search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நாகையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் கைது

    நாகையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார்களை தேர்வு செய்வதில் கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரியநாட்டுதெரு மீனவ கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று நகுலன் (வயது30) என்பவர் மகாலட்சுமிநகர் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் நகுலனின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. உடனே அருகில் இருந்தவர்கள் நகுலனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர் குழுவினர் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரிநாட்டுதெருவைச் சேர்ந்த தர்மபாலன், அருண்குமார், பிரபாகரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி போலீசார் வருகின்றனர்.

    Next Story
    ×