என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகூர், கீழ்வேளூர் பகுதிகளில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தியதாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    நாகூர்:

    நாகை மாவட்ட பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் நாகை அருகே உள்ள புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன.

    அங்கிருந்து நாகை மாவட்ட பகுதிக்கு சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று காரைக்காலில் இருந்து மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக நாகை நோக்கி 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் மதுகடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் தலைஞாயிறு திருமாளம் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது32), கீழ்வேளூர் சித்தாம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாகூரான் (50), கார்த்தி (28), கீழ்வேளூர் மேலகாவலகுடியை சேர்ந்த துரைசாமி (55), திருவாரூர் விளமல் வடக்கு தெருவை சேர்ந்த கிரிகரன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்களிடம் இருந்து 105 மதுபாட்டில்கள், அவற்றை கடத்துவதற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ், நாகூரான், கார்த்தி, துரைசாமி, கிரிகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    கீழ்வேளூர் அருகே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கருணாவெளி - ஓர்குடி மெயின் சாலை, கீழ்வேளூர் கடைவீதி, கானூர் சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த கீழ்வேளூர் கருணா வெளியை சேர்ந்த விஜயராகவன் (25), அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் (20), நீடாமங்கலம் புதுதேவன்குடியை சேர்ந்த விக்னேஷ் (29), அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஜோதிபாசு (45), மன்னார்குடியை சேர்ந்த தினேஷ் (23), எடையூரை சேர்ந்த ராம்கி (31), கானூரை சேர்ந்த தனபால் (28) கோட்டூர் புழுதிக்குடியை சேர்ந்த மாதவன் (32), கீழ்வேளூரை சேர்ந்த சிவனேசன் (33) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 180 லிட்டர் சாராயம் மற்றும் 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம்-14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு நாகை கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை நீலா சன்னதியில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 விதமான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கலெக்டர் பிரவீன் நாயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 விதமான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக நாகை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள நியாய விலைக்கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 200 நபர்கள் வீதம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 356 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 683 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கி தொகுப்பு வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி முதல் தவணை தொகை ரூ.2 ஆயிரம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 032 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது புதிய முயற்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று சத்து மாத்திரை உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகை அரசு மருத்துவமனையில் தேவைக்கேற்ப ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், நகர இளைஞரணி அமைப்பாளர் சத்ரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மளிகை மற்றும் காய்கறி கடைகளில் முககவசம் அணியாமல் அலட்சியமாக வேலை பார்த்த 5 பேருக்கு தலா 200 வீதம் 1,000 அபராதம் விதித்தனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் பலசரக்கு, மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நாகையில் வருவாய்துறை அதிகாரி கீர்த்திவாசன் தலைமையில் போலீசார் கொண்ட பறக்கும் படையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மளிகை மற்றும் காய்கறி கடைகளில் முககவசம் அணியாமல் அலட்சியமாக வேலை பார்த்த 5 பேருக்கு தலா 200 வீதம் 1,000 அபராதம் விதித்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி டீக்கடை, பாத்திரக்கடை, சலூன் கடைகள் உள்ளிட்ட கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ததாக 4 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 500 வீதம் 2,000 அபராதம் விதித்தனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    சிக்கல்:

    தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் கடந்த 8-ந் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.. இதனால் அங்கிருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வருவதை தடுக்க நாகை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் சிக்கல் கடைதெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாகை, பாப்பாகோவில் சமத்துவபுரத்தை சேர்ந்த வனராஜன் மகன் முரசொலிமாறன் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சசிகுமார் (23) என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இதே போல கீழ்வேளூர் காக்கழனி பகுதிகளில் 4 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கடைத்தெரு பகுதியை சேர்ந்த ராமையன் மகன் போத்திராஜ் (32), கோட்டூர் தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் இளவரசன் (24), எடையூர் வஞ்சி கோட்டகம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மோகன்ராஜ் (33), கீழ்வேளூர் அருகே புதுச்சேரி கீழத்தெரு பழனிச்சாமி மகன் ஜெயசீலன் (39), ஆகிய 4 ஆகிய பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    திட்டச்சேரி அருகே 2 மோட்டார்சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த தஞ்சை மாவட்டம் பாபநாசம் உத்தாணி நடுத்தெருவை சேர்ந்த பைரவன் மகன் மணிகண்டன் ( 26),திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி கீழத்தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் யுவராஜ் (30) ஆகிய 2 பேரை யும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    நாகையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார்களை தேர்வு செய்வதில் கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரியநாட்டுதெரு மீனவ கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று நகுலன் (வயது30) என்பவர் மகாலட்சுமிநகர் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் நகுலனின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. உடனே அருகில் இருந்தவர்கள் நகுலனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர் குழுவினர் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரிநாட்டுதெருவைச் சேர்ந்த தர்மபாலன், அருண்குமார், பிரபாகரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி போலீசார் வருகின்றனர்.

    பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று கண்டறிய வீடு, வீடாக சென்று , காய்ச்சல், இருமல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனை நடைபெற்றது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று கண்டறிய வீடு, வீடாக சென்று , காய்ச்சல், இருமல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனை நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் மாரிமுத்து, ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் அருண் பிரபு உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
    நாகூர் பகுதியில் சாராயம் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்- காரை பறிமுதல் செய்தனர்.
    நாகூர்:

    கொரேனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 8-ந் தேதி முதல் காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாராயம் மற்றும் மதுபானம் கடத்தல் சம்பவம் அதிக அளவில் நடைபெற வாய்ப்பு உள்ளதை அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் தலைமையில் மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி, நாகூர் - முட்டம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் நாகூர்போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் 10 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் மாவூர் மேலத்தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் ரகுவரன் (வயது 26), பொய்கைநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் ராகுல் (26), அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தாமோதரன் (26), திருப்பூண்டி பாரதிநகரை சேர்ந்த அந்தோணி அருள்தாஸ் மகன் அருள் ஆண்டனி (41) என்பதும், இவர்கள் காரில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    இதபோல கிழக்கு கடற்கரை சாலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் புலிபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் தியாகு (28), நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி நகரை சேர்ந்த சேகர் (45), சிக்கல் கீழத் தெருவை சேர்ந்த கணேசன் மகன் வெங்கடேசன் (35), அதே பகுதியை சேர்ந்த எழிலரசன் மகன் கலையரசன் (28), கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிழக்கு தெருவை சேர்ந்த தமிழ்மோகன் மகன் பிரேம் குமார் (27) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 பீர் பாட்டில்கள், 10 சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    நாகூரில் ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திரும்ப ஒப்படைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    நாகூர்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி நாகூர் போலீசார் வாஞ்சூர் சோதனை சாவடி, கொத்தவால் சாவடி, கிழக்கு கடற்கரை சாலை, நாகூர் - நாகை சாலை, நாகூர் - கங்களாஞ்சேரி சாலை உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. நாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாகூர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    நாகூர் பகுதியில் ஊரடங்கையொட்டி கடந்த மாதம் (மே) 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 260 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் தினந்தோறும் நாகூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று வாகனங்களை திரும்ப ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் போலீசார் உயர் அதிகாரிகளிடம் இருந்து மறு உத்தரவு வந்த பிறகு தான் மோட்டார் சைக்கிளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியும் என கூறுகின்றனர். இதை கேட்டு வாகன உரிமையாளர்கள் சோகத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

    வாகன பறிமுதல் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் தற்போது அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்வதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். பல நாட்களாக ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பழுதடைய வாய்ப்பு உள்ளது என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    தற்போது மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட நபர்களிடம் திரும்ப ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    வேதாரண்யம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை கைது செய்தனர். 250 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாசேகர் மற்றும் போலீசார் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதாரண்யம் அருகே உப்பனாறு பகுதியில் புதர்கள் நிறைந்த பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கொள்ளுதீவு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது48), ராஜேந்திரன் (38), வெற்றிச்செல்வன் (30) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் மற்றும் நிலத்துக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கைப்பற்றினர்.

    இவற்றை போலீசார் அங்ேகயே அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய தளவாட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

    நாகையில் போலீசார் வாகன சோதனையின் போது குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் மீது 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்கள் அநாவசியமாக வெளியே சுற்றுவதை தடுக்க பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்பு அரண்கள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கவிவர்மன் உள்ளிட்ட போலீசார் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மாஸ்க் அணியாமல் வந்த நபரை நிறுத்தி ஏன் மாஸ்க் அணியவில்லை என போலீசார் கேட்டனர். அப்போது குடிபோதையில் இருந்த அந்த நபர் மருத்துவமனைக்கு அவசரமாக தான் செல்வதாகவும் தனது உறவினருக்கு உடல்நிலை சரி இல்லை என்றும் பொய் காரணம் கூறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

    இதையடுத்து அவரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் நாகூர் அலகுகாரன் தோட்டத்தைச் சேர்ந்த செல்லமுத்து (வயது 31) என தெரியவந்தது. அப்போது திடீரென சாலையில் அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டவர் போலீசாரை ஒருமையில் கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார். 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் அவர்மீது 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    காய்ச்சல் அறிகுறி இருந்தாலே பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர் பரிந்துரைப்படி நடந்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    சீர்காழி:

    சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீர்காழி வட்டத்தில் கொரோனா பரவலை தடுத்து கட்டுப்படுத்திட கோட்டாசியர் நாராயணன் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. காவல் துணை கண்காணிப்பாளர் யுவபிரியா, வட்டாசியர் சண்முகம், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி, வைத்தீஸ் வரன்கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் பங்கேற்று பேசுகையில், கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் உடல்வலி, காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்படும்.அப்போது நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள் அதனை சாதாரண காய்ச்சல் என நினைத்து மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

    இதனால் கிருமி நுரையீரல் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தியதும் மூச்சுதிணறல் போன்ற அபாய கட்டம் ஏற்பட்டவுடன்தான் மருத்துவமனை செல்கின்றனர். காய்ச்சல் அறிகுறி இருந்தாலே பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர் பரிந்துரைப்படி நடந்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் தொற்று பரவலை தடுக்க வீடு, வீடாக சுகாதார களபணியாளர்கள் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் குழந்தைகள் நல அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.

    வேதாரண்யத்தில் எரிசாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர் மற்றும் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் பால்ராஜ் வேதாரண்யம், நகரில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது செங்காதலை சாலையில் ஒரு மாட்டுக் கொட்டகையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். சாராயம் கடத்தி வந்த வீரவிநாயகம் (வயது 44) என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ×