search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பரவல்"

    • தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.
    • மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கிராம செவிலியர்கள் மூலம் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் கண்காணிக்க ப்பட்டு வருவதாக சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.

    மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. கொரோ னா தொற்று கர்ப்பிணிகள், இணை நோய் பாதிப்புள்ள வர்கள், முதியவர்களை எளிதில் பாதிக்கிறது.

    இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள் கிராம செவிலி யர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.இது குறித்து சுகாதா ரத்துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது:

    கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக கிராம செவிலியர்களுக்கு தகவல் அளிக்க கர்ப்பிணி களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.இது போன்ற லேசான அறிகுறிகள் இருக்கும் காப்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் பரிசோ தனைகள் மேற்கொ ண்டு உரிய சிகிச்சை கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இதுவரை கர்ப்பிணி களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை. இருப்பினும், எளிதில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தினமும் 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
    • கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது.

    கோவை,

    தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது.

    இதையடுத்து காய்ச்சல் பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு அரசு அறி வுறுத்தியது. நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைத்து ஊரகப்பகுதி களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி, பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கோவையில் 40 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 100 மருத்துவ முகாம்கள் வரை நடத்தப்படுகின்றன. இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

    கோவையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20-ஐ கடந்துள்ளது. கடந்த 15-ந் தேதி 1.5 சதவீதமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    மேலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 129 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் மட்டுமே 100-ஐ கடந்துள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதை யொட்டி பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அதிகரிக்கப்பட்டு உள்ள கொரோனா பரிசோதனைகளில் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த காலங்களை போல பயப்படும் அளவில் பாதிப்பில்லை. இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு தொடர்பான வழிகாட்டு முறைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிசோதனையில் மேற்கொண்டதில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

    அங்குள்ள மொத்தம் 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து துணைப்பதிவாளர் கூறியதாவது:-

    கொரோனா பரவலால் ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும்வரை பயிற்சி நிறுவனம் மூடப்படும்.

    விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வரும் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×