என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை யில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள ஒன்பது மூட்டையில்

    இருந்த 270 கிலோ கஞ்சா மினிவேனுடன் பறிமுதல் செய்யபட்டது.

    வேதாரண்யம் கடலோர காவல் குழும  டி.எஸ்.பி குமார் ,இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆறுகாட்டுத்துறைக்கு ஒரு வேனில் கீற்று ஏற்றி கொண்டு  வேகமாக செனறு ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது.

    சந்தேகம் அடைந்த போலீசார் விடமால் தூரத்தி சென்று சோதனையிட்டதில்  கீற்றுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 9 சாக்கு மூட்டைகளில் 270 கஞ்சா இருந்தது  தெரிய வந்தது.

    மறைத்து வைத்து இருந்த கஞ்சா மூட்டைகளையும் கடத்த-லுக்கு பயன்படுத்திய மினி-வேனையும் அதன் ஓட்டுனர் சுரேசையும் கைது செய்து வேதாரண்யம் கடலோர காவல் நிலையம்

    கொண்டு வந்து விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் கைப்பற்ற கஞ்சாவின் மதிப்பு சுமார் 25 லட்சம் எனவும் ஆறுகாட்டுத்துறை யிலிருந்து படகு

    மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் டிரைவர் சுரேசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்  கஞ்சா கடத்தலில் ஆறு-காட்டுத்-துறையை சேர்ந்த பாரதிதாசன் இலங்கை நாட்டை சேர்ந்த காந்த-ரூபன் ஈடுபட்டு

    இருந்தது தெரிய வந்தது உடன் போலீசார் ஆறுகாட்டுத்துறைக்கு சென்று பாரதிதாசன் மற்றும் அவரது வீட்டில் ஈரோடு அகதிகள் முகாமில் இருந்து வந்துதங்கி இருந்த இலங்கையை

    சேர்ந்த காந்தரூபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
    கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் பள்ளியில் அங்கன்வாடி பணியாளர்களின் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வே ளூர் அஞ்சுவட்டத் தம்மன் உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பவானி தலைமையில் நடை பெற்ற விழாவில் அங்கன் வாடி பணியாளர்கள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, போன்ற பாரம்பரிய சிறுதானியங்களில் செய்த இனிப்பு வகைகள், கார வகைகள், பிரியாணி, கூழ் போன்ற அனைத்து விதமான உணவு பண்டங் களைசமை த்து மாணவிகளுக்கு வழங்கினர்.

    மேலும் சிறுதானிய உணவுகளின் சத்து மற்றும் நன்மைகளை மாணவிக ளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் காய்கறிகளைக் கொண்டு விலங்குகள், சிலைகள், பூக்களை வடிவ மைத்து காட்சி படுத்திருந் தனர். 

    குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப் பாளர் பூர்ணியா, வட்டார திட்ட உதவியாளர் அருண் குமார், அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மீனாட் சி, மேற்பார்வையாளர்கள் ஜெயலெட்சுமி, பிரேமநாயகி, வேதராண்யம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சௌமியா மற்றும் கீழ்வே ளூர் ஒன்றிய அனைத்து கிராம அங்கன் வாடி பணியாளர்கள், அஞ்சுவட் டத்தம்மன் மகளிர் அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரி யைகள், மாணவிகள் கலந் துக் கொண்டனர்.
    சங்கமங்கலம் சடைச்சி முத்து காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள சங்கமங்கலத்தில் சடைச்சிமுத்து காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபி-ஷேகம் விழா கணபதிஹோ-மத்துடன் துவங்கியது. அதனைத்-தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைக-ளுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. 

    இதையடுத்து ராமநாத சிவாச்சாரியார் தலை-மையில் மேளதா-ளங்கள் முழங்க, கடம் புறப்பாடுநடை-பெற்றது. இனைத் தொடர்ந்து சிவாச்சா-ரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க கலசத்--தில் புனித நீர் ஊற்றப்--பட்டு கும்பாபிஷேகம் நடை-பெற்-றது. அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. 

    அதனை-தொடர்ந்து சடைச்சிமுத்து காளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மன-முருகி வழிபட்டனர்.
    வேதாரண்யத்தில் மாடு முட்டியதில் தபால்காரர் உயிரிழந்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் வசித்து வருபவர் மாறன் (வயது 52). இவர் வேதாரண்--யம் அருகேயுள்ள நெய்--விளக்கு கிராமத்தில் தபால்-கா---ரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார்.

     இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஆடு, மாடு, எருமை, காளை முதலிய கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 5&ம் தேதி மதியம் பணி முடிந்து மேய்ச்சலுக்கு கட்டி வைத்த மாட்டை மெயின்ரோட்டில் ஓட்டி கொண்டு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது எதிர்பாராதவிதமாக மாடு மாறனை முட்டி கீழே தள்ளி--யது. இதில் பலத்த காயம-டைந்த அவரை அக்கம்பக்கத்-தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாறன் ஏற்க-னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் வேதா-ரண்-யம் போலீஸ் இன்ஸ்-பெக்டர் சுப்ரியா, சப்& இன்ஸ்பெக்டர் தேவசேனா-திபதி ஆகியோர் வழக்குப்-பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பாபிஷேக தினத்தையொட்டி அன்னப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம்& நாகை சாலையில் அமைந்துள்ள பூர்ண, புஷ்கலம்பா சமேத அன்னப்பசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள், மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் -அடங்கிய குடங்கள் ஊர்-வலமாக எடுத்துச் செல்லப்--பட்டு சிறப்பு அபிஷேக ஆரா-தனைகள் நடை-பெற்றது. பின்னர் சுவாமி வண்ண மலர்களால் அலங்-கரிக்------கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பக்தர்-க-ளுக்கு மங்கல பொருட்-களும், அன்னதா-னமும் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை மடிபாக்கம் குருமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் கிழக்கு தாம்பரம் லெட்சுமி-நாராயணன் குடும்பத்தினர் செய்தி-ருந்தனர்.

    தகட்டூர் மாப்பிள்ளைவீரன் கோவிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நடந்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராமத்தில் உள்ள மாப்பிள்ளைவீரன்  கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
    கோவிலின் முக்கிய திருவிழாவான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழாவை பொட்டி தகட்டூர் பைரவநாத சுவாமி கோவிலில் இருந்து கப்பரை எடுத்து  சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வந்து மாப்பிள்ளை வீரன் கோவிலை  வந்துசேர்ந்தது.

    பின்பு பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழத்தை பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திட்டச்சேரி அருகே மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் அம்மன் வீதியுலாவை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்.

    பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகூர் வெட்டாற்று பாலம் அடைக்கப்பட்டு நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகூர் வெட்டாறு பாலத்தின் மேல் தளம் உயர்த்துதல், பாலத்தில் அமைந்துள்ள விரிவாக்கம் இணைப்பு ஆகியவற்றை முழுமையாக மாற்றி அமைத்தல், தாழ்ந்துள்ள தூண்களை சுற்றி மணல் பரப்பை உறுத்தி படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தடுப்புகள் கொண்டு நாகூர் வெட்டாற்று பாலம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி களால் அடைக்கப் பட்டது.

    பணிகள் தொடங்கப் பட்ட காரணத்தால் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து வாகனங்களும் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து இடது பக்கம் திரும்பும் நாகூர் நகர சாலை வழியாகவும், புத்தூர் வழியாக வேளாங்கண்ணி, திருவாரூர் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல திருவாரூர், வேளாங்கண்ணியில் இருந்து புத்தூர் வழியாக கிழக்கு கடற்கரை செல்லும் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
    நாகையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்ரமணி மகள் சுபாஷினி. பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தியதால் சுபாஷினி கடந்த 30ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

    அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் தாளாளர் ஆனந்த், முதல்வர் லட்சுமி காந்தன், வகுப்பாசிரியர் ஜென்சி ஆகியோர் மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த மூவரையும் கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் கடந்த ஒரு வார காலமாக சடலத்தை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    இந்நிலையில் நேற்று நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் பொறுப்பு சுரேஷ் கார்த்தி தலைமையில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் தாய்&தந்தை, கல்லூரி மாணவிகள் என 9 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

    நீதிமன்ற விசாரணைக்கு பிறகு நாகை மாலி எம்.எல்.ஏ தலைமையில் மாணவியின் உறவினர்களிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சடலத்தை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

    அதனை தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த மாணவியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். காவல் உயரதிகாரிகள் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, மாணவியின் சடலத்தை நாகையில் இருந்து நாகூர் வரை உறவினர்கள் பேரணியாக எடுத்து சென்றனர்.

    கல்லூரி மாணவியின் தற்கொலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகை மாலி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    நாகையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளதால் உறவினர்களின் ஒருவார கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
    நாகை அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற 60 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் சரக்கு வாகனமான லாரி, டாடா மேஜிக் போன்ற வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்வதாக கலெக்ட ருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த மாத சாலை பாதுகாப்பு கூட்டத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வதை சோதனை இடுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சோதனையில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 60 வாகனங்கள் சாலை வரி செலுத்தாமலும், தகுதிச்சான்று, பர்மிட் புதுப்பிக்கப்படாமலும் மற்றும் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக் கப்பட்ட காரணத்திற்காக நாகை, வேதாரண்யம் போன்ற பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு, நல்லதம்பி ஆகியோர் சோதனை செய்து 60 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

    அதில் பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களும், 10 கல்வி நிலைய பஸ்களும், 25 டாட்டா வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வாகனங்களின் மூலம் அரசுக்கு ரூ.5 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  எனவே தொடர்ந்து வாகன சோதனை செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
    நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் சாலை தர ஆய்வு  அதிகாரி சிவாஜிராஜா என்கிற சிவாஜி அங்குள்ள கோவிலின் பின்புறம் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமி யின் பெற்றோர் வேதாரண் யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தனர். அதன்பேரில் போலீ சார் நாகை நெடுஞ்சாலை துறை அதிகாரி சிவாஜிராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இது வரை அவரை கைது செய்ய வில்லை.

    இதனிடையே சிவாஜி ராஜாவுக்கு நெருங்கிய உறவி னர்கள் வழக்கை வாபஸ் வாங்க கூறி சிறுமியின் குடும் பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள் ளனர்.  இதனால் பயந்துபோன அவர்கள் நாகை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித் தனர்.

    அதில் வழக்கை வாபஸ் பெறக்கோரி எங்க ளுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது.  இதனால் நாங்கள் சொந்த கிராமத்திற்கு கூட செல்ல முடியவில்லை.உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
    வேதாரண்யத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    நகரத்தலைவர் வைரம், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் மகிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்திகோஷம் எழுப்பினர்.

    இதில் மாவட்டத் தலைவர் சத்தியகலா, நகராட்சி கவுன்சிலர் தங்கதுறை, ஐ.என்.டி.யூ.சி சங்கத்தைச் சேர்ந்த தங்கமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ரபிக் சோட்டாபாய் அப்சல் உசேன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி குமார், அர்ஜீனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×