என் மலர்
கன்னியாகுமரி
- முகாம்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட் டவர்கள் வசித்து வருகிறார் கள்.
- முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்கள் தங்களுக்கு வீடுகள் கட்டிதர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கொட்டாரம் பெருமாள்பு ரம், பழவிளை, ஞாரான்விளை, கோழிபோர் விளை ஆகிய 4 இடங்களில் இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாம்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட் டவர்கள் வசித்து வருகிறார்கள்.
இதில் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெருமாள்புரம், பழவிளை ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு போதிய குடியிருப்பு வசதி கள் இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வந்த
னர். இதைத்தொடர்ந்து இந்த முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்கள் தங்களுக்கு வீடுகள் கட்டிதர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக கொட்டாரம் பெருமாள் புரத்தில் உள்ள முகாமில் ரூ.4 கோடியே 64 லட்சம் செலவில் 80 வீடு களும், பழவிளையில் ரூ.4 கோடியே 14 லட்சம் செலவில் 72 வீடுகளும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய் துள்ளது.
இதைத்தொடர்ந்து கொட்டாரம் பெரு மாள்புரத்தில் இலங்கை தமிழர்களுக்கு 80 புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி தொடக்க விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட வுள்ள இலங்கை தமிழர்களுக் கான புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களி டம் கூறியதாவது:-
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் உள்ள பெருமாள்புரத்திலும், ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதியிலுள்ள பழ விளையிலும் இலங்கை வாழ் மக்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 152 வீடுகள் ரூ.9 கோடியில் கட்ட தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 152 குடும்பங்கள் பயன்படும் பயன்பெறுகிறது.
இலங்கை அகதிகள் அவரது சொந்த ஊருக்கு செல்வது தொடர்பாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். விருப்பம் தெரி விப்பவர்கள் அயல்நாட்டு தமிழர் வாழ்துறை மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அகதிகள் முகாம்களில் வளர்ச்சி பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. உட் கட்டமைப்புகளும் செய்து வருவதால் அங்கு உள்ள அகதிகள் முகாம்கள் திருப்தி கரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தக அணி மாநில இணை செயலாளர் வக்கீல் தாமரைபாரதி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
- ரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குழித்துறை, கோதையாறு பகுதிகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தொடர் மழையால் மேற்கு மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் சானல்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்புகளையும் வெள் ளம் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து பொது மக்களை பாதுகாத்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து போலீஸ் துறையை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தனர்.
நாகர்கோவிலுக்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினரை குமரி மாவட்டத்தில் ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் முன்னேற்பாடு பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
- நாளை வரை நடக்கிறது
- முகாமினை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார்.
மார்த்தாண்டம், நவ.24-
சாமியார்மடம் ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் குழந்தை இல்லா தம்பதியருக்கு இலவச மருத்துவ முகாம் ரத்னா நினைவு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடாந்து நாளை (25-ந்தேதி) வரை நடக்கிறது. முகாமினை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார்.
முகாமானது தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாமில் மருத்துவ ஆலோசனை, விந்தணு பரிசோதனை, ஸ்கேன் ஆகியவை இலவச மாக செய்யப்படும். மேலும் ரத்த பரிசோதனைகள், ஐ.யு.ஐ., ஐ.சி.எஸ்., ஐ.வி.எப். போன்ற மேல்சிகிச்சைகள் சலுகை கட்டணத்தில் செய்யப்படும்.
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் குழந்தை இல்லா தம்பதிகள் ஏற்கனவே மேற்கொண்ட பரிசோத னைகளின் முடிவுகள் மற்றும் சிகிச்சை விவ ரங்களை கொண்டு வரு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. இந்த இலவச முகாமில் கலந்துகொண்ட பெண்களுக்கு ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மைய இயக்குனர் டாக்டர் சாந்தி மகிழன் மற்றும் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் ரத்னா நினைவு மருத்துவமனையில் அடிப்ப டை பரிசோதனைகள், கருக்குழாய் அடைப்பை கண்டறிதல், லேப்பிரோஸ் கோப்பி, ஹிஸ்டி ரோஸ்கோப்பி மூலம் கருக்குழாய் அடைப்பை சரி செய்தல், கருமுட்டையை வளர செய்து கண்காணித் தல், விந்தணு பரிசோதனை, உறைநிலையில் விந்தணுக் களை பதப்படுத்து தல், கரு பதப்படுத்துதல், விந்து மீட்பு உட்பட பல்வேறு வகையான சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.
- தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது.
- சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது.
தக்கலை, நவ.24-
தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. கன மழையின் காரணமாக உதயகிரி கோட்டை பகுதி யில் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது. மேலும் மான்கள் நின்று கொண்டிருக்கும் பகுதி யிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு நின்ற மான்கள் கடும் அவதிக்கு ஆளானது. சிறுவர் பூங்காவிலும் தண்ணீர் புகுந்து சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் அந்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது. மான்களில் நின்று கொண்டிருக்கும் பகுதியில் இருந்து தண்ணீர் மட்டும் சிறிது வடிந்துள்ளது. ஆனால் அந்த பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சிறுவர் பூங்கா மற்றும் செல்பி பாயிண்ட் பகுதியில் தண்ணீர் வடியாத நிலை யிலேயே இருந்து வருகிறது. இன்று காலையில் உதயகிரி கோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
ஆனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். உதயகிரி கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே உடனடியாக உதயகிரி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மாற்ற நடவ டிக்கை எடுப்பதுடன் நிரந்தரமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண் ணம் வடிகால்களை அமைத்து சீரமைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
- நாளை மறுநாள் ஏற்றப்படுகிறது
- கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாளை மறுநாள் (26-ந்தேதி) மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி அங்கு ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அம்மனின் பாதத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபம் விடியவிடிய எரிந்து கொண்டே இருக்கும். கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.
- கலெக்டரிடம் புகார்
- 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் கீழ்குளம் ஆனான் விளையை சேர்ந்தவர் ரெங்கபாய் (வயது 70). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை என் சகோதரிக்கு சொந்தமான நிலத்தை எனக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். தற்போது 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.
இதுதொடர்பாக நில அபகரிப்பு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நிலத்தை வேறொரு நபர் பெயரில் மீண்டும் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னிடம் வெட்டுகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது தொடர் பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடக்கிறது
- தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், தக்கலை தலைமை தபால் நிலையம், அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, அருமனை, ஆசாரிபள்ளம், அழகியபாண்டியபுரம், அழகப்பபுரம், பூதப்பாண்டி, குளச்சல், ஈத்தாமொழி, இடைக்கோடு, களியக்காவிளை, கன்னியாகுமரி, காப்புக்காடு, கருங்கல், காட்டாத்துறை, கொல்லங் கோடு, கோட்டார், கொட்டாரம், குலசேகரம், குழித்துறை, மணவா ளக்குறிச்சி, மார்த் தாண்டம், மேக்காமண்டபம், முளகுமூடு, நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதி, நாகர்கோவில் டவுண், நாகர்கோவில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், நெய்யூர், பாலப்பள்ளம், பளுகல், புதுக்கடை, புத்தளம், எஸ்.டி.மாங்காடு, சுசீந்திரம், திக்கணங்கோடு, திருவிதாங் கோடு, வெட்டூர்ணிமடம், வடிவீஸ்வரம் உள்ளிட்ட 40 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
காலை முதல் மாலை வரை இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவை தொடர்பான ஏதேனும் புகார்களுக்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், 04652-232032, 232033 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழித்துறை அரசு ஆஸ்பத்திரியையும் பார்வையிட்டார்
- பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்கேன் மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொறுப்பு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவி னர் நாகர்கோவில், மார்த் தாண்டம் ஸ்கேன் மையங் கள், குழித்துறை அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங் களில் ஆய்வு செய்தனர். இதில் ஸ்கேன் மையங்களுக்கான லைசென்சு நகல் ஸ்கேன் மைய நுழைவிடத் தில் பார்வையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் முதல் தளத்தில் ஸ்கேன் அறையின் அருகேயே நோயாளிகளுக்கான கழிவறை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டது. 'படிவம் எப்' முறையாக பராமரிக்கப்பட வேண்டும் ஸ்கேன் மையத் தில் இடவசதி குறைவாக இருப்பதால் தக்க நடவ டிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்க வேண் டும் என்று அதன் பணியா ளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொது கழிவுநீர் வெளியேற்ற பொதுப்பணித் துறை மற்றும் குழித்துறை நகராட்சிக்கு தக்க அறிவுரை கூறுவதாக கலெக்டர் உறுதி அளித்தார். மேலும் அரசு மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றின் எண்ணிக் கையை உயர்த்த வலியுறுத்தி னார்.
பின்னர் அங்கு அனைத்து மருத்துவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆஸ்பத்திரியின் செயல்பாடு களை முன்னேற்றவும், அனைத்து ஸ்கேன்களையும் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தினார். பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
- காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51). இவர் குமாரபுரம் சந்திப்பில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பிரபாகர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தார். அப்போது ஆவரை குளத்தை சேர்ந்த ரவிக்குமார் (45), ராபர்ட் (40) ஆகிய இருவரும் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது பிரபாகரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ரவிக்குமார், ராபர்ட் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில் பிரபாகர் கடையை பூட்டிவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம்- கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரவிக்குமார், ராபர்ட் இருவரும் பிரபாகர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் அவரிடம் தகராறு செய்ததுடன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து கீழே தள்ளியதுடன் பிரபாகரை கையால் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பிரபாகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294(பி), 329, 506(2) ஐ.பி.சி. ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவிக்குமார் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் பாசன குளங்களின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். தக்கலை, மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, சிற்றாறு பகுதிகளில் நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்யத்தொடங்கியது.
இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். தக்கலை, திருவட்டார், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணையில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
4 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வள்ளியாறு, பரளியாறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆறுகளிலும், சானல்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களை சூழ்ந்தது. திக்குறிச்சி பகுதியில் விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வாழை, மரவள்ளி கிழங்கு, காய்கறி பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. முன்சிறை பகுதியில் குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மழைக்கு நேற்று ஒரே நாளில் 13 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடும், கல்குளம் தாலுகாவில் 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 4 வீடுகளும் மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதயகிரி கோட்டை பூங்காவில் தேங்கி இருந்த தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.02 அடியாக உள்ளது. அணைக்கு 611 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 509 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது. அணைக்கு 586 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 526 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 52 கன அடி தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகிறார்கள்.
முக்கடல் அணையின் நீர்மட்டம் 25 அடி எட்டி நிரம்பி வழிகிறது. அணையிலிருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- மாணவியை பார்த்து அரசு பஸ் டிரைவர் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது
- மாணவியின் தந்தை திங்கள்சந்தை டெப்போ மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.
இரணியல் :
இரணியல் அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்ற மாணவி மாலையில் தக்கலை வழியாக மண்டைக்காடு செல்லும் அரசு பஸ்ஸில் முன் பக்கத்தில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவியை பார்த்து அரசு பஸ் டிரைவர் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது.
இது குறித்து மாணவியின் தந்தை திங்கள்சந்தை டெப்போ மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
- மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.
நாகர்கோவில் :
மருங்கூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 6-வது நாள் சூரசம்காரம் நடந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு விழா மயிலாடி நாஞ்சில் புத்தனாறு கால்வாய் அருகே ஆராட்டு மடத்தில் உள்ள படித்துறையில் வைத்து நடைபெற்றது.
இதற்காக சுப்ரமணியசாமி நேற்று மாலை 4 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு நடந்தது. மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.
நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, செயல் அலுவலர் அம்புரோஸ், துணைத்தலைவர் சாய்ராம், மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விஜய்வசந்த் எம்.பி., ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்ரமணியம், பொதுச்செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, மருங்கூர் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் சீனிவாசன், மயிலாடி பேரூர் பா.ஜனதா தலைவர் பாபு, மயிலாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பெருமாள், பேரூர் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மணிகண்டன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாமா கண்ணன், அன்ன சுமதி சுதாகர், மயிலாடி தே.மு.தி.க. பேரூர் செயலளார் மூர்த்தி, சிவம்கல் தொழிலக நிறுவனர் முருகேசன், சுதன் கல்பாலிசி நிறுவனர் சுதன் உள்பட பக்தர்கள் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுப்ரமணிசாமி மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.






