என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் அருகே பாரம்பரிய நெல் விதைகளை ஆவணப்படுத்தும் பெண் விவசாயி பெயரை கின்னஸில் இடம் பெற செய்ய பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வந்தார். அங்கு பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி சரவணகுமார் 1250 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டுள்ளதை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனிசரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1250 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.
அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் 1250 பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்துள்ளனர். அதனை தற்போது அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.1250 வகையான நெல்மணிகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்களை அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வருகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு அதனை காட்சிப்படுத்தி வருகின்றனர்.
இவர்களது மீட்டெடுப் புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய&மாநில அரசுகள் கின்னஸில் இடம் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேவையான தொழில் நுட்பங்களையும் ஆலோசனைகளையும் உடனடியாக வேளாண் பல்கலைக்கழக வேளாண் விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி வைத்து உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி விதை பரவலாக்க திட்டத்தை அரசு கொள்கை ரீதியாக திட்டமிட முன்வரவேண்டும். குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
தமிழக அரசு பாரம்பரிய நெல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிவரஞ்சனி சரவணகுமாரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஆவணப் படுத்துவதற்ககான முழு செலவையும் அரசே எற்க வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் மகசூல் இழப்பை கருத்தில் கொண்டும், மருத்துவ குணத்தை கவனத்தில் கொண்டும் கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட வேண்டும்.
அதனை மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவு கூடங்களில் உணவுப் பொருட்களாக பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினர் அசோகன், வேதாரண்யம் ஒன்றிய தலைவர் கருணைநாதன், செய்தி தொடர்பாளர் மணிமாறன், இயற்கை வேளாண் ஆர்வலர் சிவாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் சகோதரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன்கள் அஞ்சப்பன் (65), சுரேஷ் (30). இவர்களுக்குள் பூ£¢வீக சொத்து சம்மந்தமாக பிரச்சினை இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சுரேஷ் பிரச்சினைக்குரிய இடத்தில் வேலி அமைப்பதற்காக சென்றபோது அஞ்சப்பன் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் மண்வெட்டி, கட்டையால் தாக்கிக் கொண்டனராம்.
இதுகுறித்து அஞ்சப்பன் கொடுத்த புகாரில் சுரேஷ், வேலுசாமி, வேலுசாமி மனைவி ஜோதி ஆகிய மூவர் மீதும், சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சப்பன், அஞ்சப்பன் மனைவி இளவரசி, வெங்கடேஷ் ஆகியோர் மீது தனித்தனியே வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதில் காயமடைந்த இருதரப்பையும் சேர்ந்த சுரேஷ், அஞ்சப்பன்,
அஞ்சப்பன் மனைவி இளவரசி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை அருகே பாரதிய ஜனதா நிர்வாகி காரை தீ வைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் புவனேஸ்வர்ராம். இவர் பா.ஜனதா இளைஞரணி மாவட்ட துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு முன்பு உள்ள செட்டில் தனது புதிய காரை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு புவனேஸ்வர்ராமின் காருக்கு மர்மநபர்கள் தீவைத்து விட்டு சென்று விட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சக்திகுமார் என்பவரது தந்தை குஞ்சையன் இதனை பார்த்து உடனடியாக வீட்டிற்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வர்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி கார் முழுவதும் எரிவதற்குள் தீயை அணைத்தனர். இதில் காரின் இடதுபக்க கதவு மற்றும் டயர் எரிந்து சேதமானது.
இதுகுறித்து கீழையூர் போலீசில் புவனேஸ்வர்ராம் புகார் அளித்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மர்மநபர்கள் பெட்ரோலை கார் மீது ஊற்றி தீவைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் புவனேஸ்வர்ராம். இவர் பா.ஜனதா இளைஞரணி மாவட்ட துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு முன்பு உள்ள செட்டில் தனது புதிய காரை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு புவனேஸ்வர்ராமின் காருக்கு மர்மநபர்கள் தீவைத்து விட்டு சென்று விட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சக்திகுமார் என்பவரது தந்தை குஞ்சையன் இதனை பார்த்து உடனடியாக வீட்டிற்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வர்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி கார் முழுவதும் எரிவதற்குள் தீயை அணைத்தனர். இதில் காரின் இடதுபக்க கதவு மற்றும் டயர் எரிந்து சேதமானது.
இதுகுறித்து கீழையூர் போலீசில் புவனேஸ்வர்ராம் புகார் அளித்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மர்மநபர்கள் பெட்ரோலை கார் மீது ஊற்றி தீவைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணஇரு நாட்டு பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்களின் சிறப்பு பிரதிநிதி மனோகர் வலியுறுத்தி உள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் சிறப்பு பிரதிநிதி மனோகர் நிருபர்களிடம் பேசிய போது கூறியதாவது:
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகின்றன. இதனிடையே இந்த விவகாரம் இந்திய&இலங்கை இருநாட்டு மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் ஆகிய 4 மாவட்ட மீனவர்களின் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழகத்தில் உள்ள 4 மாவட்ட மீனவர்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதித்தனர்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் ஆகியவற்றை விடுதலை செய்யும் நேரத்தில் இந்தியா அரசால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை நாட்டு மீனவர்கள், படகுகள் ஆகியவற்றை விடுதலை செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இரு நாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தியா&இலங்கை இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் கொண்ட குழு திமுக ஆட்சி காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது.
சென்னையில் காணொலி வாயிலாக நடந்து முடிந்தது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
நாகப்பட்டினம் நகராட்சி தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், உத்தரவின்பேரில் நாகப்பட்டினம் உட்கோட்டம் மக்கள் நெருக்கடி மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
துணை காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன். (நாகப்பட்டினம் உட்கோட்டம்), சுந்தர்ராஜ் (ஆயுதப்படை), கீதா (பயிற்சி), இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள், தாலுகா காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மற்றும் ஊர்க்காவல் படை என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கலர் பென்சில், பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட எழுதுப்பொருட்களை மும்பையைச் சேர்ந்த சுந்தர் என்பவர் வழங்கினார்.
வேதாரண்யம் வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கு மேற்படி பொருட்களை பள்ளி தலைமையாசிரியா¢ ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீனிவாசன் ஆகியோரும், செம்போடை அரசு உதவி ஆரம்ப பள்ளியில் 75 மாணவர்களுக்கு பள்ளி தாளாளா¢ பக்தவச்சலம் மற்றும் ஆசிரியா¢கள் வழங்கினர்.
வேதாரண்யத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி 21 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேதாரண்யம் நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த கொடி அணிவகுப்பில் வேதாரண்யம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, நாகலெட்சுமி, செந்தில்குமார், கன்னிகா, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மலர்கொடி மற்றும் வேதாரண்யம் சரக போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர் காவல் படையினர் கலந்து கொண்டு கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வேதாரண்யம் அருகே மலேசியாவுக்கு அனுப்புவதாக கூறி ரூ.6.40 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கிராமம் சின்னகுட்டி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 60). விவசாயி.
தமிழ்ச்செல்வன் சென்னை ராமாபுரம் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த ராமலிங்கம் (40) என்பவரிடம் நாலுவேதபதி பகுதியில் உள்ள ஒரு சில நபர்களை மலேசியாவுக்கு விசாவில் அனுப்பி வைப்பதாக கூறி ரூ.10 லட்சம் வசூல் செய்து கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கு மட்டுமே விசா எடுத்து கொடுத்துள்ளார். 2 நபர்கள் மலேசியா சென்ற நிலையில் மீதி உள்ளவர்களுக்கு 6 லட்சத்து 40 ஆயிரம் தொகை வழங்கப்படாமல் இருந்தது. பலமுறை கேட்டும் ராமலிங்கம் கொடுக்காமல் காலதாமதம் செய்ததால் தமிழ்ச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் குற்ற புலனாய்வு துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் நாகை குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்து, ராமலிங்கத்தின் மனைவி சித்ரா மற்றும் டிராவல்ஸ் பணியாளர் வெங்கடேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நாகை - திருச்சி பயணிகள் ரெயில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 687 நாட்களுக்கு பிறகு இன்று முதல் விரைவு ரெயிலாக இயக்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:
கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாகப்பட்டினம்&திருச்சி வரை செல்லும் பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 687 நாட்களுக்குப் பிறகு நாகப்பட்டினம்&திருச்சிராப்பள்ளி இடையேயான ரெயில் சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கப்பட்டு சிறப்பு விரைவு ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பாக ரெயில் எஞ்சினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு நாகப்பட்டினம் ரெயில் நிலையம் மேலாளர், லோகோ பைலட், அசிஸ்டென்ட் லோகோ பைலட், காவலர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
பின்னர் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும்
ரெயில்வே ஊழியர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்கும் படி பயணிகளை அறிவுறுத்தி வருகின்றனர். முதல் நாளான இன்று ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற 21ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று முதல் நாள் இரவு அங்குரார்ப்பணம் தொடர்ந்து கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா, சமூக ஆர்வலர் சிங்கபாஸ்கரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம், 16ம் தேதி திருமலைராஜன் பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 21ம் தேதி இரவு 10 மணிக்கு திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திருக்குவளை அருகே ராஜகோபுர பணி நிறைவேற வேண்டி சக்தி மகா காளியம்மன் கோவிலில் அஸ்திர யாகம் நடந்தது.
நாகப்பட்டினம்:
திருக்குவளை அருகே வலிவலம் தோப்படி சக்தி மகா காளியம்மன் கோவிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் வருடாந்திர திருவிழா மற்றும் முக்கிய விஷேச நாட்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் நடைபெற்று வந்தது.
கடந்த 12 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருந்த கோவில் முன்புற ராஜகோபுரம் கட்டும் பணி, 2019ம் ஆண்டு தொடங்கியது. மூன்று நிலை கோபுரத்துடன் 32 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான பணியானது நிதிப் பற்றாக்குறையால் தொய்வு ஏற்பட்டு நிறைவு பெறாமல் உள்ளது.
இந்த நிலையில் பணியை விரைந்து முடித்திடும் வகையில் கோவில் வளாகத்தில் அஸ்திர யாகம் நடைபெற்றது. யாகத்திற்கு உகந்த திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள் கொண்டு யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பூண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கண்டக்டர் பலியானார்.
நாகப்பட்டினம்:
திருப்பூண்டி காரை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று பணியை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக காரைநகர் ஈ.சி.ஆர் சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார்.
இதுகுறித்து செந்தில்குமார் மனைவி கபிலா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மகிழி தெற்குத் தெருவை சேர்ந்த மதியழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






