப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
      • பின்னர் அந்த கும்பல் திடீரென வக்கீல் மணிகண்டனை வழிமறித்து தாக்கியது.

      எருமப்பட்டி:

      நாமக்கல் அடுத்த எருமப்பட்டி வரகூரை சேர்ந்தவர் மணிகண்டன் (43). வக்கீல். இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் எருமப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் மணிகண்டனை ஒரு கும்பல் பின் தொடர்ந்து வந்தது.

      வெட்டிக் கொலை

      பின்னர் அந்த கும்பல் திடீரென வக்கீல் மணிகண்டனை வழிமறித்து தாக்கியது. தொடர்ந்து அவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் நிலை குைலந்த வக்கீல் மணிகண்டன் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழந்தார்.

      இதையடுத்து அந்த மர்ம கும்பல் மீண்டும் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் வக்கீல் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.

      போலீசுக்கு தகவல்

      இதுப்பற்றி தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், டி.எஸ்.பி. தனராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

      பின்னர் போலீசார் கொலைசெய்யப்பட்ட வக்கீல் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      வக்கீல் மணிகண்டன் கொலை செய்து போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வக்கீல் ரியல் எஸ்டேட் தகராறில் ெகாலை செய்யப்பட்டாரா, அல்லது வேறுகாரணமாக என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
      • தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

      பரமத்திவேலூர்:

      பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6 -க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது. தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

      • பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
      • கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

      அப்போது செம்மடையில் இருந்து கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது. இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்த அங்கம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவர் படுகாயமடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×