search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நள்ளிரவில் கோவிலுக்கு அழைத்து சென்று மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

    கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கல்லை போட்டு கணவன் கொன்ற சம்பவம், வேப்பனப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேப்பனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பாகலூர் பிராமின் தெரு, சந்தை வீதி பகுதியை சேர்ந்தவர் சென்னபசப்பா (வயது 44). விவசாயி. இவரது மனைவி கவுரம்மா (40). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவுரம் மாவுக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சென்ன பசப்பாவுக்கு தெரியாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இதற்கிடையே மனைவி கவுரம்மாளும், பக்கத்து வீட்டுக்காரரும், வீட்டில் உல்லாசமாக இருந்ததை சென்னபசப்பா பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கவுரம்மாவை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் சென்ன பசப்பாவுக்கும், கவுரம்மாளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் தகராறு முற்றி கடுமையான சண்டை போட்டனர். இதன்பிறகு சென்ன பசப்பா, இனிமேல் மனைவியிடம் பேசி பயன் இல்லை. கொலை செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி நள்ளிரவில் மனைவி கவுரம்மாவிடம் நைசாக பேசி கொடுத்து கோவிலுக்கு செல்லலாம், வா என்று அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிளில் கவுரம்மாவை அழைத்துகொண்டு கே.என். போடூர் பஸ்வேஸ்வரப்பா கோவிலுக்கு கூட்டி சென்றார். அப்போது கோவிலின் பிண்புறம் சென்ற இருவரும் சிறிதுநேரம பேசிக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் கவுரம்மா மீது ஆத்திரத்தில் இருந்த சென்னபசப்பா, திடீரென அருகே கிடந்த கல்லை எடுத்து கவுரம்மா தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சென்னபசப்பா, அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து சென்ன பசப்பா, இன்று காலை ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி கவுரம்மாவை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று பஸ்வேஸ்வரப்பா கோவில் பின்புறம் கொலையுண்ட கிடந்த கவுரம்மா உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சென்ன பசப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×