search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பரவல் எதிரொலி-கோவையில் கர்ப்பிணி பெண்கள் 12 ஆயிரம் பேர் கண்காணிப்பு
    X

    கொரோனா பரவல் எதிரொலி-கோவையில் கர்ப்பிணி பெண்கள் 12 ஆயிரம் பேர் கண்காணிப்பு

    • தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.
    • மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கிராம செவிலியர்கள் மூலம் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் கண்காணிக்க ப்பட்டு வருவதாக சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.

    மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. கொரோ னா தொற்று கர்ப்பிணிகள், இணை நோய் பாதிப்புள்ள வர்கள், முதியவர்களை எளிதில் பாதிக்கிறது.

    இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள் கிராம செவிலி யர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.இது குறித்து சுகாதா ரத்துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது:

    கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக கிராம செவிலியர்களுக்கு தகவல் அளிக்க கர்ப்பிணி களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.இது போன்ற லேசான அறிகுறிகள் இருக்கும் காப்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் பரிசோ தனைகள் மேற்கொ ண்டு உரிய சிகிச்சை கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இதுவரை கர்ப்பிணி களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை. இருப்பினும், எளிதில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×