என் மலர்
உள்ளூர் செய்திகள்

சக்தி மகா காளியம்மன் கோவிலில் அஸ்திர யாகம்.
ராஜகோபுர பணி நிறைவேற வேண்டி அஸ்திர யாகம்
திருக்குவளை அருகே ராஜகோபுர பணி நிறைவேற வேண்டி சக்தி மகா காளியம்மன் கோவிலில் அஸ்திர யாகம் நடந்தது.
நாகப்பட்டினம்:
திருக்குவளை அருகே வலிவலம் தோப்படி சக்தி மகா காளியம்மன் கோவிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் வருடாந்திர திருவிழா மற்றும் முக்கிய விஷேச நாட்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் நடைபெற்று வந்தது.
கடந்த 12 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருந்த கோவில் முன்புற ராஜகோபுரம் கட்டும் பணி, 2019ம் ஆண்டு தொடங்கியது. மூன்று நிலை கோபுரத்துடன் 32 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான பணியானது நிதிப் பற்றாக்குறையால் தொய்வு ஏற்பட்டு நிறைவு பெறாமல் உள்ளது.
இந்த நிலையில் பணியை விரைந்து முடித்திடும் வகையில் கோவில் வளாகத்தில் அஸ்திர யாகம் நடைபெற்றது. யாகத்திற்கு உகந்த திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள் கொண்டு யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story






