என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது
Byமாலை மலர்27 Sep 2021 3:14 PM GMT (Updated: 27 Sep 2021 3:14 PM GMT)
தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜன் நொரா (வயது 29) என்பவர், ஓசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் ராஜன் நொரா, தன்னுடைய நண்பர்களான கிஷன், அஜய் தாந்தி ஆகியோருடன் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது கடனாக கொடுத்த பணம் தொடர்பாக அஜய் தாந்திக்கும், ராஜன் நொராவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ராஜன் நொரா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜன் நொரா கொலை தொடர்பாக அவருடைய நண்பர்கள் அஜய் தாந்தி, கிஷன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X