என் மலர்tooltip icon

    கரூர்

    • விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
    • வயது முதிர்வு காரணமாக உடல் நிலை சரியில்லாததால்

    கரூர்:

    கரூர் தரகம்பட்டி அருகே உள்ள தனகப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சிறும்பாயி (வயது 70). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிறும்பாயி சம்பவத்தன்று விஷம் குடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறும்பாயி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து சிறும்பாயின் மகன் மாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் நடவடிக்கை

    கரூர் 

    கரூர் குளித்தலை அருகே உள்ள மையிலாடி இரட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அந்த பகுதியில் மது விற்ற வடக்கு புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • மலையம்பாளையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    கரூர்

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஊஞ்சபாளையம் காலனியை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கந்தனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாங்கல் பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மணல் லாரிகளால் தொடரும் விபத்து

    கரூர்:

    கரூர் மாவட்டம், வாங்கல் கடைவீதியில் ஓட்டல், கறிக்கடை, வணிக வளாகங்கள் என 500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாங்கல் கடைவீதி வழியாக குவாரிகளில் இருந்து அள்ளப்பட்ட மணல் லாரிகளில் ஏற்றப்பட்டு வேகமாக சென்று வருகின்றன. மேலும் லாரிகளால் அந்த பகுதியில் விபத்துகளும் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள், குழந்தைகள், வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதையடுத்து மணல் லாரிகள் வாங்கல் கடைவீதி வழியாக வருவதை தடுத்து உடனடியாக மாற்றுவழி ஏற்படுத்தி அனுப்ப வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு வாங்கல் போலீஸ்நிலையத்தில் வாங்கல் கடைவீதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து வாங்கல் கடைவீதி வழியாக மணல் லாரிகள் சென்று வந்தன.

    இந்நிலையில் மணல் லாரிகள் கடைவீதி வழியாக வருவதை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்ல வலியுறுத்தி வாங்கல் ஊர்பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நேற்று வாங்கல் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாங்கல்-மோகனூர் சாலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் அந்த பகுதியில் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 15 நாட்களுக்குள் மணல் லாரிகள் மாற்றுப்பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். நேற்று காலை முதல் இரவு வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வரத்துக்குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

    கரூர்

    நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கு விற்றது நேற்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்றது ரூ.5 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.4,500-க்கு விற்றது ரூ.ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2500-க்கு விற்றது ரூ.2,500-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.
    • பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    கரூர்

    கரூர் தோகைமலையில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒன்றிய அளவிலான ஆலோசனை குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும், குழந்தைகளை பராமரிக்க முடியாத குடும்பங்களை அறிந்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசு திட்டங்களை எடுத்துக்கூறி வழி காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல் இளந்தளிர் இல்லம் என்ற திட்டம் மூலம் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுப்பதற்கும் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    • வி.சி.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    கரூர்:

    கரூர் தாந்ேதாணிமலையில் கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் அகரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கரூர், திருச்சி மண்டல செயலாளர் தமிழ் ஆதன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில், வருகிற டிசம்பர் மாதத்தில் திருச்சியில் நடைபெற உள்ள வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கரூரில் இருந்து 100 வாகனங்களில் செல்வது, மழைக்காலங்களில் சுங்ககேட்டில் இருந்து கரூர் அரசு கலைக்கல்லூரி வரை சாலைகளில் மழைநீர் தேங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    • புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு ஏற்று கொண்டார்.
    • வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில்

    கரூர்

    வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜெயராமன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் திருச்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் பகுதியில் பணியாற்றி வந்த ராஜேஷ் என்பவர் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஓராண்டு நடைபயணம் நிறைவு பேரணி நடைபெற்றது
    • காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது

    கரூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் இந்திய ஒற்றுமை நடை பயணம் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் பேரணி நடந்தது.

    எம்.பி ஜோதிமணி தலைமை தாங்கினார். மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், நகரத் தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோணி குமார், மாவட்ட பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் கோகுலே, சண்முகம், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் முனீஸ்வரன், வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், மலையாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பயிற்சி பாசறைக் கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகழூர் நகர கழகம் சார்பில் காங்கே யம் படியூரில், வருகிற 24-ந் தேதி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பிஎல்ஏ-2) பயிற்சி பாச றைக் கூட்டம் தொட ர்பான ஆலோசனை கூட்டம் புகழூர் நகரக் கழக அலுவ லகத்தில் நடைபெ ற்றது.

    கூட்டத்திற்கு அரவக்கு றிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்தார். நகர கழக செயலாளரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான சேகர் என்கிறகுணசேகரன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தக அணி துணைத் தலைவரும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரு மான முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதா பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவ ணமூர்த்தி, மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வார்டு கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • கிணற்றில் மூழ்கி மாணவர் பலியானார்.
    • 11-ம் வகுப்பு படித்து வந்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி. இவரது மனைவி லதா. இந்த தம்பதியின் மகன் பூமிஷ் என்கின்ற பிரதீப் (வயது 16). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பிரதீப் தனது சித்தப்பா மகன் சரண் என்பவருடன் அந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள 60 அடி கிணற்றிற்கு மதியம் குளிக்க சென்றார். பிரதீப் மட்டும் கிணற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். சரண் கிணற்றின் கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பிரதீப் கிணற்றில் மூழ்கினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், மாயனூர் போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி பிரதீப்பை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரதீப்பின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறு தொழில் குறித்து பெண்களுக்கு பயிற்சி நடந்தது. கரூர்
    • பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    கரூர்

    தரகம்பட்டி அருகே உள்ள வரவணை ஊராட்சி மற்றும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிறந்தநாள் கேக், முறுக்கு, பிஸ்கட் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து சிறு தொழில் பயிற்சி நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான சிறு தொழில் பயிற்றுனர் திருச்சி பொன்செல்வி கலந்து கொண்டு பயிற்சிகள் அளித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதன் மூலம் தன்னிறைவு பெற்ற குடும்பங்கள் உருவாகி நிலையான வருமானம் மற்றும் நீடித்த வளர்ச்சி அடைந்து சமூகத்தில் மறுமலர்ச்சி உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற செயலாளர் வீராச்சாமி, பசுமைக்குடி தன்னார்வலர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×