என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ரேஷன் கடை ஊழியர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு காவல் சரகம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). இவர் அதே ஊரில் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த வேதாரணயத்தில் படித்து கொண்டு தலைஞாயிறில் பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவியை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதா கவும் மிரட்டியுள்ளாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் அறிவுரையின்படி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுப்ரியா வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்கு பின் பெரியம்மாவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்