என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (2-ம் தேதி), வருகிற 19-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதியின்படி, நாளை (சனிக்கிழமை) காந்தி ஜெயந்தி மற்றும் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாதுநபி ஆகிய இரண்டு நாட்களில் மதுபானம் விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை, 19-ந் தேதி மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுகூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் அந்த 2 தினங்கள் மூடப்படும்.

    இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சூளகிரி அருகே செல்போன் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே காமன்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப் (40), சம்பவத்தன்று இவர், அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். அப்போது அங்குள்ள மேஜையில் செல்போனை வைத்துள்ளார். அதனை 25 வயது வாலிபர் ஒருவர் திருடி விட்டு ஓடியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    தாய்- தந்தை சமாதியான இடத்தில் மகனும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 58), இவரது மனைவி சாந்தாமணி (45). இவர்களுக்கு ரவீந்திரன் (28) , சுரேந்திரன் (25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் இளைய மகன் சுரேந்திரன் காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். மூத்த மகன் ரவீந்திரனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்துள்ளனர். ஆனால் ரவீந்திரனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தனது பெற்றோரிடம் , ரவீந்திரன் தகராறு செய்து வந்தார். இதனால் மகன் இப்படி தகராறு செய்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் முருகேசனும், சாந்தாமணியும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தனர். இதனால் கடந்த 22-ந் தேதி முருகேசனும், சாந்தாமணியும் கீழ்குப்பம் சுடுகாட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் தன்னால் தான் தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர் என்று ரவீந்திரன் மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் கடந்த ஒரு வாரமாக மிகுந்த சோகத்துடன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இனி உயிர் வாழ்வதே விட சாவதே மேல் என்று அவர் முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று இரவு ரவீந்திரன், கீழ்குப்பம் சுடுகாட்டுக்கு சென்றார். அங்கு அவரது தாய்- தந்தை உடல்கள் எரிக்கப்பட்ட இடத்தில் வைத்து ரவீந்திரன் வி‌ஷம் குடித்தார். சிறிதுநேரத்தில் மயங்கி அங்கேயே ரவீந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலையில் சுடுகாடு பாதை வழியாக சென்ற கிராம மக்கள், ரவீந்திரன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுகுறித்து பாரூர் போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ரவீந்திரன் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சூளகிரி அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே கிருஷ்ணே பாளையத்தை சேர்ந்தவர் முனியம்மா (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (33). நேற்று, முனியம்மா வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சிவமணிவேல் (வயது 38). லாரி டிரைவர். சம்பவத்தன்று லாரியில் வந்த அவர், ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிள், சிவமணிவேல் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிவமணிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவமணிவேல் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகரசம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலை பக்கமுள்ள கனிகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 80). விவசாயி. சம்பவத்தன்று இவர் நிலத்தில் உள்ள கிணற்றின் மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை, ஊத்தங்கரை பகுதிகளில் விவசாயி, தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டியை சேர்ந்தவர் சிவன் (வயது 30). விவசாயி. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். சிவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த சிவன், விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவன் இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்தங்கரை அருகே உள்ள எலச்சூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் குடும்ப தகராறு காரணமாக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சங்கர் மீது ஊத்தங்கரை, மத்தூர் போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    காவேரிப்பட்டணம் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம் சண்முகசெட்டி தெருவை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 29). கட்டிட மேஸ்திரி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியின்போது தவறி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த வந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜன் நொரா (வயது 29) என்பவர், ஓசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் ராஜன் நொரா, தன்னுடைய நண்பர்களான கிஷன், அஜய் தாந்தி ஆகியோருடன் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது கடனாக கொடுத்த பணம் தொடர்பாக அஜய் தாந்திக்கும், ராஜன் நொராவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ராஜன் நொரா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜன் நொரா கொலை தொடர்பாக அவருடைய நண்பர்கள் அஜய் தாந்தி, கிஷன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    ஓசூர் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்திகிரி:

    ஓசூர் அருகே உள்ள மத்திகிரி நவதி ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 30), கார் டிரைவர். குடும்ப பிரச்சினை காரணமாக இவருடைய மனைவி இவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றார். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சூளகிரி:

    திருப்பத்தூரை சேர்ந்தவர் கோபி (வயது 34). இவர் பெங்களூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

    இன்று காலை 7-45 அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காடு வந்துகொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை மீறி நிலைதடுமாறி சென்றது.

    இதனால் கார் எதிரே உள்ள ரோட்டுக்கு தாறுமாறாக சென்றது. அப்போது பெங்களூரை சேர்ந்த சுமந்த் (வயது 30) காரில் வந்து கொண்டிருந்தார். இதில் 2 கார்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மேலும் மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த கோபி மற்றும் எதிரே மற்றொரு காரில் சென்ற சுமந்த் ஆகியோர் காரின் இடுபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான கோபி மற்றும் சுமந்த் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்துக்குள்ளான 2 கார்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தற்காலிகமாக செயல்பட உள்ள பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
    காவேரிப்பட்டணம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன் கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் நவம்பர்் மாதம் முதல் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட உள்ளது. அங்கு நவம்பர் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

    கல்லூரி செயல்படுவதற்கு தேவையான நிர்வாக அலுவலகம், வகுப்பறை, ஆய்வுக்கூடங்கள், உணவுக்கூடம், மாணவ-மாணவிகள் தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாடங்கள் குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தற்காலிகமாக கல்லூரி செயல்படுவதற்கு தேவையான உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் விரைவில் ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, தோட்டக்கலை கல்லூரி நிர்வாக அலுவலர் ஜீவஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியரும், தலைவருமான பரசுராமன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
    ×