என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (6-ந் தேதி) தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13-ல் தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதேபோல்,

    பிளஸ்-1 பொதுத்தேர்வு, மார்ச் 14-ல் தொடங்கி இன்று முடிகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (6-ந் தேதி) தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

    இதற்காக மாவட்டம் முழுவதும் 94 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 94 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 95 துறை அலு வலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படை உறுப்பி னர்கள், 9 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள் என மொத்தம் 2,069 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்களுக்கு, பலத்த போலீஸ் பாது காப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    • கோப்பணம்பாளையத்தில் உள்ள பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி சித்தர் பீடத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அதிகாலை மங்கள கணபதி யாக வேள்வி, மகாதீப ஆராதனை நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம்- கோப்பணம்பாளையத்தில் உள்ள பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி சித்தர் பீடத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அதிகாலை மங்கள கணபதி யாக வேள்வி, மகாதீப ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாளிகை ஊர்வலமாக எடுத்து வருதல் நிகழ்ச்சியும், விநாயகர் வழிபாடும், முதற்கால யாக வேள்வி பூஜையும், நேற்று 4-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் திருமுறை பாராயணம் மற்றும் 2-ம் கால யாக வேள்வி பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் அஷ்டலட்சுமி வழிபாடும், 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கலசம் வைத்தல், யந்தர ஸ்தாபனம், ரத்தனந்நியாசம், அஷ்ட பந்தனம் நடைபெற்றது. இன்று அதிகாலை திருமுறை பாராயணம், நாடி சந்தானம் 4-ம் கால யாக வேள்வி பூஜையும், அதை தொடர்ந்து மகா தீபாராதனையும், யாத்திரா தானம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்துக் குடங்களுடன் சிவாச்சாரியார்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பாலகணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தர் என்கிற சதானந்த சித்தர் ஜீவசமாதி ஆலய கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்றது. மகா அபிஷேகத்தை முன்னிட்டு பால கணபதி, பாலமுருகன், சதாசிவம், சக்கரப்பட்டி சித்தருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால கணபதி, பாலமுருகன், சகாசிவம், சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தர் அறக்கட்டளை மற்றும் சுற்றுவட்டார அனைத்து சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முதல்வர் ரேணுகா தலைமையில், திருவள்ளுவர் நகர் மகேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
    • துறையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தல், மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் என்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முதல்வர் ரேணுகா தலைமையில், திருவள்ளுவர் நகர் மகேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம் தூய்மை செய்தல், வெள்ளையடித்தல், திருவள்ளுவர் நகர், நடராஜா நகர் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்துதல், அங்குள்ள மாணவ , மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி, பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் துறையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தல், மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் என்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

    குமாரபாளையம் கிளை நூலகர் சுப்பிரமணியம் பங்கேற்று, கல்வித்துறையில் நூலகங்கள் பங்கு என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர்கள் ஞானதீபன், பிரகாஷ், சரவணாதேவி, கீர்த்தி, கண்ணன், காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர். 

    • ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர்.

    மொத்தம் 2,150 மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில விரலி ரகம் 1570 மூட்டைகளும், உருண்டை ரகம் 500 மூட்டைகளும், பணங்காலி ரகம் 80 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

    இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6406-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7373-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5777-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6269-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 134-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 599-க்கும் ஏலம் விடப்பட்டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இங்கு 2,150 மஞ்சள் மூட்டைகள் மொத்தம் ரூ.75 லட்சத்திற்கு ஏலம்போனது.

    • காலை மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருச்செங்கோடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • கணக்கம்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் திடீரென இளமுருகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தளிகை, சுப்பன்நாய்க்கனூரைச் சேர்ந்த தலமநாய்க்கர் மகன் இளமுருகன் (வயது 46). இவர் நாமக்கல், நல்லியாம் பாளையம் மின்சார வாரியத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று காலை மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருச்செங்கோடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேலகவுண்டம்பட்டி அருகே கணக்கம்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் திடீரென இளமுருகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இளமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வேலகவுண்டன் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிகிச்சை

    இதனிடையே, இளமுருகன் மீது மோதிய கார், சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதி சாலை ஓரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் காரை ஓட்டி வந்த டிரைவர் கணேசன் (38) காயம் அடைந்தார். அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான இளமுருகனுக்கு பத்மினி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். வேல கவுண்டம்பட்டி போலீசார், அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் கணேசன் மீது வழக்கு பதிவு செய்தனர். காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • திருவிழாக்கள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை, விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், காக்கரட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கரட்டான் ரூ.700-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர். விலை உயர்ந்துள்ளதால், பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது.
    • தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு‌ அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், செல்லாண்டி அம்மன், கொங்கலம்மன் கோவில்களில் காப்பு கட்டும் விழாவும் நடைபெற்றது.

    20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 26-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெற்றது.

    27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    3-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ஶ்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது.

    இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு பொங்கல் மாவிளக்கு பூஜையும், 6-ந் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், 7-ந் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

    • கோழி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை பண்ணையாளர்கள் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
    • முட்டை விற்பனை மைனஸ் 40 பைசா என இன்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தற்போது முட்டை விலை 450 காசுகளாக உள்ளது. சமீப காலமாக கோழி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை பண்ணையாளர்கள் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முட்டை விற்பனை மைனஸ் 40 பைசா என இன்று நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 40 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அவ்வாறு எவரேனும் 40 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    • பால் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, இவ்விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலையாக இல்லை.
    • விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.

    நாமக்கல்:

    நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு உப தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். பால் உற்பத்தி மூலம், அவர்களின் அன்றாட செலவுக்கான, பொருளாதார தேவைகளை ஈட்டி வருகின்றனர்.

    தற்போது கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் லாபம் தரக் கூடியதாக இல்லாமல், கடினமான வேலையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்வதற்கு மாட்டுத் தீவனம் விலை, வேலை ஆட்கள் கூலி பலமடங்கு உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்களின் வாடகை பெருமளவு உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் பால் விலையை உயர்த்தி கொடுக்க கோரி ஏற்கனவே பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஒரு லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலை உயர்த்தி பசும்பால் லிட்டர் 1-க்கு ரூ.35-ம், எருமைப்பால் லிட்டர் 1-க்கு ரூ.44-ம் தமிழக அரசு அறிவித்தது.

    பால் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, இவ்விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலையாக இல்லை.

    பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட பேராட்டங்கள் நடத்தியும், தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையே நீடிக்கிறது.

    எனவே பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி அறிவிக்க வேண்டுகிறோம். அப்படி அறிவிக்காவிட்டால், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார்.

    கூட்டுறவு சங்கங்களில், பயிர்கடன் வழங்கும்போது, லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரத்தில், அதிக அளவில் கடன் கொடுக்கும் வகையில், பல விதிமுறைகள் வாய்மொழியாக தளர்த்தப்பட்டு, குறியீட்டை முடிக்க நிர்ப்பந்தம் செய்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், விதிமீறல்கள் எனக்கூறி, பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக, சங்க செயலாளர்கள், பணியா ளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கை களையும் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    முன்னதாக, நாமக்கல் நல்லிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இருந்து பணியாளர்களின் கண்டன பேரணி கலெக்டர் அலுவல கம் வரை சென்றது. மாவட்டம் முழுவதும் இருந்து, ஏராளமான சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
    • கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கொத்தடிமைத் தொழில் முறை ஒழிப்பினை சிறப்பாக நடைமுறைபடுத்திடும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு, மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

    தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பிஎஸ்என்எல் மூலம் 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் , கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாரர்களை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்டப்பலன்களும் கிடைக்கச் செய்யும் வகை யில்‌, விவசாயி களுடைய விவரங்கள் குறிப்பாக நில உடமை விவ ரம் உள்ளிட்டவை சரி பார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, விதை சான்ற ளிப்பு துறை, சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்டப்பலன்களும் கிடைக்கச் செய்யும் வகை யில், விவசாயி களுடைய விவரங்கள் குறிப்பாக நில உடமை விவ ரம் உள்ளிட்டவை சரி பார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் அந்தந்த கிரா மங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே விவசாயிகள் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய வற்றுடன் உரிய கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    ×