என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கத்தரிப்புலம் கிராமம், கோயில் குத்தகை வடக்கு பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ராம்சிங் (வயது 54). என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், வீட்டு அருகிலேயே ஊறல் போட்டு வைத்திருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு போலீசார் சென்றனர்.

    அப்போது ராம்சிங் தப்பி ஓடிவிட்டார். சோதனையில் வீட்டில் வைத்திருந்த ஒரு லிட்டர் எரிசாராயம் மற்றும் வீட்டருகே 2 கேன்களில் ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றி அழித்தனர். ராம்சிங் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.

    கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலி மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 211 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் கருணாநிதி, ஊராட்சி துணை தலைவர் சிவசக்தி மோகன், ஊராட்சி செயலர் மாதவன் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சி திருபஞ்சனம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    முகாமை ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகிலன், ரோகிணி மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 120 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி, ஊராட்சி துணை தலைவர் சுகுணா, ஊராட்சி செயலர் செல்லதுரை மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செல்லூர். சுனாமி குடியிருப்பை சேர்ந்த பதினெட்டாம் படியான் (வயது 41), பிஆர்புரம், கோவில் தெரு, அந்தோணி ராஜ் (34) ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி கலெக்டர் பிரவீன்பிநாயர் 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    வேதாரண்யம் அருகே உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேஷன் கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு காவல் சரகம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). இவர் அதே ஊரில் ரே‌ஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த வேதாரணயத்தில் படித்து கொண்டு தலைஞாயிறில் பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவியை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதா கவும் மிரட்டியுள்ளாராம்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் அறிவுரையின்படி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுப்ரியா வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    மாணவி மருத்துவ பரிசோதனைக்கு பின் பெரியம்மாவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நாளை முதல் தினமும் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் குழுவின் செயல்பாடுகளை கண்காணிக்கும் ஊராட்சி அளவிலான குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ தலைமையில் நடைபெற்றது

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ துரைமுருகன் தாசில்தார், ரமாதேவி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி வெற்றிச்செல்வன், தனி அலுவலர் வேல்ஸ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் குழு உறுப்பினர்களை அந்தந்த மண்டலங்களில் குழுவாக சென்று தினமும் 50 குடும்பங்களுக்கு வருகிற 7 ந் தேதி முதல் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. வேதாரண்யம் ஊராட்சியில் உள்ள ஆதனூர், கோடியக்கரை, கோடியக்காடு, தேத்தாகுடி, தெற்கு நெய்விளக்கு, கருப்பம்புலம், குரவப்புலம், கடிநெல்வயல், பன்னாள் ஆகிய அனைத்து ஊராட்சிகளிருந்து கலந்து கொண்டனர்.
    நாகூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகூர்:

    கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் முக்கிய சாலைகளில் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
    வேதாரண்யம்:

    தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் வீடு தேடி வந்து விற்பனை செய்யப்படுகிறது.வேதாரண்யம் தாலுகாவில் தேவையின்றி சுற்றித்திரிந்த 317 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்ட எல்லையான செங்காதலை பாலம் அருகே சோதனைச் சாவடி அமைக்கப்பட்ட வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேவையின்றி வாகனங்களில் வருபவர்களுக்கு அறிவுரை கூறியும், முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முக கவசமும் போலீசார் வழங்கி வருகின்றனர்.
    கீழ்வேளூர் ஒன்றியம் குருக்கத்தி ஊராட்சியில் அரசு மேல்நிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் ஒன்றியம் குருக்கத்தி ஊராட்சியில் அரசு மேல்நிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா சக்திவேல் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலி தலைமையில் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 195 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதேபோல ராதாமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் ஜீவா தொடங்கி வைத்தார். இதில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரோகிணி தலைமையில் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 156 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். இதில் 106 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    தலைஞாயிறை அடுத்த வாட்டாகுடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார்.இதில் சுற்றுவட்டார ஊராட்சிகளை சேர்ந்த 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதேபோல துளசாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.இதில் 60-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே ஓர்குடி ஆற்றங்கரை பகுதியில் சாராயம் விற்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி (வயது 30) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல ஆனைமங்கலம்- மஞ்சவாடி காலனி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சாலமன் மகன் டேவிட் சதிஷ் (29), ஆனைமங்கலம் - மஞ்சவாடி பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் இங்கர்சால் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    வாய்மேடு:

    வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். முகாமில் ஆலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார்.
    திட்டச்சேரி:

    திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.இதில் 102 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நோய் தொற்று பாதிப்பு குறித்தும், நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் மருத்துவர்கள் மணிவேல், ஹரிதா, சுகாதார ஆய்வாளர் பரமநாதன், பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கீழையூரில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் 69 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேளாங்கண்ணி:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 24-ந்தேதி முதல் நேற்று வரை ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த வாகனங்கள் மீது கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

    அதன்படி கீழையூர், மேலப்பிடாகை, திருப்பூண்டி, பிரதாபராமபுரம், விழுந்தமாவடி உள்ளிட்ட போலீஸ் சரகங்களில் மொத்தம் 69 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஊரடங்கு முடிந்தபின் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    ×