என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டு நலப்பணித் திட்ட விழா
    X

    நாட்டு நலப்பணித் திட்ட விழா

    • கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா நடைபெற்றது
    • நாட்டு நலப்பணித் திட்டம் குறித்தும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் மாணவிகளிடையே எடுத்து கூறப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உப்புபாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மனோ சாமுவேல் தலைமை வகித்தார். கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் முன்னிலை வகித்தார். கல்லூரின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் விழாவினை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரி உதவி பேராசிரியர் விவேக் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித் திட்டம் குறித்தும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் மாணவிகளிடையே உரையாற்றினார்.நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கீர்த்தி தேவி, ராகவி, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×