என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது வாலிபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 26-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 1-ந் தேதி இறந்து விட்டார். கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 66 வயது முதியவர். இவர் மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகளுக்காக கடந்த 21-ந் தேதி சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் 30-ந் தேதி இறந்து விட்டார்.
இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 440 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 ஆயிரத்து 106 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
3 ஆயிரத்து 211 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பாகலூர் பிராமின் தெரு, சந்தை வீதி பகுதியை சேர்ந்தவர் சென்னபசப்பா (வயது 44). விவசாயி. இவரது மனைவி கவுரம்மா (40). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவுரம் மாவுக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சென்ன பசப்பாவுக்கு தெரியாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இதற்கிடையே மனைவி கவுரம்மாளும், பக்கத்து வீட்டுக்காரரும், வீட்டில் உல்லாசமாக இருந்ததை சென்னபசப்பா பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கவுரம்மாவை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் சென்ன பசப்பாவுக்கும், கவுரம்மாளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் தகராறு முற்றி கடுமையான சண்டை போட்டனர். இதன்பிறகு சென்ன பசப்பா, இனிமேல் மனைவியிடம் பேசி பயன் இல்லை. கொலை செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி நள்ளிரவில் மனைவி கவுரம்மாவிடம் நைசாக பேசி கொடுத்து கோவிலுக்கு செல்லலாம், வா என்று அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிளில் கவுரம்மாவை அழைத்துகொண்டு கே.என். போடூர் பஸ்வேஸ்வரப்பா கோவிலுக்கு கூட்டி சென்றார். அப்போது கோவிலின் பிண்புறம் சென்ற இருவரும் சிறிதுநேரம பேசிக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் கவுரம்மா மீது ஆத்திரத்தில் இருந்த சென்னபசப்பா, திடீரென அருகே கிடந்த கல்லை எடுத்து கவுரம்மா தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சென்னபசப்பா, அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து சென்ன பசப்பா, இன்று காலை ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி கவுரம்மாவை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று பஸ்வேஸ்வரப்பா கோவில் பின்புறம் கொலையுண்ட கிடந்த கவுரம்மா உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சென்ன பசப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெரிய அளவிலான பூ மார்க்கெட்டுகள் உள்ளன. ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமங்களிலிருந்து ரோஜா, சாமந்தி,மல்லி செண்டுமல்லி உள்ளிட்ட கொய்மலர்கள் நாள்தோறும் விற்பனைக்காக இந்த மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து தினமும் சுமார் 300 டன் அளவின பூக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில், அண்டை மாநிலங்களான கரநாடகம், ஆந்திரா கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு ஆகியவை நடைமுறையில் உள்ளதால் திருமண விழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் சுபகாரியங்கள் மிகவும் குறைந்து விட்டது. மேலும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பூ வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுகளுக்கு தற்போது வருவதில்லை. இதனால் தோட்டங்களில் அறுவடை செய்த பூக்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வந்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால் வேறுவழியின்றி பூக்களை சாலைகளில் கொட்டிச்செல்லும் அவல நிலை தொடர்கிறது என மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தளி | இந்திய கம்யூனிஸ்ட் |
ஓசூர் | அதிமுக |
வேப்பனஹள்ளி | கடும் போட்டி |
கிருஷ்ணகிரி | திமுக |
பர்கூர் | திமுக |
ஊத்தங்கரை | காங்கிரஸ் |
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாழும் காட்டு யானைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் கோடையை சமாளிக்க நீர் நிரம்பியுள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகின்றன.
வனத்துறையினரும் வனப்பகுதியின் பல இடங்களில் குட்டைகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி விலங்குகளின் குடிநீர் தாகத்தை தீர்த்து வருகின்றனர். இந்தநிலையில் தளி வனப்பகுதியில் சென்னமாலம் என்ற கிராமத்தின் அருகே சின்னையன் ஏரியில் மழை பெய்து அதிக அளவில் தண்ணீர் உள்ளது.
இந்த ஏரிக்கு அடிக்கடி வரும் காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் குடித்து தாகத்தை போக்கி செல்கின்றன. அதேபோல நேற்று குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் கோடை வெயிலை சமாளிக்க ஏரிக்குள் இறங்கி தண்ணீர் குடித்து தாகத்தை தணித்தன. நீண்ட நேரம் யானைகள் கூட்டம் குட்டிகளுடன் ஏரியில் உள்ள தண்ணீரை குடித்து மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் அந்த யானைகள் அனைத்தும் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாநில எல்லைகளில் வாகனங்களை ஆய்வுக்கு பிறகு அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி சென்றார்.
அங்கு கொரோனா பாதித்து அனுமதிக்கப்பட்டுள்ள 125 நோயாளிகளை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, உணவு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்கள் அனைவரும் உரிய மருந்தை எடுத்துக் கொண்டு, பூரண குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது மாவட்ட தொற்றா நோய் திட்ட அலுவலர் திருலோகன், மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.






