என் மலர்
செய்திகள்

திருட்டு
சூளகிரி அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு
சூளகிரி அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே கிருஷ்ணே பாளையத்தை சேர்ந்தவர் முனியம்மா (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (33). நேற்று, முனியம்மா வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story