என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    காவலாளிகளை கட்டிப்போட்டு விட்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் அரசு மதுபான கடை(டாஸ்மாக்) உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 10-ந்தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளன. அதன்படி பாலக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையும் பூட்டப்பட்டு இருந்தது.

    கீழையூர் மேல ஈசனூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(59), முப்பத்தி கோட்டகம் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்த அந்தோணி (45) ஆகிய இருவரும் இரவு காவல் பணியாளராக இங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள சிறிய கீற்று கொட்டகையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

    நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அந்த மதுபான கடைக்கு 5 பேருக்கு மேல் வந்துள்ளனர். அவர்களில் சிலர் மதுக்கடையில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த இருவரின் வாய், கைகள் மற்றும் கால்களை கட்டி விட்டு கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர்.

    மேலும் டாஸ்மாக் கடையின் ஷட்டரில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து கடையின் உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.73 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். மர்ம நபர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இரவு காவலர்கள் இருவரும் தங்களுக்குள்ளாகவே கட்டப்பட்டு இருந்த கட்டை அவிழ்த்து விட்டு பின்னர் நடந்த சம்பவத்தை டாஸ்மாக் கடை மேலாளருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் கொள்ளை நடந்த மதுக்கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் 3 தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    நாட்டு மருந்து கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் கடை உரிமையாளர்கள், நாட்டு மருந்து பயன்படுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து நேற்று முதல் நாட்டு மருந்து கடைகள், பழக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாகை பெரிய கடை வீதியில் 10-க்கும் மேற்பட்ட நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் பழக்கடைகளும் திறக்கப்பட்டன.

    இந்த கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி சென்றனர். நாட்டு மருந்து கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் கடை உரிமையாளர்கள், நாட்டு மருந்து பயன்படுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்ததால் பழ வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    காலையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனையாவதால் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயிருடன் மீன்கள் கிடைப்பதால் மீன்பிரியர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. நாள்தோறும் இப்பகுதியில் இருந்து 5 முதல் 10 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு உள்ளூர் தேவைகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஆறுகாட்டுத்துறையில் 60 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம் பகுதியில் பைபர் படகில் நாள்தோறும் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடல் மீன்கள் பிடிக்க முடியாத சூழ்நிலையில் தற்போது வேதாரண்யம் தாலுகாவில் அவரிக்காடு, கரியாப்பட்டினம், தென்னம்புலம், கள்ளிமேடு, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்கள், குட்டைகள், நீரோடைகள் மற்றும் வளர்ப்பு மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பனாறு, அடப்பாறு, மாணங்கொண்டான் ஆறு உள்ளிட்ட ஆற்று பகுதிகளில் சிறு,சிறு வலைகளை வைத்து மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இவர்களது வலைகளில் மடவாய், சிலேபி, கெளுத்தி, குறவை மீன், விரால், கெண்டை உள்ளிட்ட பல்வேறு மீன்கள் கிடைக்கின்றன. ஆற்று பகுதிகளில் அதிகாலையில் கையால் தடவி ஏராளமானோர் இறால் பிடிக்கின்றனர்.

    கடல் மீன்கள் கிடைக்காத நிலையில் மீன்பிரியர்கள் இப்பகுதியில் கிடைக்கும் நாட்டு மீன்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆற்றில் பிடிக்கப்படும் இறால் கிலோ ரூ.300, மடவா மீன் ரூ.200, சிலேபி ரூ.100, உளூவை ரூ.100, உயிருடன் உள்ள விரால் ரூ.400, இறந்த விரால் ரூ.200, கெண்டை மீன் ரூ.150-க்கும் விலை போகிறது. காலையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனையாவதால் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயிருடன் மீன்கள் கிடைப்பதால் மீன்பிரியர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
    நாகை அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    நாகை அருகே சிக்கல் ஊராட்சி, கீழக்கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியம் பழம் உலுக்கி கொண்டிருந்தார். அவரது மனைவி செல்லம்மாள் மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பக்கிரிசாமி தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பக்கிரிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசு கால்நடை மருத்துவர் பலியானார். இதுதொடர்பாக மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
    திட்டச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் கே.டி.எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது39). இவர் நாகை மாவட்டம் திருமருகல் அருகே கங்களாஞ்சேரியில் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

    இவர் தினமும் திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் வழக்கம் போல் ஜீவானந்தம் நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கங்களாஞ்சேரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் அருகே சென்ற போது எதிரே வண்டாம்பாளை வடக்கு தெருவை சேர்ந்த குஞ்சுபிள்ளை மகன் மனோகரன்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஜீவானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் இன்றி உயிர் தப்பிய மனோகரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவானந்தத்தின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான மனோகரனை கைது செய்தனர்.
    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7¾ கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினமும், நேற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டது. இந்த தளர்வு காரணமாக மளிகை, இறைச்சி கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் 6 மணி வரை திறந்திருந்தன.

    2 வாரம் முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் குவிந்து மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். இதனால் நாகை, புதிய பஸ் நிலையம், நல்லியான் தோட்டம், முதலாவது கடற்கரை சாலை, ரெயில் நிலையம், செல்லூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

    சில கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் 100 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.7 கோடியே 87 லட்சத்து 2 ஆயிரத்து 510-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

    இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். மதுப்பிரியர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தினால், சில கடைகளில் மதியத்துக்குள் மதுபாட்டில்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

    மதுபாட்டில்கள் விற்று தீர்ந்ததால் விற்பனையாளர்கள், டாஸ்மாக் கடைகளின் ‌‌ஷட்டர்களை பாதி அளவு மூடி விட்டு வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த மதுப்பிரியர்கள் முன்கூட்டியே கடையை ஏன் மூடினீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரும்பாலான கடைகளில் மதுபாட்டில்கள் தீர்ந்ததால் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. கடைசி நாளன்று ஆர்வமுடன் வந்த மதுப்பிரியர்கள் மதுபாட்டில்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முழு ஊரடங்கு காரணமாக கடந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அனல் பறந்தது.
    வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகனை பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அவர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை புதுத்தெரு, சால்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மகன் சாமிநாதன் (வயது19). கூலி தொழிலாளி. சாமிநாதன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் என்று பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாமிநாதன் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டு தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உணவு விடுதி, காய்கறி கடை, பால் கடை உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டு வருகிறது.
    சீர்காழி:

    தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதும் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உணவு விடுதி, காய்கறி கடை, பால் கடை உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 50 சதவீத பயணிகளோடு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வைரசின் தாக்கம் அதிகரிப்பதால் சீர்காழி நகர் பகுதியில் தினம்தோறும் ஏராளமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வருகிறது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் சீர்காழி அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் சீர்காழி நகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி நகர பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை கடந்தி வந்து வீரன் கோவில் மற்றும் அக்கரகடம்பனூர் அருகே விற்பது தெரியவந்தது.

    இதையடுத்து சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த செல்வவிநாயகம் (வயது 42), ராஜேஷ்(29) ஆகிய இருவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். இவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயம் கைப்பற்றினர். மேலும் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் தொடர்பாக தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அய்யர் தனபால் (வயது 58) குற்றம் புரிந்தான்இருப்பு. மொட்டை முருகன் என்கிற முருகையன் (47) எரும்புகன்னி, ராதாமங்கலம். தேவேந்திரன் (56), சிவன் கோவில் தெரு கோவில் கடம்பனூர். ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது

    இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா. பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர். கைது செய்ய உத்தரவிட்டார் அதன்படி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    வேதாரண்யம்:

    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வங்கி மூடப்பட்டது.
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-


    நாகப்பட்டினம்
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1ஆளூர் ஷாநவாஸ்விசிக66281
    2தங்க.கதிரவன்அதிமுக59043
    3மஞ்சுளா சந்திரமோகன்அமமுக3503
    4சையது அனாஸ்மநீம2540
    5அகஸ்டின் அற்புதராஜ்நாம் தமிழர்9976
    கீழ்வேளூர் (தனி)
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1நாகை மாலிசிபிஎம்67988
    2வடிவேல் ராவணன்பாமக51003
    3நீதிமோகன்அமமுக2503
    4டாக்டர் ஜி.சித்துமநீம2906
    5பொன் இளவழகிநாம் தமிழர்15173
    வேதாரண்யம்
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1ஓ.எஸ்.மணியன்அதிமுக78719
    2எஸ்.கே.வேதரத்தினம்திமுக 66390
    3பி.எஸ்.ஆறுமுகம்அமமுக1284
    4முகமது அலிமநீம437
    5ராசேந்திரன்நாம் தமிழர்9106
    ×