search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாடு முட்டி தபால்காரர் சாவு

    வேதாரண்யத்தில் மாடு முட்டியதில் தபால்காரர் உயிரிழந்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் வசித்து வருபவர் மாறன் (வயது 52). இவர் வேதாரண்--யம் அருகேயுள்ள நெய்--விளக்கு கிராமத்தில் தபால்-கா---ரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார்.

     இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஆடு, மாடு, எருமை, காளை முதலிய கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 5&ம் தேதி மதியம் பணி முடிந்து மேய்ச்சலுக்கு கட்டி வைத்த மாட்டை மெயின்ரோட்டில் ஓட்டி கொண்டு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது எதிர்பாராதவிதமாக மாடு மாறனை முட்டி கீழே தள்ளி--யது. இதில் பலத்த காயம-டைந்த அவரை அக்கம்பக்கத்-தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாறன் ஏற்க-னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் வேதா-ரண்-யம் போலீஸ் இன்ஸ்-பெக்டர் சுப்ரியா, சப்& இன்ஸ்பெக்டர் தேவசேனா-திபதி ஆகியோர் வழக்குப்-பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×